தத்தம் கனவுகளை
யாருமறியாமல்
எடுத்துப் போகிறவர்கள்
பாக்யவான்கள்.
துவைத்து உலர்த்திய
கைக்குட்டையெனினும்
இழையின் ஓரங்களில்
மடிப்பின் பிளவுகளில்
கனவுகள் ஒளிந்திருக்கும்
சாத்தியக் கூறுகளுண்டு.
முகத்தருகே
கைக்குட்டையைக்
கொண்டு போக
உங்களை முத்தமிட்ட கனவுகள்
கண்களை மூடியபடி
தவிப்புடன் இருக்கும்
மீண்டுமோர் முத்தத்திற்காக.
சுவாசம் திணறும்
வாசனைத் திரவியங்களால்
போதையேறி
தள்ளாடிவிழும் கனவுகளை
உங்கள் வீட்டிலோ
அலுவலகத்திலோயிருந்தால்
அப்புறப்படுத்திவிடுங்கள்
துளியேனும் தாமதிக்காமல்.
முடிவாக ஒன்று
இனிமேலாவது
உங்கள் கைக்குட்டைகளை
நீங்களே பராமரியுங்கள்.
குறைந்த பட்சம்
கனவுகளின் ரகசியங்களை
பாதுகாக்கும் பொருட்டாவது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.