( 2006ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு உறுப்பினராகத் தமிழருவி மணியன் கலைஞரால் நியமிக்கப்பட்டபோது, அவர் முரசொலியில் எழுதியுள்ள கவிதை இது )

நேற்று நீ

வடமொழியோடு என்றும் வாடாத தமிழுக்குச்

செம்மொழி என்ற சரியாசனம் தந்தாய்

இன்று நீ

இந்த மண்ணில் வாழும் எவரும்

தமிழ் படித்தே ஆகவேண்டும் என்ற

விதியயான்று செய்தாய்

நாளை நீ

நியாயத் தராசிருக்கும் நீதிதேவன் கொலுமண்டபத்தில்

அன்னைத் தமிழ் ஆள்வதற்கு அரியாசனம் அமைத்தாய்

என்றும் நீ

செய்கரிய இச்சாதனைகளால்

தமிழர்தம் நெஞ்சங்களில்

தஞ்சைக் கோபுரமாய் உயர்ந்தாய்

தமிழ் என்றாலும் தமிழர் என்றாலும்

திறனறிந்து போற்றுவார் உன்போல் யாருண்டு?

வளர் நிலவாய் வாழ்க வற்றாத உன் தமிழ்த் தொண்டு!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.