இராத்திரி முழுக்க
நிலாவையும்
நட்சத்திரங்களையும்
கழுவிக் கழுவி
சோர்ந்து போயிருக்கும்.
பின் ஓய்வில்லாது
கோழி கூவியதில்
வரத் தொடங்கியிருப்பர்
குண்டி அலசி
கால் முக்கிப் போகிறவர்கள்.
இருளையொத்த
மலையாய் வரும் எருமைகள்.
தொடர்ந்து
காட்டிலும் மேட்டிலும்
ஏறி இறங்குகிறவர்கள்
தாகத்தோடு
கை நனைத்து
மொண்டு உறிஞ்சுவார்கள்.
வருகையின் நீட்சியில்
சேவேரிய அழுக்குகளின்
முடிச்சுகளை அவிழ்த்துவிடுபவர்கள்
கூடியிருப்பர்.
மாலையில்
பாறைகளின் முனையிலிருந்து
எம்பியெம்பி குதிப்பவர்கள்.
கத்துக்குட்டி சாகசமாய்
நீச்சல் பழகும் சிறுவர்.
யாரும் அற்றுப்போனால்
தனிமையின் சஞ்சாரத்தில்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005
- விவரங்கள்
- சா. இலாகுபாரதி
- பிரிவு: கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005