எப்போதும் நிறைந்திருக்கும்
பெண்களால்,
ஒரு கல்யாண வீட்டைப் போல.

வழிபாட்டிற்குரியது அது,
இழவிலும்
மணவிழாவிலும்
பொத்திப் பணிந்து
வணங்கும்
பவ்யக் கூட்டம்.

இளநீர் தோற்றுவிடும்
புகழாத வாயில்லை,
எல்லாம் முடிந்தது
மேல்நிலைத் தொட்டியிலிருந்து
தண்ணீர் வந்தவுடன்.

- ந.செந்தில்குமார்

Pin It