“ஆட்சியும் அதிகாரமும், மத்திய அரசின் செல்வாக்கும் இருந்த காலத்தில் எல்லாம், ஈழத்தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக் கூட அசைக்க அவர்(கலைஞர்) தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை” - பழ. நெடுமாறன், “கருணாநிதியின் கபட நாடகம்” கட்டுரை - தினமணி -     27.06.2012

“தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, ‘கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்’னு சொன்னேன். - சுப்பிரமணியன் சுவாமி, ‘விகடன் மேடை’ - வாசகர் கேள்விகள் பகுதி, 04.07.2012

மேற்காணும் இரு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறான வையாக உள்ளன. ஈழ மக்களுக்காகத் தன் சுட்டு விரலைக் கூடக் கலைஞர் அசைக்கவில்லை என்கிறார் ஒருவர். தன் ஆட்சி அதிகாரம் முழுவதையும் அவர்களுக்காக அவர் பயன்படுத்தினார் என்கிறார் மற்றொருவர்.

இவை இரண்டும் எதிரெதிர்க் கருத்துகளாக இருந்தாலும், கருத்துகளை வெளியிட்டுள்ள இருவருக்கும் நோக்கம் ஒன்றுதான். கலைஞரைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது மட்டுமே இருவரின் விருப்பமும் ஆகும். எதிரெதிர்த் திசைகளில் நின்று கலைஞரைத் தாக்கும் இருமுனைத் தாக்குதல் இது.

ஒருவர் ஈழ விடுதலையை முழுமையாக ஆதரிப்பவர். மற்றவர் ஈழ விடுதலையை முழுமையாக எதிர்ப்பவர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரோ டொருவர், மோதிக்கொள்ள மாட்டார் கள். இருவரும் இணைந்து கலைஞருடன் மட்டுமே மோதுவார்கள். இது வெகுநாள்களாக நடந்துகொண்டி ருக்கும் குள்ளநரித் தந்திரம்.

ஈழமக்களுக்காகக் கலைஞர் தன் சுட்டுவிரலைக் கூட அசைத்ததில்லை என்பது உண்மையானால், ‘விடுதலைப் புலிகளுக்கு அனைத்து உதவிகளையும் அவர் செய்தார்’ என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில், 1991இல் தி.மு.கழக ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, அய்யா நெடுமாறன் குமுறி எழுந்திருக்க வேண்டாமா? ஆட்சியைக் கவிழ்த்த சந்திரசேகர் மீதும், சுப்பிரமணியன் சுவாமி மீதும் கண்டனக் கணைகளை வீசியிருக்க வேண்டாமா?

சுப்பிரமணியன் சுவாமியாவது, ‘விடுதலைப் புலிகளுக்குக் கலைஞர் செய்யும் உதவிகளை நெடுமாறன் மறைத்திருக்கின்றார். இது ஒரு பெரிய தேசத் துரோகம்’ என்று கூறி, கண்டதற் கெல்லாம் நீதிமன்றம் செல்லும் அவர் நெடுமாறன் மீதும் வழக்குத் தொடுத் திருக்க வேண்டாமா?

இரண்டு பேருக்கும் நோக்கம் ஒன்றாக இருக்கும்போது, அவர்களுக்குள் மோதல் எப்படி வரும்? ஒருவர் நடவடிக்கை மற்றவருக்கு உள்ளூர மகிழ்ச்சியைத்தானே தரும்.

சரி போகட்டும், இரண்டு பேரும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்துப் பார்க்கலாம்.

தி.மு.க. ஆட்சியில், கோவையில் புலிகள் வெடி குண்டுத் தொழிற்சா லையை, ஆட்சியின் ஆதரவில் நடத்தி னார்கள் என்கிறார் சு. சாமி. அதற்கு இன்று வரையில் ஏதேனும் ஆதாரம் உண்டா? சந்திரசேகர் அமைச்சரவை யில் மத்திய அமைச்சராக இருந்த சு. சாமி, தன் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏதேனும் விசாரணைக் கமி­ன் நியமித்தாரா? எந்த ஒரு குற்றச்சாட்டேனும் இன்றுவரை மெய்ப்பிக்கப்பட்டுள்ளதா?

சரி, நெடுமாறன் அவர்கள் அள்ளி வீசியுள்ள குற்றச்சாட்டுகளையும் பார்ப்போம்.

1973ஆம் ஆண்டு தொடங்கி, ஈழப் போராட்டத்திற்கு எதிரான செயல்களில் கலைஞர் ஈடுபட்டார் என்று கூறுகின்றார். அதனை உண்மையயன்றே வைத்துக் கொண்டு, அய்யா நெடுமாறனிடம் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அவ்வளவு மோசமான ஒருவரோடு, 1984இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நீங்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டீர்களே... அது என்ன நியாயம்? ஈழ விடுதலைக்கு எதிரான ஒருவரோடு, தேர்தலில் மட்டும் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா? ஈழத்திற்கு எதிரானவரோடு கைகோத்துக் கொள்ளத் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்கள் மனசாட்சி இடம் கொடுக்குமா?

பிறகு, கலைஞரின் கபட நாடகத்தை விளக்கி, 23.07.1997 அன்று, மேதகு பிரபாகரன் அவர்கள் அய்யா நெடுமாறனுக்கு ஒரு கடிதம் எழுதினாராம்.

சரி அதனையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அவ்வாறு புலிகளின் தலைவரே கடிதம் எழுதிய பிறகும், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், ஊர் ஊராகச் சென்று, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்குக் கேட்டீர்களே...

அது எப்படி? தேசியத் தலைவரின் கடிதம் அப்போது உங்களுக்கு மறந்து போய்விட்டதா அல்லது அவருக்கு நீங்கள் உண்மையானவராக இல்லையா?

எது கபட நாடகம் என்பதை எதிர்காலம் சொல்லத்தான் போகிறது.

1987ஆம் ஆண்டு கையயழுத்திடப்பட்ட, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைக் கலைஞர் கண்டிக்கவே இல்லை என்று கூறும் நெடுமாறன், கட்டுரையின் தொடக்கத்தில், எம்.ஜி.ஆர். ஈழத்திற்குச் செய்த பல உதவிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளுக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை நாமும் மறுக்க வில்லை. ஆனால் எம்.ஜி.ஆர்., இந்திய - இலங்கை உடன்பாட்டை மறுத்தாரா, கண்டித்தாரா?

அப்போது அவருக்கு உடல்நலமில்லை என்று உடனே விடை சொல்வார்கள். உடல் நலமில்லையயன்றாலும், அவர் அப்போதும் அரசியலில்தானே இருந்தார்? தமிழகத்தின் முதல் அமைச்சராகத்தானே இருந்தார்?

அமெரிக்காவிற்குப் புறப்பட்டுக் கொண்டி ருந்த எம்.ஜி.ஆர்., ராஜீவ் காந்தி தொலைபேசியில் அழைத்ததை ஏற்றுத் தன் பயணத்தைக் கூடத் தள்ளிவைத்துவிட்டு, இந்திய - இலங்கை ஒப்பந்த ஆதரவுக் கூட்டத்தில், ராஜீவ்காந்தியுடன் சேர்ந்து கலந்து கொண்டார். அது மட்டுமின்றி, மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு அவர் எவ்வளவு ஆதரவாக இருந்தார் என்பதை, டில்லியிலிருந்து வெளியாகும் ‘ஆசியா டைம்ஸ்’ என்னும் நாளேடு பின்வருமாறு குறிக்கின்றது.

“கூடுதல் ஆதரவு தேவையில்லாத நிலையிலும், ஆளும் காங்கிரஸ் கட்சி வெகுவாகப் பாராட்டும் வண்ணம், அ.இ.அ.தி.மு.க., தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்தது. இந்திய - இலங்கை ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும், எம்.ஜி.ஆர். உடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அவருடைய ஒப்புதல் பெறப்பட்ட பின்பே, தில்லி முடிவெடுத்தது” (“The AIADMK consistently backed the Union Government in Parliament, which was greatly appreciated by the ruling Congress Party, eventhough it was not in need of extra support. MGR was consulted and his consent secured before each step taken by New Delhi, even including the Indo - Sri Lankan agreement”)

இதுதான் உண்மை நிலை. ஆனால் இது குறித்து நெடுமாறன் அவர்கள் ஏன் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை?

14.10.2008 அன்று, கலைஞர் முதல்வராக இருந்தபோது, ஈழச் சிக்கலுக்காகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்மொழியப் பட்டத் தீர்மானத்தின்படி, 40 தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவில்லை. இதற்கும் கலைஞரே பொறுப்பு என்கிறது தினமணிக் கட்டுரை.

அய்யா நெடுமாறன் அவர்களே, கலைஞர்தான், ஈழ மக்களுக்காகத் தன் சுட்டு விரலையும் அசைக்காதவர் ஆயிற்றே! அவரை விட்டுத் தள்ளுங்கள், தங்கள் உடல் முழுவதையும் அசைக்கக் கூடியவர்கள் கூடத் தங்கள் பதவிகளை விட்டு விலகவில்லையே, ஏன் என்று கேட்டீர்களா?

இந்தக் கேள்வியை ம.தி.மு.க., பா.ம.க., பொதுவுடைமைக் கட்சிகள் ஆகியனவற்றை நோக்கி ஏன் நீங்கள் கேட்கவில்லை. ஏதோ, எல்லாக் கட்சி உறுப்பினர்களும் பதவி விலகி விட்டதைப் போலவும், தி.மு.க.வினர் மட்டுமே பதவிகளில் ஒட்டிக் கொண்டி ருந்ததைப் போலவும் காட்சி அமைப் பதன் நோக்கம் என்ன?

உண்மையான தமிழீழ ஆதரவாளர்கள், மீண்டும் தொடங்கப் பெற்றிருக்கும் ‘டெசோ’ அமைப்பை ஆதரிக்க வேண்டாமா?

ஈழத்தைக் காட்டிலும், கலைஞரைப் பற்றித்தான் எங்கள் கவலை என்று சொல்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்?

அறிஞர் அண்ணாவையும், தி.மு.கழகத்தையும், கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கிவிட்டு, 1961இல் சம்பத் அவர்களோடு இணைந்து தி.மு.க.வைவிட்டு வெளியேறிய அய்யா நெடுமாறன் போன்றவர்கள் இன்னும் அந்தப் பகையை மறக்கவில்லை என்றே தோன்றுகிறது.

கலைஞரின் மீது - நெடுமாறன் அவர்களுக்குப் பழம் பகை!
சு. சாமிக்கோ பரம்பரைப் பகை!!

Comments

23 comments

23
Anand
கலைஞரை பற்றி இனி நீங்கள் என்ன சொன்னாலும் நடுநிலையாளர்கள் நம்ப மாட்டார்கள்.
MAAYURANAATHAN
இலங்கை பிரச்சினையை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். 1.ராஜீவ் மரணம் முன்பு 2. மரணத்திற்குப்பின் 3. ஈழ தமிழர்களின் படுகொலைகளுக்குப் பிறகு. அந்த்த்ந்த சூழ்னிலைககு ஏர்றவாறு 'பல்டி' அடித்து தன் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
kulothungan
ரொம்ம்பபப முயற்சி பண்ணியிருக்கீங்க அய்யா.. ஆனால் தங்கள் மீது அபிமானம் உள்ளவர்களும் தங்களை வெறுத்துவிடுவார்கள் தாங்கள் இனத்துரோகியான கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கினால்... அவர் ஈழத்தமிழர்களுக்காக முன்பு என்ன செய்தார் என்று ஆராய்ச்சி செய்யவேண்டாம். 1.5 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது போர் நிறுத்தம் செய்யப்பட்டது என்று கூசாமல் பொய்சொல்லி 1 மணி நேரத்தில் 44000 மக்கள் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்தபோது படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தவர்தான் தங்கள் உடன்பிறவா சகோதரர் கருணாநிதி.. இதை நான் சொல்லவில்லை.. இல்ங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் அவர்கள் தெரிவித்த தகவல்.. கருணாநிதியின் பச்சை மட்டுமல்ல.. கலர் கலரான துரோகம் சிறுபிள்ளைக்கும் தெரியும்.. அடக்கம் செய்த இடத்தில் மீண்டும் மீண்டும் மண் அள்ளிப்போட முயற்சிக்காதீர்கள்..
சம்பூகன்
ஈழத்தமிழர் சிக்கலில் சில மூடநம்பிக்கைகள் உண்டு. எதற்கெடுத்தாலும் கலைஞரைக் குற்றம் சொல்லும் மூடநம்பிக்கைதான் அது. இணையதள பயன்பாட்டாளர்கள்,தமிழ்ப் பத்திரிகைகள்(குறிப்பாக பார்ப்பனப் பத்திரிகைகள்)படிப்போர்,ஈழத்தமிழர்கள் மேல் வாய்ச்சொல்லில் மட்டும் பாசம் கொட்டுவோர், அடிப்படை அரசியல் புரிதல் இல்லாதவர்கள், கலைஞர் எதிர்ப்பு மட்டுமே கொள்கையாகக் கொண்டோர், திராவிட இயக்க வெறுப்புக் கொண்ட ஜாதிய உணர்வு தமிழ் தேசிய வாதிகள் இந்த மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டுள்ளனர். ஈழச்சிக்கலில் வெளியிலிருந்து ஆதரவுக் கரம் நீட்டுவது மட்டுமே தமிழ்நாட்டு அரசியலாளர்களின் வேலை. அதாவது தார்மீக ஆதரவு மட்டும்தான் இவைகளின் கொள்கைத் திட்டம். ஈழத்தை வெறெடுக்க திட்டம் வகுத்தலும்,செயல்படுதலும் ஈழத்தில் உள்ள அமைப்புகளின் பணி.இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் வேலையை மேற்குறிப்பிட்டோர் செய்கின்றனர். கலைஞர் நினைத்தவுடன் ஈழம் கொடுக்க யாரும் தயாராக இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதுபோல ஈழப் பிரச்சினையில் எதற்கெடுத்தாலும் உடனே கலைஞரைக் குற்றம் சொல்வது 2009 க்குப் பின் க்கு ஓரு ஃபேஷன் ஆகிவிட்டது. ஈழச்சிக்கலில் அங்குள்ள அமைப்புகள் எந்தத் தவறும் செய்யவில்லையா? ஈழத்தின் முழு நிலப்பகுதியிலும் போர் நடந்ததா? பிரபாகரன் ஆதிக்கப் பகுதியான 3 மாவட்டங்களில் மட்டும் போர் நடந்ததா? கிளிநொச்சியில் போர் நடந்தபோது தமிழ் நாட்டில் நடந்த போராட்டங்கள் போல யாழ்ப்பாணத்தில் நடக்கவில்லையே? கிழக்கில் நடக்கவில்லையே?அது ஏன்?பிரபாகரனும் விடுதலைப்புலிகளும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக இருந்தார்களா?அனைத்து ஈழத்தமிழர்களும் அவர்களை ஏற்றார்களா?பிரபாகரனின் அனைத்து முடிவுகளுமே சரியானதுதானா?அதனை விமர்சிப்பது இல்லையே ஏன்? கொரில்லா போர்க் குழுவான விடுதலைப் புலிகள் படையை,முள்ளிவாய்க்கால் போரின் போது மரபு ரீதியான போருக்குப் பயன்படுத்தியது சரியா? இது போல பல நூறு கேள்விகளுக்கு ஈழ ஆதரவாளர்கள்(?)யாருமே பதில் சொல்லத் தயாரில்லையே ஏன்? ஈழச்சிக்கல் என்பது தமிழக அரசியலைப் பொருத்தவரையில் பல பிரச்சினகளில் ஒன்று மட்டுமே.அதற்குத் தேவையானபோது குரல்கொடுப்பதே சரியான அணுகுமுறை. எப்போதும் அதே வேலையாய் இருக்க முடியாது என்பதை முதலில் உணரவேண்டும். ஈழச்சிக்கலில் ஈழத்தமிழ் அமைப்புகள்,ஈழத்தமிழர்கள்,ஆயுதக்குழுக்களின் நிலைப்பாடுகள் குறித்து முதலில் கேள்வி எழுப்புங்கள். முக்கியமாக விடுதலைப்புலிகள் மற்றும் பிரபாகரன் அரசியல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்புங்கள். இந்தச் சிக்கலின் முதன்மைக் காரணிகளான பிரபாகரன் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து முதலில் கேள்வி எழுப்புங்கள். அதற்குப் பிறகு ஆதரவு சக்திகளின் நிலைப்பாடுகள்,செயல்பாடுகள்,கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பலாம். இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. பிரபாகரன் என்ன செய்தாலும் சரி என்று இருந்ததால்தான் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.ஜனநாயக பூர்வமான விவாதங்கள் ஈழச்சிக்கலில் பிரபாகரன் தரப்பு மீது நடைபெறவில்லை என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. சர்வாதிகாரத் தலைமையின் போராட்டம் இந்த முடிவைத்தான் தரும். அதற்கு பிரபாகரன் விதிவிலக்கல்ல.திறந்த மனதோடு,பிரபாகரன் மீதானா தலைமை வழிபாட்டைக் கடந்து எல்லாப்பக்கங்களில் இருந்தும் விவாதங்கள் நடந்தால்தான் அடுத்த போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க முடியும். அதை விடுத்து அலைஞரைக் குற்றம் சொல்வதால் துரும்பைக் கூட கிள்ளிப்போட முடியாது. உணர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதை விடுத்து அறிவுக்கு முன்னுரிமை கொடுங்கள்.உருப்படலாம். இல்லாவிட்டால் இப்படியே வெட்டி வேதாந்தம் பேசிக்கொண்டு திரியவேண்டியதுதான்.
ssk
பார்பனுக்கு காவடி தூக்கும் மனிதர் இந்த நெடுமாறன்.
இவரின் பற்பல் செயல்களில் கலைஞர் எதிர்ப்பு மட்டுமே முக்கியம். தமிழர் நலன் முக்கியம் இல்லை.
சாதி என்பதற்கு முக்கியத்துவம் தந்து தமிழர் சாகும் போது திருமா தனியாக சேர்ந்து போராட அழைத்த போது கூட போகாத நல்லவர்.
பார்ப்பான் அடிமை. இவரால் எதாவது நல்லது நடந்து உள்ளதா? வெறும் கூச்சல்.
இவருக்கு சு.சாமி மேல்.
ஷாலி
சுபவீ.அவர்களே! தங்களுக்கு என்ன ஆயிற்று ஏன் சவத்திற்கு அலங்காரம் பண்ண ஆசைப்படுகிறீர்கள்? காகிதப்பூ நாயகரின் கழுத்தறுப்பு க. நாடகம் நாடறிந்த ஒன்று. கருணாநிதிக்கு ஆதரவாக சு.சாமியை சாட்சியாக்கும் உங்கள் வித்தை மலிவானது. புலிகளுக்கு மத்திய மாநில எல்லா அரசுகளும் தங்கள் சுய நலனுக்காக உதவி செய்தார்கள். கருணாநிதியின் மத்திய அரசு ஆட்சியில்தான் அப்பாவி பொது மக்கள் முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைக்கப்பட்டார்கள். ஆக கடைசி கட்டத்தில் மக்களை கொலையாளிகளிடம் ஒப்புக்கொடுத்ததில் மன்மோகன்-கருணா கூட்டணிக்கு பங்கு உண்டு. இதில் உங்களுக்கும் ஏதேனும் பங்கு இருக்கிறதோ? என்னமோ...
நலங்கிள்ளி
விடுதலைப் புலிகளுக்குத் திமுக ஆட்சி ஆதரவளித்ததாகக் கூறி 1991இல் அந்த ஆட்சியை அன்றைய தலைமையமைச்சர் சந்திரசேகர் கலைத்தது உண்மைதான். ஆனால் அதற்காகக் கலைஞரும் கலைஞர் ரசிகர் கூட்டமும் ஈழத்தமிழழருக்காக ஆட்சியை இழந்தவர்கள் நாங்கள் என்று ஒரே பொய்யைச் சொல்லி வருகிறார்கள். தமிழர்கள் அந்தளவுக்கு வரலாற்றை மறந்து விடுவார்கள் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு. உள்ளபடியே விடுதலைப் புலிகளுக்குத் திமுக ஆதரவு என்ற பேரில் திமுக ஆட்சியைக் கலைப்பதற்கான ஏற்பாடுகள் தில்லியில் நடந்து வந்து கொண்டிருந்த போது, அப்போது மத்திய அரசில் அமைச்சராக இருந்த ஊர் பேர் தெரியாத சுபோத்கான் சகாய் என்னும் வட இந்தியரைச் சந்தித்தார் கலைஞர். நாங்கள் ஒரு போதும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததில்லை, சொல்லப் போனால் எங்களை விட விடுதலைப் புலிகளைத் தீவிரமாக ஆதரித்தவர் ஜெயலலிதான் என்று பல ஆதாரங்களை அவரிடம் ஒப்படைத்தார் கருணாநிதி. தயவுசெய்து எங்கள் ஆட்சியைக் கலைத்து விடாதீர்கள் என்று திரும்பத் திரும்பக் கெஞ்சினார். ஆம், நான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறேன், தமிழன் என்ற வகையில் அது என் கடமை என்றா கலைஞர் கூறினார். ஜெயலலிதாதான் உண்மை விடுதலைப்புலி ஆதரவாளர் என் அன்று சான்றிதழ் அளித்தவர்கள் இன்று ஈழப் பிரச்சினைக்காக ஆட்சியை இழந்தோம் என்பதெல்லாம் வடிகட்டிய பொய்.
வண்டாரியான்
கருணாநிதிக்கும் உமக்கும் சிறு சிறு வேறுபாடுகள் இருப்பதாக நினைத்திருந்தேன் {அல்ப்ப ஆசை} கருங்காலி கருணாநிதியின் நிழல் நான் என்று உம்மை பட்டவர்த்தனமாய் ஒப்புக்கொண்டதிர்க்கு நன்றி.
R Chandrasekaran
இந்தப் பிரச்சனையில் சு சாமி சொல்வதும் சரி... நெடுமாறன் சொல்வதும் சரி... கலைஞர் சரியாகத்தான இருந்திருக்கிறார்.. அதாவது பாலுக்குக் காவலாகவும் பூனைக்குத் தோழனாகவும் திறம்பட செய்ல் புரிந்திருக்கிறார்.. மிகச் சிறந்த நிர்வாகியான கலைஞ்ர் அவர்களை மிஞ்ச ஒருவர் இந்த உலகில் உண்டா... சே...எவருக்கும் அவருடைய திறமை புரியவில்லை...
கி.பிரபா
எங்கிருந்தோ பிழைக்க வந்த நரி ஒன்று காட்டிற்குத் தலைவன் நான் தான் என்றதாம். அதைப்போல் தான் கருணாநிதியும் பிழைக்க வந்தவர். அதுவும் உழைக்காமலே இன்று பிழைத்துக் கொண்டிருப்பவர். தன்னுடைய தாய் மொழி தெலுங்கு எனச் சொல்லுவதற்குக் கூடக் கூசிக் குறுகிக் கொண்டு தமிழனைக் கொன்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் தமிழினத் துரோகியே! இவருக்குப் போய் வக்காலத்து வாங்கலாமா? ஒருவனுக்கு ஒருத்தி எனும் தமிழ்ப் பண்பாடில்லை.தாய்மொழி தமிழ் இல்லை. இவர் எப்படித் தமிழினத்தைக் காப்பாற்றுவார். தமிழர்களின் நலம் எண்ணுவார்? தமிழை முழுமையாக ஆதரிப்பார்? அல்லது ஏற்றுக்கொள்வார்? சாயம் பூசிய நரியாக வலம் வரும் இவருக்குப் போய் சுப. வீ அவர்கள் வக்காலத்து வாங்குகிறாரே என நினைத்தால் எப்பேற்பட்ட அறிவாளி இப்படிப் புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் என எண்ணி...! இவரையுமா கலைனர் சிந்திக்க விடாமல் முடக்கி விட்டார் என நினைக்கத் தோன்றுகிறது.
அன்பு செல்வி
@நலங்கிள்ளி:
//உள்ளபடியே விடுதலைப் புலிகளுக்குத் திமுக ஆதரவு என்ற பேரில் திமுக ஆட்சியைக் கலைப்பதற்கான ஏற்பாடுகள் தில்லியில் நடந்து வந்து கொண்டிருந்த போது, அப்போது மத்திய அரசில் அமைச்சராக இருந்த ஊர் பேர் தெரியாத சுபோத்கான் சகாய் என்னும் வட இந்தியரைச் சந்தித்தார் கலைஞர். நாங்கள் ஒரு போதும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததில்லை, சொல்லப் போனால் எங்களை விட விடுதலைப் புலிகளைத் தீவிரமாக ஆதரித்தவர் ஜெயலலிதான் என்று பல ஆதாரங்களை அவரிடம் ஒப்படைத்தார் கருணாநிதி. //
அலங்கரிக்கப்பட்ட அழகான பொய்... வாழ்த்துக்கள் நலங்கிள்ளி அவர்களே .. ம்ம்ம்ம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து.. சான்றோடு நிரூபிக்கத்தயாரா ? சான்று என்றதும் ஏதோ ஒரு விளங்காத பார்ப்பான் எழுதிய கட்டுரையையோ அல்லது முகநூல் விமர்சனத்தையோ நீட்டுவீர்கள்... தெரியுதோ தெரியலையோ சும்மா அடிச்சு விட வேண்டியது தானே! என்ன சரி தானே ?
raja
At first K. A. P. Viswanatham was reveled by Su ba vee now Nedumaran.All this actors should be Criticized without their age factor. The same idea was handled in Prabhakaran’s mother issue also.
சுப.முருகானந்தம்
"சு சாமி சொல்வதும் சரி... நெடுமாறன் சொல்வதும் சரி.."

"இந்த மானங்கெட்ட மக்களை உடைய நாடு எப்படி சுதந்திரமோ சுயமரியாதையோ அடைய முடியும். இவர்களை பார்ப்பனர்கள் தேவடியாள் மக்கள் என்று ஏன் சொல்ல்மாட்டார்கள்? " -தந்தை பெரியார் -குடியரசு 26.09.1937
R Chandrasekaran
சம்பூகன் எஸெஸ்கே அன்புசெல்வி••••••••••••• எல்லாம் சரியாத்தான் போயிக்கிட்டு இருக்கு... ஆனா பாருங்க .......சீசரை கடைசியாக குத்தினவன் புரூட்டஸ்.. அவன்குத்திய கடைசி கத்தியா சீசரின் உயிரை பறித்தது.????????சேச்சே . அய்யகோ..இல்லை.. நிச்சயமாக இல்லை......... எல்லாரும் குத்தினார்கள்........... அவனும் குத்தினான்... அவ்வளவுதான்...............என்ன புரூட்டஸ் சீசரின் நண்பன் என்று எண்ணப் பட்டதால் அவனை அனைவரும் விமர்சிக்கின்றனர்... ஆனால் நிச்சயமாக புரூட்டசின் கத்தியால் மட்டும் மட்டும் மட்டும் சீசர் சாகவில்லை.......
நலங்கிள்ளி
அன்புச்செல்வி அவர்களே ஆதாரம் என்று கேட்டால் 1991 செய்திகளைத் தேடித்தான் எடுக்க வேண்டும். ஆனால் அன்றைய அரசியலில் கொஞ்சம் ஆர்வம் இருந்தவர்களுக்கும் இந்தச் செய்திகள் நன்கு தெரியும். நீங்கள் அந்தளவுக்கு அரசியலை விட்டு விலகியுள்ளீர்கள் என்பது தெரிகிறது. சரி, ஜெயலலிதாதான் என்னை விடத் தீவிரமாக விடுதலைப்புலிகளை ஆதரித்தவர் என்று ஒரு முறை அல்ல, பல நூறு முறை கூறியவர்கள் கருணாநிதி. இதுவும் பலருக்கும் தெரிந்த செய்திதான். சரி, போகட்டும், உங்களை நான் கேட்கிறேன். அப்படியானால் கலைஞர் நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது உண்மைதான், ஆட்சியைக் கலைத்தால் கலைத்துக் கொள்ளுங்கள் என்று வீர வசனம் பேசியா ஆட்சியை இழநதார். உங்களால் இதற்கு ஒரே ஓர் ஆதாரத்தைத் தர முடியுமா அன்புச்செல்வி?
dhina
கொள்கைகளில் சமரசம் செய்து கொள்வதில் தவறில்லை....வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கம் இல்லாதவரை.கருனானிதியின் அரசியல் வருமானத்தைக்குறி வைத்தே நடந்து வருகிறது.முன்பக்கத்தை திமுக காரனுக்கும் பின் பக்கத்தை காங்கிரசுக்கும் காட்டுகிறார் இவர்.ஆட்சியை தக்கவைக்க எல்லா வேலையும் செய்வார்...அதையும் மீறி ஆட்சி போனால் கொள்கைக்காக பறி கொடுத்தேன் என்று வசனம் பேசுவார் இவர்.மிசாவில் உதை வாங்குவார்...நேருவின் மகளோடு நிலையான ஆட்சிக்கு கூட்டணி வைப்பார்.எவன் எங்கே செத்தாலென்ன.......உலக பணக்காரர்களில் ஒருவராக ஆன பிறகு!
ஆறுமுகம்
பழ.நெடுமாறன் சமீபத்தில் கூறியது ஈழப்போர் நடந்த காலகட்டத்தில் நடந்த வரலாற்று உண்மையின் அடிப்படையில். அது அவரது சொந்த கருத்த இல்லையே உலகத்தமிழர்கள் அணைவர் மனதிலும் வடுவாக பதிந்ததை பழ.நெடுமாறன் நினைவு கூர்ந்துள்ளார் அவ்வளவே. சு.சாமி உண்மையைத்தான் கூறுவார் என்று சுப.வீ நம்பினால் அதே சு.சாமி அலைக்கற்றை ஊழல் குறித்து கூறுவது அணைத்தும் உண்மை தானே. போராளிகள் குழு எம்.ஜி.ஆர் ஆட்சிப்பொறுப்பில் இருந்ததால் அவரை பெரிதும் சார்ந்திருக்கவும் செய்தனர். போராளிகளுக்கு உதவியது எம்.ஜி.ஆர் தான் அதிகம் என்பது உலகறிந்த உண்மை. தி.மு.க. ஆட்சியை கலைக்க இது ஒரு காரணம் அவ்வளவே. முன்னதாக ஊழல் குற்றசாட்டிற்க்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது நினைவு கூறதக்கது. போராளிகளை காரணம் காட்டி கலைத்தது அவர் ஆட்சி க்கு கரையேதும் ஏற்படுத்த வில்லை. மாறாக தூக்கி எறியபடுகையில் தி.மு.கவுக்கு அந்த காரணம் ஒரு கௌரவத்தை ஏற்படுத்தியது இல்லாவிட்டால் மீண்டும் ஒரு ஊழல் குற்றசாட்டிற்க்காக கலைத்தால் நிலைமை என்ன ஆகும்? ஆனால், கடுமையான 2ஜி ஊழல் குற்றசாட்டு உள்ள போதும் தி.மு.க ஆட்சி கலைக்கப்படவில்லையே ஏன்? காங்கிரஸ் ஊழலை அங்கீகரித்தா? இல்லை உள்துரோக ஒப்பந்தம் காரணமா? ஈழப்போரின் துவக்கம் பிரி..கா சிறையில் ந.னியை சிறையில் சந்தித்தபின் நடந்தது. அந்த சந்திப்பை திமுக தலைவர் மறைத்தேன்? அப்போது தனது தந்தையின் மரணத்திற்க்கு பதினைந்து ஆண்டுகளாக நியாயம் கிடைக்கவில்லை என்று தனையனும் பேட்டியளித்துளளது சுப.வீக்கு தெரியுமா? இந்த நிகழ்வுகளுக்கு பின்தான் இலங்கை அரசு தானாக அமைதி ஒப்பந்தத்தில் இருந்து விலகி போரை தொடங்கியது. அப்போது வாய்திறந்த வாரிசுகள் தமிழர் பிரச்சினை குறித்து பின்னர் வாய்திறப்பதில்லை என்பதை கவணிக்க சுப.வீ தவறியது ஏன்? அல்லது மறைப்பது ஏன்? திமுக தலைவர் ஈழப்பிரச்சினையில் இதுவரை அடித்துள்ள பல்டிகள் ஒலிம்பிக்கில் பத்க்கத்தை பெற்றுத்தறும். இதுகுறிதது “துக்ளக்” சோ வே அதிகம் எழுதியுள்ளார் இவர் தமிழர் விரோத கருத்து கொண்டவர் என்பற்க்கு திமுக தலைவருக்கும் சுப.வீக்கும் மாற்று கருத்து இருக்காது என்பது கவணிக்க தக்கது.
ஆறுமுகம்
நெடுமாறனின் கூற்று அறிந்த உண்மையை பகிரங்கபடுத்துவது மட்டுமே சு.சாமியின் கூற்று செய்த கெடுதலுக்கு கூறிய பொய்கை தக்க வைக்க வேண்டும் என்பதே. போகட்டும் இந்த தேசபக்கதரிடம் (!) ஏன் போராளிகள் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றத்திற்க்காக விசாரிக்க வேண்டும்? சாமியர்களை விசாரிக்க வேண்டும்? ஜெ. வை யாரும் தமிழின தலைவராக இன்றுவரை கூறுவது கிடையாது ஆனால் தமிழின தலைவர் என்று கூறிக்கொண்டவர் தனது குடும்பத்தினருக்கு மந்திரி பதவிக்காக டெல்லியில் அழைந்ததை தமிழ் உணர்வு என சுப.வீ கூறுகிறாரா? 40000 தமிழன் ‌கொல்லப்பட்ட இறுதி தினத்தை மழை நின்றாலும் தூவானம் நிற்க வில்லை என்று கொலையை மறைக்க முற்படவில்லையா? தமிழின விரோதியாக இருந்த ஜெ.வே தமிழர் துயரம் மாற்றிய நிலையில் தமிழின் தலைவர் துயர வேளையில் செம்மொழி மாநாடு நடத்தி அதை மூடிமறைக்க முயற்ச்சித்தது ஏன்? ‌துரோகத்திற்க்கு துணை போனதால் அதை நிலைநாட்ட ‌சுப.வீ வக்காலத்து போடுகிறாரா? சு.சாமியும் பழ.நெடுமாறனையும் மோதியிருக்க வேண்டும் என்று கூறும் சுப.வீ காங்கிரஸை திமுக கைகழுவியிருக்க வேண்டும் என்று கூறவில்லையே ஏன்? 2ஜியில் கிடைத்த பரிசா? எத்தனை காலம்தான் தமிழ், தமிழன் என்று அடிமைப்படுத்தி இனப் கொலைசெய்வீர்கள்? உலகில் தன் இனம் படுகொலை செய்ப்படும்போது பதவியே பெரிதென்று எந்த இனத்தலைவனும் இருந்ததில்லை. மாறாக புறநானூற்று தாயைப்போல் தன் இனத்தை காக்க தன் குடும்பத்தில் ஒருவனை போருக்கு அணுப்பியவனே தமிழின தலைவன். வாரிசுகளுக்கு பதவிக்காக டெல்லிக்கு காவடி சுமந்தவரை வரலாறு என்றோ எட்டப்பன் என்று முத்திரை குத்திவிட்டது. அதைதான் பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார் அது அவரது சொந்த கருத்தல்ல உலகத்தமிழர்களின் மனக்குரல்.
ஆறுமுகம்
மிக கடினபட்டு தட்டச்சு செய்து எதிர் கருத்துகளை பதிந்தேன் ஆனால் அவற்றை கீற்று வெளியிடவில்லை. நுட்ப கோளாறு காரணம் ஏற்படக் கூடாது என்பதற்க்காக இரு பகுதிகளாக பதிவேற்றினேன் ஆனால் கீற்று அதை வெளியிட வில்லை. இது ஒருதலைப்பட்சமானது மற்றவர்கள் கருத்துகளை புறந்தள்ளி ஒருசாரர் கரு்துகளை திணிப்பதாகும். கருத்துகளை வெளியிட மறுத்தால் இனி பின்னூட்டங்கள் மட்டுல்ல கீற்று இணையதளத்திற்க்கு வருகையை மறுபரிசீ‌லனை செய்யவேண்டிவரும்.
ஆறுமுகம்
பின்னூட்டங்களை வெளியிட்டமைக்கு கீற்றுவுக்கு நன்றிகள்!
R Chandrasekaran
ஆறுமுகம் சார்... உங்கள் பின்னூட்டங்களைப் படித்த பின்னர் “யாரத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் அம்மம்மா ஊரினிலே யாவும் வஞ்சம்., “ என்று பாடிக் கொண்டேயிருக்கத் தோன்றுகிறது...
meithedi
வணக்கம்,

இன்று வரை ஈழ பிரச்சனை தமிழகத்து மக்களை புரியவைத்தது போதும்.மக்கள் சரியில்லை என்பது மட்டும் உண்மை.யார் சொன்னாலும் தலையாட்டும் கூட்டம் என்றாகி விட்டார்கள் ,மூடனம்பிக்கை அதிகரித்துவிட்டது.தனிமனித துதி சொல்லவே வேண்டாம் .இவையாவும் தி மு க,அ தி மு க வின் வளர்ந்துவிட்ட கொள்கைகள் 20 % க்கும் அதிகமான வாக்கின் அவலஙகள்.இதில் யாரையும் தூக்கிப்பிடிக்க தேவைஇல்லை.பேராசிரியர் சொன்ன விளக்கம் ஒரே ஒரு நெடுமாரனுக்க்கு மட்டும் சரியாக புரியும்.

மத்தியில் தமிழன் பிரபாகரனே ஆட்சி செய்தாலும் தனி ஈழம் அமைக்க தமிழர்கள் ஒற்றுமை அவசியம் ,அது என்றுமே வாய்பில்லை நன்பர்களே.

களம் இலஙகை ,ஈழம் வெல்லமுடியும் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த உலகத்தில் ஒரு சிங்களனைக்கூட நடமாட நிம்மதியாக நடமாட விடக்கூடாது.அது எந்த துறையானாலும் சரி.

--- கருவிகள் இங்கே செய்வோம்
களம் காண இலஙகை செல்வோம்
ஈழம் வெல்லும்.

............மெய்தேடி-----------
samy
அன்பு பிரபா அவர்களுக்கு, உங்கள் பதிவில் கருணாநிதியை தெலுங்கர் என்றும் அவருக்கு தமிழரின் மீது அக்கறை இருக்காது என்று கூறி உள்ளீர்கள்.அப்படியென்றால் வைகோ.உம் அப்படித்தானா.அப்படித்தான் என்றால் பின் யார் தான் தமிழிகளுக்காகப் போராடுபவர்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.