தி.மு.கழகத் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஆட்சியை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கான ஆட்சியாக, ஆட்சி செய்து மக்களின் பேராதரவைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

ஆனால், அதிகார மட்டங்களினால் சில நேரங்களில் ஏற்படும் தவறுகள் முகம் சுளிக்க வைக்கிறது. 02-11-2021 தேதியிட்ட தமிழக அரசின் அரசாணை, 2022ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாள்களைப் பட்டியலிட்டு உள்ளது. அதில் 14-01-2022 ஆம் நாள் பொங்கல் என்றும், 14-04-2022ஆம் நாள் “தமிழ்ப் புத்தாண்டு” என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது.

1935ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகளார் தலைமையில் திரு.வி.கல்யானசுந்தரனார், கா.சு.பிள்ளை, சச்சிதானந்தம் பிள்ளை, நா.மு.வேங்கடசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம், தா.நமச்சிவாயனார், உ.வே.சாமிநாத ஐயர் போன்ற தமிழறிஞர்களால் ஆய்ந்து இறுதி செய்யப்பட்டத் தமிழ்ப் புத்தாண்டு, தை முதல் நாள் என்பதே.

இதனை ஏற்றுத் தலைவர் கலைஞர் 2008ஆம் ஆண்டு அரசாணைப் பிறப்பித்தார். ஆனால் இவ்வாணையை 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க அரசு ரத்து செய்து ஏப்ரல் 14ஆம் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அரசாணையின் மூலம் அறிவித்தது. அந்த ஆணைதான் இன்னும் தொடர்வதாகத் தெரிகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள், நடைமுறையில் இருக்கும் அரசாணையை ரத்து செய்து, தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிவிக்க வேண்டுகிறோம்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Comments

3 comments

3
குமரன்
அன்று அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட இருந்த காலத்தில் அவர்களைப் போன்று பின்பற்ற தமிழர்களும் முற்பட்டு இருந்தார்கள் அன்னியர்கள் கிறிஸ்துவின் பிறப்பு அடிப்படையாக ஆண்டை கணக்கிட்டது போன்று தாமும் வள்ளுவருக்கு பருமட்டாக ஒரு பிறந்த ஆண்டை கண்டறிந்து அதற்கு முன்னும் பின்னுமாக தமிழ் ஆண்டு முறையை உற்பத்தி செய்தார்கள். அதேபோன்றுதான் அன்னியர்கள் ஜனவரி முதலாம் திகதியை ஆண்டு பிறப்பாக கொண்டாடுவதால் அதற்கு கிட்ட உள்ள தை முதலாம் திகதியை அவர்களும் ஆண்டு பிறப்பாக சொல்லியிருக்க வேண்டும் ஆனால் தமிழர்கள் நேர்கோட்டு ஆண்டு முறையை பின்பற்றுவதில்லை எமது இயற்கை முறை அதாவது சுழல் ஆண்டு முறை அதேபோன்றுதான் ஆண்டு பிறப்பு சித்திரையில் தான் அமையும்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
குமரன்
https://youtu.be/rYsLRUYUJtc
குமரன்
ஒன்றில் பச்சையப்பன் கல்லூரியில் கூடிய அறிஞர்கள் தமிழ்புத்தாண்டு எதுவென முடிவு எடுத்ததற்கு உள்ள காரணத்தை கூறியிருக்க வேண்டும் அல்லது நீங்கள் ஏன் அவ்வாறு கருதுகிறார்கள் என்ற காரணத்தைக் கூறியிருக்க வேண்டும் சும்மா எதுவித காரணமும் இல்லாமல் ஒன்றை நம்பிக்கையின் அடிப்படையில் கூறுவது பகுத்தறிவுக்கு முரணான செயல்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.