துரோணர்கள்
ஏகலைவர்களின் கட்டை விரல்களுக்காய்
வெறிநாய்போல் திரிகின்றனர் - நீட் தேர்வு
கருவறையில் கசக்கப்படும்
பாஞ்சாலிகளுக்குக்
கண்ணன் கருணை காட்டுவதே இல்லை - ஆசிஃபா
சகுனியின் சொக்கட்டான்களாய்
சி.பி.ஐ.யும், உச்சநீதிமன்றமும் - மோடி
மருமகன்களோ
இரட்டைத் துரியோதனர்கள்.
அடிமை சாசனமே
அவர்களுக்குக் கீதோபதேசம் - ஓ.பி.எஸ்&இ.பி.எஸ்
போராளிகள்
சிசுபாலர்களாய்ச் சிரம் அறுக்கப் படுகின்றனர்.
காவிரிக்கோ
ஆண்டுதோறும்
அஞ்ஞாத வாசம்!