முற்றத்து கல்குறட்டில் 
புளி நறுக்கும் அம்மா சொல்கிறாள் 
'குளிக்கவே பிடிக்கலை'என்று.
வேப்பம்பூ ஆயும் பாட்டி,
தீட்டு நின்னவுடன் எனக்கும் அப்படித்தான் இருந்தது 'என.
புத்தகத்தில் இருந்து திரும்பி பார்க்கிறேன்,
'நான் என்ன ஆக போகிறேன் ?'

- இந்திரா பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It