தனித்த உலகொன்றை சமைக்கையில்
உடனிருந்தாய் நீ
கூடவேயிருப்பேனென மொழிந்தாய்
கரம்பற்றி காதலுரைத்தாய்

உனது கூடு
உனது குஞ்சுகள்
உனது வானமெனும்
அடைவை எய்தும்போதெலாம்
தஞ்சம் புகுந்த
பறவையதை மறந்து
சிறகுகளை அகல விரித்து
பறக்கிறாய் எங்கெனும்

அது குஞ்சோடும்
ஆறாத காயங்களோடும்
அலகினால் பொறுக்கும்
நெல்மணிபோல
சிறுக சிறுக
காதலை சேமிக்கும்
விட்டுப்பறந்த இடத்தில்
காத்திருக்கும்
காதலை ஓயாது கூவும்….!!!

Comments

2 comments

2
ketheeswaran
நல்லதொரு கவிதை. சிலநேரங்களில் தான் இப்படியான உச்சநிலையை எய்தமுடியும். ஆனால் அனாரின் கவிதைச் சாயல் அல்லது அந்த நினைவு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. வாழ்த்துக்கள் ஸர்மிளா ஸெய்யித்.
Priya
பறவையின் வாழ்வியலை லாவகமாகக் கையாண்டு அர்த்தம் பொதிந்ததொரு கவிதையை படைத்துள்ளீர்கள் ஸர்மிளா! உங்களது கவிதைகள் ஒவ்வொன்றிலும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காணமுடிகிறது. கவிப்பயணம் தொடர மனப்பூர்வமான பிரார்த்தனைகள்!!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.