நாட்டு நடப்பே தெரியாத அம்மாவா இருந்திருக்கேயே தாயே....

லேடியா ? மோடியா?ன்னு கேட்டவங்களையே 75 நாள் படுக்க வைத்திருந்து பரலோகம் அனுப்பிய நாடு இது....

3% கும்பலில் நாடே அல்லோலகலோப்படும் போது ......

fathima and her motherஅல்லக்கைகளின் ஆட்சியில் நீ பாதுகாப்பு தேடுவது அறிவாளித்தனமா...?

இங்கு அத்தனையும் காற்று ஊதிய பலூனாட்டம் ஆடிக் கொண்டுள்ளது அந்தரத்தில்....

டாஸ்மாக் பாட்டிலும் - சாதி, மத வெறி அரசியலும் கோலோச்சுகிறதே...

கோவில் அர்ச்சக ஐயரின் மனைவிகள் ஆத்துல நண்டு சமைக்கும் போது...

சூத்திரத் தலைவர்களின் மனைவிகள் கோமாதா சூத்தை கும்பிடுவதைப் பார்த்தாவது நீ IIT-க்கு அனுப்பாமல் 'அவாளா'ட்டம் வெளிநாடு அனுப்பியிருக்கனும்...

நாங்க 'கோ பேக் மோடி'ன்னும்... 'பெரியார் மண்'ணுன்னும்... கத்தியதைப் பார்த்து நம்பிட்டியே....

இப்பவும் மத அரசியல் தான் செய்கிறோம்..!

இல்லையென்றால் IIT நிர்வாக முறை, கல்விமுறை, தனி மதிப்பெண் (Internal Mark) போடும் முறையையும், அதை செயல்படுத்தும் துறைத் தலைவர்களின் 'கிரிமினல் மனநிலை'யையும் அல்லவா பேசியிருப்போம்...

மருத்துவ நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கூட நீதியரசர்கள் மாணவர்களை (பணக்கார அப்பன்களுக்குப் பிறந்த முட்டாள்களை) குடும்பத்தாரைத் தானே சிறையில் வைத்துள்ளார்கள்... வழிகாட்டிய ஆட்சியாளர்களை இல்லையே.

நாம் தான் ஒரு வழி செய்தாக வேண்டும்...

அரசு கட்டமைப்பு அப்படி.

இந்த அரசு கட்டமைப்பைத் தகர்க்காமல் இதற்குள்ளேயே தீர்வு சொல்பவனை நம்பியதால் வந்த நிலை தான் இது....

ஆகவே சூத்திர மக்களே 'கரசேவை'க்கு தயாராகுங்கள் IIT, IIM நிறுவனங்கள் மட்டுமல்ல, பாராளுமன்றமும் - 'பாபர் மசூதி' போலத் தான்.

இப்போதைக்கு இடிக்கலாம்... பின்பு நமக்கானதை நாமே கட்டியமைப்போம்.

- தருமர், திருப்பூர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.