புலிக்குப் பயந்து
ஒளிந்து கொள்ள என்
காட்டை அடர்த்தியாய்
வளர்க்கத் துவங்கினேன்

கால்தடங்களைப் பதிய விடாது
மண் மூடி காடு வளர்ந்தது

என் கூடவே பெருகிய
முயல்களும் மான்களும்
திடீரென காணாமல் போகத்
துவங்கிய போதுதான் தெரிந்தது

காட்டின் நிழல்களூடே
நானறியாது புலிகளும்
பெருகியதை

Pin It