சாவிக் கொடுத்து ஓடி நின்ற
பொம்மையாய்
அலுவல் முடிந்து வீட்டிற்குள்
நுழைகையில்
கட்டி அணைக்க வருகிறான்
அன்பு மகன்.
அழுக்காய், வியர்த்துப்போய்
இருக்கிறேன்;
குளித்து விட்டு வருகிறேன்
என்றேன்;
அணைத்தக் கைகளை
விலக்கிய படி !
சற்று நேரத்திற்குள்...
குனிந்த தலை நிமிராமல்
வீட்டுப் வீட்டுப் பாடத்திற்குள்
மூழ்கி விட்டான்.
ஆசிரியர் கொடுத்த சாவியின் படி !
-எஸ்.எஸ்.ஜெயமோகன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.