(விடுதலைப் போராட்ட வீரர் கோபிச் செட்டிபாளையம் லட்சுமண அய்யர் குறித்த ஆவணப்படம்)

விடுதலைப் போராட்ட வீரர் திரு.ஜி.எஸ். லட்சுமண அய்யர் 1917ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் பிறந்தார். அவர் தந்தையார் ஸ்ரீனிவாச அய்யர், பெரும் நிலக் கிழார். 650 ஏக்கருக்கும் அதிகமான நிலத்திற்குச் சொந்தக்காரர். 1928ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கம் தீண்டாமை ஒழிப்பை அரசியல் திட்ட மாகக் கைக்கொண்ட சமயம் பிராமண அக்ர காரத்தில் உள்ள தனது வீட்டில் தாழ்த்தப்பட்ட மக்களை வரவழைத்து சமபந்தி விருந்து உண்ட தால், பிராமணர்களின் கோபத்திற்கு ஆளாகி ஜாதி புறக்கணிப்புக்கு ஆளானது லட்சுமண அய்யர் குடும்பம். லட்சுமண அய்யர் சகோதரியை இந் நிகழ்வு காரணமாக வாழாவெட்டியாக விரட்டியது அவர் கணவர் குடும்பம். தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையானது அரசியல் வாழ்க்கை, காந்திய கொள்கைகளால் பாதிப்புக்கு உள்ளானபோதும் கொண்ட கொள்கையில் பின்னடைவு இன்றித் தொடர்ந்தது அவர்களது அரசியல் பணி. விடுதலைப் போரில் 4ஙூ ஆண்டுகள் சிறைவாசம், சித்ரவதை என்ற தியாக வரலாறு அவருடையது. லட்சுமண அய்யர் மனைவி லட்சுமி அம்மாளும் சிறைத் தண்டனை அனுபவித்தவர். தீண்டாமை ஒழிப்பு கடைசி மனிதனுக்கும் விடுதலை என்ற நோக்கில் விடுதலையைப் பார்த்த காந்தியவாதியின் வாழ்க் கையில் மனித மாண்புகளுக்காகவும், மதிப்பீடு களுக்காகவும், எதிர்கொண்ட போராட்டம் வரலாற்றில் மற்றுமொரு சத்திய சோதனை.

ஓயாமாரி என்ற ஆவணப்படம் ஜி.எஸ்.லட்சுமண அய்யரின் வாழ்க்கை என்ற சத்திய சோதனை குறித்த கல்வியைத் தருகிறது. கலைத்தன்மையும், தேர்ச்சியான தொழில்நுட்பத்துடனும் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வெளியீடு :
வனம்
54, வள்ளலார் நகர்,
தொண்டாமுத்தூர் சாலை,
வடவள்ளி, கோவை - 641041
ஓயாமாரி ஆவணப்படம் (விலை : ரூ.100/-)

Comments

1 comment

1
M.S.Chagla
இப்படியும் ஒரு பார்ப்னர் வாழுதிருகிரர் என்ரால் அவர் உன்ம்யில் மா மானிதர்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.