மகாராஷ்டிராவில் பகுத்தறிவாளர் டாக்டர் தபோல்கர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து தீவிரவாத அமைப்பைச் சார்ந்த ஒருவரை சி.பி.அய். கைது செய்துள்ளது. அவரது பெயர் வீரேந்திர தாப்தே. ‘இந்து ஜன் ஜாக்ருதி சமிதி’ என்ற அமைப்பின் தீவிர உறுப்பினர். கம்யூனிஸ்ட்டும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரே, இதேபோல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதே இந்து தீவிரவாத அமைப்பைச் சார்ந்த சமீர் கெய்க்வார்ட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2009இல் கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் தேடப் பட்டு வரும் முக்கிய இந்து தீவிரவாதி சாரங் அகோல்கர்தான் தபோல்கர் கொலை யில் முதன்மை குற்றவாளி என்று சி.பி.அய். கருதி அவரை தேடி வருகிறது.

குற்றம்சாட்டப் பட்டுள்ள இந்த இருவருக்கும் அகோல்கருக்கும் இடையே இணைய தளம் வழியாக கடிதத் தொடர்புகள் இருந் துள்ளதை சி.பி.அய். கண்டு பிடித்துள்ளது. சரியான திசையில் சி.பி.அய். செயல்படத் தொடங்கியிருக்கிறது என்றும், காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்கத்தக்கது என்று தபோல்கரின் மகன் அமீது தபோல்கர் கூறியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட வேண்டும் என்று ‘இஸ்லாமிய பயங்கர வாதத்தை’ மறைமுகமாக சுட்டிக் காட்டினார். இந்தியாவில் பார்ப்பன பயங்கரவாதம் துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு திரிகிறது. வெடிகுண்டு தாக்குதல்களை நடத்திய இந்து தீவிரவாதக் கும்பல்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை மோடி ஆட்சி திரும்பப் பெற்று வருகிறது. மதத்தின் பெயரால் நடக்கும் அனைத்து வன்முறைகளும் தடுக்கப்பட்டாக வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.