கதை கேட்பதற்காக
கூடியிருந்தார்கள்
குழந்தைகள்
எல்லாக் கதைகளுக்குள்ளும்
நுழைந்து பார்த்தார்கள்
எல்லாக் கதைகளையும்
ரசித்துக் கேட்டார்கள்
கதையில் வந்த
செல்லப் பிராணிகளிடம்
விளையாடிக் கழித்தார்கள்
கருத்து எதுவும்
சொல்லாத கதைகளே
அவர்களுக்குப் பிடித்திருந்தது
கதைகளுக்குள்ளும் கதை
ஒளிந்திருப்பதை
கண்டுபிடித்துக் காட்டினார்கள்
நீரூற்றுப் போல்
உற்சாக வெள்ளம் பீறிட்டது
கதைகளின் முடிவில்
பெருத்த ஆரவாரங்களுக்கிடையே
ஆகாஷ் அம்மா இறந்துட்டாங்களாம்
அதான் அவன் வரலையென்று
ஆசிரியரிடம்
சொல்லித் தொலைத்தார்கள்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை