வடைகள்  சுட்டுத் தர பாட்டி இல்லாத
வீட்டில் -
அவள் திவசத்துக்கு வாங்கிவைத்த
வடைகளைக் கண்டு
'பாட்டி வடை சுட்ட கதை'
நினைவுக்கு வருகிறது
குழந்தைக்கு

*************************************

காக்கைக்கும்
காக்கை மூலம் நரிக்கும்
கொடுப்பதற்கென்று
வடைகளில் ஒன்றைப்
பால்கனியில் வைத்து
காத்திருக்கிறது குழந்தை

***************************************

வெகுநேரம்  காத்திருந்தும்
வராத காக்கைக்கென
வடையை 
பிரிட்ஜில் பத்திரப் படுத்தும் குழந்தைக்கு-
இதுதான் நரியென்று காட்டுகிறாள் அம்மா
டிஸ்கவரி சேனலில் மேய்ந்து கொண்டிருக்கும்
ஓநாயை-

******************************************

நாளையேனும் காக்கை வருமென்ற
நம்பிக்கையில்
உறங்கச்செல்லும் குழந்தைக்கு மீண்டும்
சொல்லபடுகிறது...
பாட்டி வடை சுட்ட கதை...

*********************************************

அன்றைய கனவில்
காக்கையும் நரியும் பாட்டியும்
வடையைப் பங்கிட்டுத்
தின்றனர்.....
குழந்தைக்கும்   கொஞ்சம்
பிட்டுக் கொடுத்து!

Comments

2 comments

2
அன்புச்செல்வன்
munnetram therigirathu. Appa kavithayin moli nadayum ikavithayin nadayum oppittu paarkayil nalla munnetram therigirathu. thodarattum. Melum kulanthaigalin ulagam kuritha puirithalum atahi pattriya pathivum inraya thevaigalil ondru. Ikkavithayil Athu Kai Koodiyullathu.

anbudan
anbu.
kayal
very nice swathi. ithu hema kita kathukitatha

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.