தஞ்சையில் உருவாக்கப்பெற்ற முள்ளிவாய்க்கால் முற்றத்தின் ஒரு பகுதியை எந்த முன்னறிவிப்பும் இன்றி, 13.11.13 அதிகாலையில் ஜெயலலிதா அரசின் காவல்துறை தகர்த்துள்ளது. பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசின் இதுபோன்ற அத்துமீறல்களைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. ஒருவேளை அந்நினைவகம் சட்ட விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்டிருப்பின் அதனைக் கட்டும்போதே தடுத்திருக்க வேண்டும். அல்லது அதற்கான உரிய விளக்கத்தைக் கோரி இருக்க வேண்டும். எதுவும் இன்றி, அப்பகுதியைத் தகர்த்திருப்பது தமிழின உணர்வுகளின் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கிற மாறாத காயம். ஒரு பக்கம் ஈழத்திற்கு ஆதரவாய்ச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதும், மறுபக்கம் ஈழத்தமிழர்களின் நினைவகத்தை இடித்துத் தகர்ப்பதும் ஜெயலலிதா அரசின் அப்பட்டமான இரட்டை வேடத்தை எடுத்துக்காட்டுகிறது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.