'எங்ககூட விளையாடவேண்டாம்
உங்க பேச்சுக் காய்' என்று
பொம்மைகளைப் எடுத்துக்கொண்டு
பிரிந்து போனார்கள் இவர்கள்...

கொஞ்சநேரம் கழித்து
கூடிப் பேசிவிட்டு,
'பொம்மைகளைத் தராவிட்டால்
நாங்களும் காய்தான்...' என்று
அதிரடியாய் அறிவித்தார்கள் அவர்கள்...

நாளைக்கு நாமெல்லாம்
யார்கூட விளையாடுவதென்று
நாலைந்துபேர் சேர்ந்து
நல்லதுகெட்டதை அலசினார்கள்...

அடுத்தநாள் விளையாட்டை
ஆளுக்கொரு பக்கமாய் விளையாட,
தெருச் சிறுவர்கள் சிலரும்
'வரட்டுமா?' என்றார்கள்...

ஆனால்,
கருக்கலில் பார்த்தால்
கூடிக்கிடந்த பொம்மைகளுக்கு மத்தியில்
அவர்களைத் தோளோடு
இவர்கள் அணைத்தபடி, 
காக்காய்கடி கடித்துக்
கள்ளமாங்காய்
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்...

இங்கே,என்னதான் நடக்கிறதென்று
அந்தக் குழந்தைகளிடம் கேட்டேன்...

இது,
அரசியல் விளையாட்டென்று சொல்லி
அதிர வைத்தார்கள்! 

More articles by சுந்தரா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.