1. மொழியியல் சொற்பெருக்கம்

மொழியில் சொற்பெருக்கம் இரண்டு வழிகளில் நடைபெறுகின்றது. அவையாவன:

1. கடனாகச் சொற்களைப் பெறுவதின் வழியாக

2.புதிய சொற்களை மொழியில் உற்பத்தி செய்வதின் வழியாக. இவ்விரண்டு வழிகளுமே சொற்பெருக்கத்திற்கு அடிப்படையாக விளங்கு கின்றன.

1.1 கடன் பெறுதல் (Borrowing)

மொழிகள் பிற மொழிகளோடு தொடர்பு கொள்ளும்போது அம்மொழிச் சொற்களைக் கடனாகப் பெறுகின்றன. அதாவது கடன் வாங்கு வதின் மூலமாக தம் மொழியில் இல்லாத சொற்கள் பெறப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. பின்னர் காலப்போக்கில் அது கடன் சொல் என்று இனம் காண முடியாத அளவுக்கு அச்சொல் மொழியில் கலந்துவிடக்கூடும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடனாகப் பெறப்பட்ட வடமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் உள்ளன. சாதாரண மக்கள் மட்டுமின்றி படித்த மக்களுக்கேகூட அவை கடன் சொற்கள் என்று இனம் காணமுடியாமல் போய் விடுகின்றன. கல்லாதவர்கள் அந்தப் பிரக்ஞை இல்லாமலே சொற்களைப் பயன்படுத்துகின்றனர். நமது நாட்டுப்புற இலக்கியங்களில்கூட கடன் சொற்கள் கலந்திருப்பதைக் கவனிக்கலாம். பழந் தமிழ் இலக்கியங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவற்றிலும் கடன் சொற்கள் கலந்துள்ளன.

1.2 கடன்பெறுதல் -

மொழி அமைப்பில் மாறுதல்கள்

பிறமொழிச் சொற்களைத் தடையின்றித் தாராளமாக கடனாகப் பெறுவதால் கடன்பெறும் மொழியின் மொழி அமைப்பில் மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது அம்மொழியின் ஒலி அமைப்பிலும், சொல் அமைப்பிலும், தொடர் அமைப்பிலும் கடன் தரும் மொழியின் ஒலிக் கூறுகள், சொல்லுருவாக்க உருபன்கள், தொடர மைப்புகள் தாக்கங்களை ஏற்படுத்திப் புதிய அமைப்பைத் தோற்றுவிக்கலாம். வடமொழிச் சொற்களைக் கடன் பெற்றதால் இன்றைய

தமிழில் ஸ, ஷ, ஹ, க்ஷ போன்ற உபரி ஒலியன்கள் புகுந்துள்ளன. அவை மொழி முதலிலும் இடையிலும் சொற்களில் இடம்பெறுகின்றன.

ஸர்ப்பம் - ஹாரம்

சரஸ்வதி - ஆஹாரம்

போலீஸ் - காக்ஷி

விஷம் - க்ஷமம்

ரமேஷ் - ஜவுளிக்கடை

ஷங்கர்ரா - ஜாத்தி

ஹரி  - ராஜாஜி

பொதுவாக வல்லின எழுத்துக்கள் (க, ச, த, ப, ட, ற) சொல்லின் இறுதியில் வருவதில்லை. இது தமிழ் மொழியின் ஒலியன் அமைப்பாகும். ஆனால் கடன் சொற்களின் விளைவாக இவ்வெழுத்துக்கள் இறுதியில் இடம்பெறுகின்றன.

கோர்ட் - போனஸ்

கப்ஸ்டி - ரைக்

ஸ்டாம்ப் - பட்ஜெட்

பந்த்

ட, ல, ர ஆகிய மெய்யெழுத்துக்கள் மொழி முதலில் வராது. ஆனால் கடன் சொற்களில் இத்தகைய விதி மீறப்படுகின்றது.

லாரி -  ரேஷன்

டீ  - லாட்டரி

டீச்சர்  - ரேடியோ

இவை யாவும் கடன் சொற்களை ஆள்வதால் மொழியின் ஒலியமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங் களாகும். இவ்வாறே உருபனியல், தொடரியல் அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படும்.

1.3 கடன்தரும் மொழியின் ஒலிகளைத் தவிர்த்தல்

சொற்களைக் கடனாகப் பெறும்போது அவை கட்டுப்பாடில்லாமலும், சில வேளைகளில் கட்டுப்பாட்டுடனும் கையாளப்படுகின்றன. கட்டுப் பாட்டுடன் பயன்படுத்தும்போது பிறமொழிக் கூறுகள் தவிர்க்கப்படுகின்றன. பிறமொழிக்கே உரிய எழுத்துக்கள் தவிர்க்கப்படலாம். மேலே வடமொழிக்கேயுரிய ஒலிகள் உபரி ஒலியன் களாகத் தமிழில் வந்து வழங்குகின்றன என்று குறிப்பிட்டோம். அவ்வொலிகள் தவிர்க்கப்பட்டு அவற்றிற்குச் சமமாக அல்லது கிட்டத்தட்ட சமமாக இருக்கிற தமிழ் ஒலிகள் வடவெழுத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும். இதனை phonological nativization என்பர் மொழியியலாளர்.

போலீஸ்         போலீசு           (ஸ்ழூசு)

விஷம்             விடம்              (ஷழூட)

ஆஹாரம்        ஆகாரம்           (ஹழூகா)

பஜார்              பசார்               (ஐழூச)

nக்ஷமம்           சேமம்              (க்ஷ்ழூச)

ஹரி                 அரி                  (ஹழூஅ)

1.4 கடன்தரும் மொழியின் சொற்களைத் தவிர்த்தல்

சில வேளைகளில் கடன் தருகின்ற மொழியின் சொற்கள் தவிர்க்கப்படும். அச்சொற்களுக்கு இணையான புதிய சொற்கள் உருவாக்கப்படும். அவ்வாறு உருவாக்கப்படும் புதிய சொல் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொல்லாக இருக்கலாம். அல்லது வட்டார வழக்குகளிலிருந்தோ, பழைய (மூதாதையர்) மொழியிலிருந்தோ கடனாகப் பெறப்பட்டு புதிய பொருளில் பயன்படுத்தப்படலாம்.

சுனாமி               கடல்கோள், ஆழிப்பேரலை

ரேடியோ         வானொலி

பைலட்            வலவன்

ஏரோப்ளேன்   வான்வூர்தி

ட்ரெயின்         புகைவண்டி, புகைரதம், (இலங்கை)

போலீசு           காவலர்

மொபைல்        கைபேசி, செல்லிடப்பேசி, செல்பேசி

கடன் பெறுதல் (borrowin) மொழியில் காணப்படுகின்ற இயல்பான விடயமாகும். கடன் சொற்களைப் பெறுவதால் மொழி வளர்ச்சி பெறுகிறது என்று ஒரு சாராரும், மொழி மாசுபடு கின்றது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். கடன் சொற்கள் இல்லாமல் எந்த மொழியும் இருக்க முடியாது என்று கூறலாம். மொழி பேசுவோரின் தேவையை உடனடியாகவோ நீண்ட காலத்திற்கோ கடன் சொற்கள் நிறைவேற்று கின்றன.

1.5 புதிய சொற்கள் உருவாக்குதல் ஆக்கச்சொற்கள் (Derived words)

மொழியில் புதிய சொற்கள் உருவாக்குவதை சொல்லுருவாக்கம் (Word formation) என்று கூறுவர். மொழியில் தனிச்சொற்கள் அல்லது எளிய சொற்கள் உள்ளன. (simple words). இத்தகைய தனிச் சொற் களுடன் ஒன்றிரண்டு உருபுகள் சேர்த்து புதிய ஒரு கலவைச் சொல்லை உருவாக்கலாம் (complex words). ‘பகிர்’ என்ற தனிச்சொல்லுடன் - மானம் என்ற உருபு சேர்க்கப்பட்டு (பகிர்-மானம்) என்ற கலவைச் சொல் உருவாக்கப்படுகிறது.

வரு-மானம்                 படிப்பு

பகிர்-மானம்                நடி-ப்பு

பெரு-மானம்

பங்கு-தாரர்                  கல்-வி

அட்டை- தாரர்              தொழு-கை

உரிமை-தாரர்              செல-வு

கடன்-காரன்               ஓட்ட-அம்

வேலைக்-காரன்

வண்டிக்-காரன்

நகர்-வாசி

குடிசை-வாசி

சிறை-வாசி

நடி-கை

பாட-கி

மேற்கண்ட சொற்களை ஆக்கச்சொற்கள் (derivatives or derived words) என்று சொல்வர். -காரன், -தாரர், -வாசி போன்றவை பின்னொட்டுகளாகும் (suffix). பின்னொட்டுக்களைத் தனிச் சொற்களுடன் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்கலாம் என்பதை இங்கு மனதில் கொள்ள லாம்.

1.6 கூட்டுச் சொற்கள் (Compounds)

இரண்டு தனிச்சொற்கள் சேர்த்தும் ஒரு புதிய சொல் உருவாக்கப்படலாம். அவற்றைக் கூட்டுச் சொற்கள் என்று கூறுவர். நடை என்ற சொல் லையும், பயிற்சி என்ற சொல்லையும் இணைத்து நடைப்பயிற்சி என்ற சொல்லை உருவாக்குகிறோம். மாரடைப்பு (மார்+அடைப்பு) என்ற சொல்லில் இரு சொற்கள் இருப்பதைக் கவனிக்கலாம். இவற்றைக் கூட்டுச் சொற்கள் என்று கூறுவர்.

உடல்நிலை     (உடல் + நிலை)

மூச்சிரைப்பு     (மூச்சு + இரைப்பு)

கட்டாயப்படுத்து (கட்டாயம் + படுத்து)

ஊக்கப்படுத்து            (ஊக்கம் + படுத்து)

இழுபறி (இழு + பறி)

தடியடி (தடி + யடி)

தள்ளுமுள்ளு   (தள்ளு + முள்ளு)

தூரப் பார்வை (தூரம் + பார்வை)

மூக்குக்கண்ணாடி (மூக்கு + கண்ணாடி)

1.7 மாற்றம் (Conversion)

சில சொற்களோடு எவ்வித ஒட்டுக்களோ (affixes) சொற்களோ சேர்க்கப்படாமல், அவற்றை வேறொரு சொல்லாகப் பயன்படுத்த முடியும். அடி என்ற வினைச் சொல்லையே அடி என்ற பெயராகவும் பயன்படுத்த முடிகிறது. பிடி என்ற வினைச் சொல்லையே (ஒரு) பிடி என்ற பெய ராகவும் பயன்படுத்தலாம். வினையே இங்குப் பெயராக மாற்றமடைகின்றது. எந்த ஒட்டுக்களும் இங்குச் சேர்க்கப்படவில்லை. செயல் மாற்றம் (functional shift) மட்டுமே நடைபெறுகின்றது.

உயிர்   -           உயிர்(த்தது)

நரை    -           நரை(த்தது)

புழு      -           புழு(த்தது)

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் பெயர்ச் சொற்களே வினைகளாக மாற்றப்படுகின்றன. இதனையே மாற்றம் (conversion) என்ற கலைச் சொல்லால் குறிப்பிடுவர்.

பொதுவாக தமிழ் மொழியில் மேற்கண்ட முறைகளில் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இனி சொல்லுருவாக்கம் குறித்து தொல்காப்பி யத்தில் காணப்படும் செய்திகளைத் தொகுத்துக் காண்போம்.

2. தொல்காப்பியரின் சொல்லுருவாக்கக் கொள்கைகள்

2.1 வடசொற்கள்- கடன் உருவாக்கம்

வடமொழிச் சொற்களைச் செய்யுட்களிலும் பயன்படுத்தலாம் என்பது தொல்காப்பியர் கொள்கை. செய்யுள் என்பது இலக்கியப் படைப்பு என்ற துறை சார்ந்த பொருள். இத்தகைய இலக்கியப் படைப்பில் வடசொற்களை ஏற்கலாம், அனுமதிக் கலாம் என்பது தொல்காப்பிய எச்சவியல் நூற்பாவிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. வடசொற்களைச் செய்யுள் ஆக்கத்திற்கே பயன் படுத்தலாம் என்று கூறியிருப்பதால் பிற துறை சார்ந்த கலைச்சொல்லாக்கத்திற்கும் அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தலாம் என்பதே அவரது கொள்கையாகக் கருதலாம்.

2.2 வடசொற்களை எவ்வாறு ஏற்க வேண்டும்?

தமிழில் வந்து வழங்கும் வடசொற்களை இரு வகையாகப் பகுக்கலாம். அவை

1.            இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தால் இயன்ற சொல்

2.            வடமொழிக்கேயுரிய சிறப்பான எழுத்தால் இயன்ற சொல்

இவற்றுள் முதல்வகைச் சொற்களைச் செய்யுளில் பயன்படுத்தலாம். இரண்டாம் வகையைச் சார்ந்த சொற்களைச் செய்யுட்கண் பயன்படுத்தலாகா. வடமொழிக்கே உரிய சிறப்பான எழுத்துக்கள் சிதைந்து (தத்பவமாக) வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம்.

கடன் சொற்களை ஏற்று நம் மொழியின் ஒலியமைப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துச் சொற்களை மொழியில் உருவாக்கிக் கொள்ளலாம்.

2.3 தொகைச் சொற்கள் உருவாக்கம்

மொழியின்கண் காணப்படும் இரு சொற் களைச் சேர்த்து தொகைச் சொற்கள் உருவாக்கிக் கொள்ள தொல்காப்பியர் எச்சவியல் சூத்திரங்கள் நமக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன.

ஆறுவகையான தொகைச் சொற்கள்

1.            வேற்றுமைத் தொகை

2.            உவமத்தொகை

3.            வினைத்தொகை

4.            பண்புத்தொகை

5.            உம்மைத் தொகை

6.            அன்மொழித் தொகை

*             தொகைச் சொற்களில் உருபுகள்/சொற்கள் மறைந்துவிடும்.

*             வேற்றுமை உருபும், உவம உருபும், உம் என்னும் உருபும், வினைச்சொல் ஈறும், பண்பு உணர்த்தும் ஈறும் மறைந்துவரும்.

* தொகைச் சொற்கள் வழியாகப் புதிய சொற்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.

*             தொல்காப்பிய இலக்கணக் கலைச்சொற் களில் தொகையாக்கம் (compounding) குறித்து அறிந்துகொள்ளலாம்.

3. கலைச்சொற்கள் உருவாக்கம் கோட்பாடுகள்

“தமிழில் கலைச்சொல் கீழ்க்காணும் இரண்டு முறைகளில் உருவாக்கப்படுகின்றது. அவை 1. சொல் லாட்சி (adoption), 2. சொல்லாக்கம் (coinage) என்பன.

சொல்லாட்சியின் கீழ்

1.            பழஞ்சொற்களை எடுத்தாளுதல்

2.            சொற்பொருள் விரிவு

3.            கிளைமொழி/இனமொழி வழக்கை எடுத்தாளுதல்

4.            மரபுசார் தொழில் சொற்களை எடுத்தாளுதல்

5.            பிறமொழிச் சொற்களை கடன் வாங்குதல்

(பேராசிரியர் இராம.சுந்தரம்)

மேற்கண்ட வழிமுறைகளை அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களும் எடுத்துக்காட்டியுள்ளார்.

*             பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சொற்களை இன்றைய தேவைக்கேற்ப பொருள் கொண்டு பயன்படுத்துதல்.

                சான்று: pilot - வலவன், Aeroplane - வான ஊர்தி

*             தற்கால இலக்கியங்களிலிருந்து சொற் களைப் பயன்படுத்தல்

*             பேச்சு மொழியிலிருந்து தகுந்த சொற் களைப் பயன்படுத்துதல்

                Temple Trustee - கோயில் முறைக்காரர்

                Momory storage - நினைவுக் கிடங்கு

                Small pox - அம்மை, வைசூரி

*             பிறமொழித் துறைச் சொற்களை மொழி பெயர்த்தல்

                photograph - ஒளிப்படம்.

                photosynthesis - ஒளிச்சேர்க்கை

*             புதுச் சொற்களைப் படைத்தல்

                molecule - மூலக்கூறு

                gas - வளியம்

*             உலக வழக்கை அப்படியே ஏற்றுக் கொள்ளல்

                x-ray - x- கதிர்

டாக்டர் வா.செ. குழந்தைசாமி, 2016

4. முடிவுரை

மேற்கண்ட கலைச்சொல்லாக்க கோட்பாடு களையும் தொல்காப்பியரின் சொல்லுருவாக்கக் கோட்பாடுகளையும் ஒப்பிட்டுக் காணும்போது தொல்காப்பியர் குறிப்பிடும் வடசொல் ஆக்கமும், தொகையாக்கமும் கலைச்சொல்லாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.

பார்வை நூல்கள்

  • சுந்தரம், இராம., தமிழ் வளர்க்கும் அறிவியல், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், (2009).
  • குழந்தைசாமி, வா.செ., அறிவியல்தமிழ், பாரதி பதிப்பகம், சென்னை-17 (ஏழாம் பதிப்பு 2006).
  • தொல்காப்பியம் சொல்லதிகாரம்- நச்சினார்க் கினியம், கழக வெளியீடு.

இன்றுதான் பெரியார் அவசியம் தேவைப்படுகிறார்

ஆர்.நல்லகண்ணு

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மதுரை புரட்சிக் கவிஞர் மன்றமும் இணைந்து நடத்திய தோழர். பசு.கவுதமன் எழுதிய ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்’ எனும் நூலின் முன்வெளியீட்டுப் பரப்புரை விழா 19-02-2017 அன்று மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்றது.

புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் தோழர் டி.வரதராசன் வரவேற்புரையாற்றினார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமை தாங்கினார்.

முன்னிலை உரையாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கவிஞர் சண்முகம் சரவணன் இந்நூல் வெளிவர நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

‘செம்மலர்’ மாத இதழ் ஆசிரியர் தோழர் எஸ்.ஏ. பெருமாள் நூல் பரப்புரை குறித்துப் பேசு கையில் இராமானுஜர் காலத்தில் வைணவ மதத்தைப் பரப்பும் முயற்சியில் அனந்த சயனப்புத்தர் சிலைகள் பள்ளி கொண்ட பெருமாள்களாகவும், புத்தர் சிலை களை மகாவிஷ்ணு உருவங்களாகவும் மாற்றப் பட்டன. தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டு களாக மண்சோறு சாப்பிடுதல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் இந்து மதத்தைத் தூக்கி நிறுத்தும் பழக்கவழக்கங்களாக மாறி விட்டது.

இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ் போன்ற மத வெறி அமைப்புக்கள் மறுபடியும் மூடநம்பிக்கை களை முன்வைத்து இயங்கத் தலையெடுத்துள்ளன.

தந்தை பெரியார் ஜாதி, மத வெறிகளுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடினார். தோழர் என்ற சொல்லையே தந்தை பெரியார்தான் உச்சரித்தார். பெரியாரைப் பற்றி உலக அளவில் ஆய்வு அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஒரு முயற்சியாக “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டுமென்ற நூலின் முன்வெளியீட்டு பரப்புரை நிகழ்கிறது.”

தலைமையுரையாக மூத்த தோழர் ஆர். நல்ல கண்ணு பேசுகையில்,

“பொதுவாக நூலை வெளியீடு செய்துதான் பேசுவார்கள். ஆனால் வரப் போகிற நூலுக்கு முன்னதாகவே பரப்புரை செய்யப்படுவதும் அதற்கான பெருவிழாவாக இந்நிகழ்ச்சி நடப்பதும் பாராட்டிற்குரியதாகும்.

நியூ செஞ்சுரி நிறுவனம் பல அரிய நூல்களை இந்த சமுதாயத்திற்கு வழங்கி வருகிறது. பழமை யான நூல்களை மறுபதிப்புச் செய்தும் வெளியீடு செய்து வருகிறது.

இந்த நூல் பெரியாரின் மொழி, கலை, பண் பாடு, இலக்கியம், தத்துவம் குறித்த முழுமையான பதிவுகளை வருடம் என்று குறிப்பிட்டுச் சொன்னால் 1925 முதல் 1973 வரையிலுமான தகவல்களை உள்ளடக்கியதாக வருகிறது.

இன்று நாடெங்கும் மதவெறி சக்திகள் ஆட்சி, அதிகாரம் இவைகளின் துணையோடு ஜாதி வெறி, மூடநம்பிக்கைகளை மக்களிடம் பரப்பி வருகின்றன.

பெரியாரும், தோழர் சிங்காரவேலரும் இணைந்து பொதுவுடைமைக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்வதிலும் செய்வதிலும் ஓயாது உழைத்தார்கள்.

இன்றுள்ள சூழ்நிலைகளைப் பார்க்கும் போது பெரியாரின் கொள்கைகள் காலத்தின் தேவை. உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் ஊர் ஊராகப் போய் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொள் கைகளை மக்களிடம் பரப்பினார்.

பெரியாரின் லட்சியங்கள் காலங்களை வென்று நிற்பது மட்டுமல்ல; இன்றுள்ள சூழ்நிலையில் பெரியாரின் கொள்கைகள் அவசியம் தேவை. சொல்லப் போனால் இன்றுதான் பெரியார் அவசியம் தேவைப்படுகிறார் என்று குறிப்பிட்டார்.

விழாவில் 4000க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய ஐந்து தொகுதிகளும் முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 2000ஐ சுமார் நூறு தோழர்கள் முன்பணமாகக் கொடுத்து பதிவு செய்து கொண்டனர்.

நூல் ஆசிரியர் பசு. கவுதமன் ஏற்புரையாகக் கூறுகையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் ‘உங்கள் நூலகம்’ மாத இதழும் இந்த நூலை உருவாக்குவதில் துணை செய்ததாகக் குறிப்பிட்டார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவன மதுரை மண்டல மேலாளர் திரு. அ.கிருஷ்ணமூர்த்தி, அனைவருக்கும் நன்றி கூறினார்.

தொகுப்பு: ந.பாண்டுரங்கன்

Pin It