இணக்கமான சூழலொன்றில்
உருவாகிவிட்டது உன்சிருஷ்டி
இருளறையில் கருமைக்கோளமாய்த்
திரண்டிருக்கிறாய்
மிகமென்மையாகத் தான் உணரவேண்டும் உன்னை
ஆனால்
என் உடலைச் சிறுகடுகெனப் புரட்டி எறிகிறாய்.
திடுமெனப்
பூரணத்துவம் பெற்று
புகைப்படலமாகிறாய் எங்களுள்
வரையறுக்கப்பட்ட ஆண்டுக்கணக்கில்
மறைபொருளாகிறாய்
வழியற்று ரத்தமும் சதையுமாக உன்னை வெளியேற்ற
எழுந்த படபடப்பு என்னுள் அடங்க
எவ்வித எதிர்ப்பு மற்றுக்
கரையும்
உன் மெளனத்துடன்
என் சம்மதமும்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...