மழை வரும்
நாட்களில் மட்டும்தான்
உன்னைச் சந்திப்பதென
முடிவெடுத்த பிறகு
வானம்
மேகமூட்டத்துடனேயே இருக்கிறது
மழைக்கான அறிகுறியுடன்..
-----------
ஆதி நாட்களிலும்
முந்தைய நாட்களிலும்
அதற்கு பிறகான நாட்களிலும் கூட
மாறாதிருக்கிறது
புழங்கப்படாத நேசத்தின்
மீதான வலி..
-------------
உன்னைப் பற்றி
எழுதுகையில்
தேர்ந்த வார்த்தைகளை
தேடுவதில்லை நான்..
உன்னை எழுதும்
எல்லா வார்த்தைகளும்
தேர்ந்தவையாகிவிடுகின்றன..
------------------------

நிறைத்திருக்கிறாய்
நிறைந்திருக்கிறாய்

காணக் கிடைக்கும்
அத்துணை காட்சிகளிலும்

கேட்கக் கிடைக்கும்
அத்துணை மொழியிலும்

பேசக் கிடைக்கும்
அத்துணை வார்த்தைகளிலும்

உணரக் கிடைக்கும்
அத்துணை உணர்வுகளிலும்
மட்டுமின்றி

உன்னைச் சந்திக்கக்
கிடைக்காத வாய்ப்புகளிலும் கூட..

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

4 comments

4
pmahalakshmi
nesipadhum nesikapaduvadhum manidha vazhkaiyin iyalbu.

nesithalil valli varuma yenna. nesam valli tharaadhu vazhkaiyai tharum .

un nesam vaarthaigalai thoduthu maalaiyaga maari irukiradhu . vaadamal

irukattum indha (malar)maalayin manam, un varthaiyin payanam

thodarattum.

nesamudan

prabhumahalakshmi
ki.charles
Arumai
இவள்
தங்கள் கருத்துகளுக்கு நன்றி..
வி.களத்தூர் நிலாப்ரியன்
தங்கள் கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன. நான் மிகவும் விரும்பி படிக்கிறேன். உங்கள் கவிப்பயணம் தொடர எனது வாழ்த்துகள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.