தொடர்புடைய படைப்புகள்

தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்காக சமர்க்களம் கண்டு விதையுண்ட மாவீரர்களுக்குச் செவ்வணக்கம்!

தமிழீழ மக்களின் விடுமை வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் தமிழீழத் தனியரசு ஒன்றே வழி என்ற மக்கள் கட்டளையைத் தலைமேற்கொண்டு, விடுதலைக் குறிக்கோளில் உறுதியான நம்பிக்கையுடன் வரலாறாகிப் போன பல்லாயிரம் மாவீர்ர்களை நெஞ்சிலேந்துவோம்!

உணவும் நீருமின்றி உயிர்வாழ முடியாது என்பது போல் விடுதலையின்றியும் உயிர்வாழ முடியாது என்ற தமிழீழ மக்களின் வரலாற்று வேணவாவை மெய்ப்படச் செய்திட தம்முயிர் தந்த மாவீர்ர்களை வணங்குவோம்!

ஈழம் என்ற சின்னஞ்சிறு தேசத்தை பன்னாட்டுலக அரங்கில் பேசுபொருளாக்கியது மாவீர்ர்களின் ஈகம்! சிங்களப் பேரினவாத்ததுக்கும் இந்தியப் பேரரசியத்துக்கும் அனைத்துலக நாட்டாண்மைகளுக்கும் அறைகூவலானது மாவீரர்களின் வீரம்!

மாவீரர்களை வணங்குவதில் தமிழீழ மக்களுடனும் உலகத் தமிழர்களுடனும் விடுதலையை நேசிக்கும் அனைவருடனும் இணைந்து கொள்கிறோம்!

புவிக் கோளத்தின் கண்டங்களெங்கும் நாடுகள் தோறும் விடுதலைக்காகவும் நீதிக்காகவும் மாற்றத்துக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் போராடும் அனைத்து மக்களுடனும் நம் மாவீரர்கள் பெயரால் தோழமை கொள்வோம்! குர்து தேசமும் காசுமீரமும் பாலத்தீனமும் தமிழீழம் போலவே நம் மனத்துக்கு நெருக்கமானவை! அரசுகளற்ற தேசங்களின் அணிவகுப்பு புதிய உலகு சமைக்கப் போகும் மெய்ந்நடப்பு நோக்கி முன்னேறுவோம்!   

- தியாகு

Comments

1 comment

1
குமரன்
விடுதலைப்புலிகள் சொல்லுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை விட செயலுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள் தமிழ் ஈழ நடைமுறை அரசு பன்னாட்டு கூட்டுச் சதியால் அழித்தொழிக்கப்பட்டபோது புலம்பெயர் தமிழர்கள் தங்களின் சக்திக்கேற்ப நாடுகடந்த தமிழ் ஈழ அரசு என்ற புதிய கோட்பாட்டை என்பதை உருவாக்கி பன்னாட்டு அடக்குமுறைகக்குள்ளும் அதை செயல்படுத்த முனைகின்றார்கள் அமெரிக்காவில் இருந்து கொண்டு அதன் தலைமை அமைச்சர் அமெரிக்காவுக்கு எதிராக எப்படி செயல்படுவது இது கள நிலவரம் ஆனால் தமிழகத்தில் நிலவரம் அப்படியல்ல இது தமிழர்களின் சொந்த பூமி அவர்களுக்கு அதில் முழு அதிகாரம் உண்டு எனவே சொல்வதை விடுத்து செயலில் இறங்குங்கள் ஐக்கிய நாடுகள் அவை என்ற அமைப்பை போன்று "ஐக்கிய நாடுகள் அற்ற தேசங்களின் அவை" என்ற பன்னாட்டு அமைப்பை உருவாக்கி அதை செயல்படுத்த முனையுங்கள் இதற்கு தமிழர்களாகிய எங்களுக்கு மூத்த குடிகள் என்ற முழு அதிகாரம் உண்டு இதற்கு யாருக்கும் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் எமக்கு இல்லை நாமே உலகத்திற்கு வழிகாட்ட வேண்டும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.