பகைசான்றஇனமாய்வாய்த்த
பார்ப்பனியத்திமிர்அழித்த
தகைசான்றநீதிக்கட்சி
தலைவருள்பன்னீர்செல்வம்
மிகைஆர்வம்படிப்பில்கொண்டே
மேல்நாட்டில்படிக்கப்போனார்
நகைசிந்தும்பண்பால்தஞ்சை
நகர்மன்றத்தலைவர்ஆனார்
பாராளக்கற்றவெள்ளைப்
பரங்கியர்ஆண்டநாளில்
ஏராளப்பதவிபட்டம்
இவர்பெற்றார்; எளியோர்க்கெல்லாம்
தாராளஉதவிசெய்யத்
தன்வாழ்வைஈந்தார்; நம்மின்
போராளிபெரியார்கைவாள்
போல்இவர்சுழன்றுவாழ்ந்தார்
ஆளவந்தார்கள்இந்தி
ஆளவேபார்த்தார்; அந்த
நாளிலேசிறையில்அய்யா!
நம்பன்னீர்தலைவர்! தன்னின்
தோளுக்கன்(று) இட்டமாலை
தூய்தாடிப்பெரியார்தம்மின்
தாளுக்கேஇட்டார்; செல்வம்
தமிழர்தம்நெஞ்சைத்தொட்டார்
இமைமூடாதுழைத்தசெல்வம்
இலண்டனுக்கழைக்கப்பட்டார்
"அமைச்சரின்ஆலோசனையர்'
பணியேற்கப்பணிக்கப்பட்டார்
எமனாகவாய்த்த(து) அந்தோ
இவர்சென்றவானஊர்தி!
நமையெல்லாம்தவிக்கவிட்டார்
நடுக்கடலில்உயிரைவிட்டார்!
– தமிழேந்தி