கூடங்குளம் பகுதி மக்களின் அச் சத்தை போக் காதவரை அணு உலையை திறக்கக் கூடாது என்று தீர் மானம் போட்ட தமிழக அரசு, தற்போது அணு உலையைத் திறக்க அனுமதியளித்திருக்கி றது. அப்பகுதி மக்களின் அச் சத்தைப் போக்கி விட்டதா தமிழக அரசு? கூடங்குளம் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா?

இந்தக் கேள்விகளை, கூடங்குளம் அணு உலையை எதிர்த்து 1988ம் ஆண்டிலிருந்தே களத்தில் நிற்பவரும், அணு உலை எதிர்ப்பு இயக்கத்திற்காக ஆதரவு சக்திகளை திரட்டி ஒருங்கிணைத்து வருபவருமான அன்டன் கோம்ஸ் சிடம் முன் வைத்தோம்.

“அணு உலை பற்றிய அச் சத்தைப் போக்காமல் காவல் துறை, இராணுவம் போன்ற பாதுகாப்புப் படையைக் கொண்டு வந்து மேலும் அச்சத் தைக் கூட்டியுள்ளது தமிழக அரசு. அடக்குமுறை மூலம் அச்சத்தை ஏற்படுத்தினாலும், இந்த அச்சத்தை எதிர்கொள்ளும் மன வலிமையை மக்கள் பெற்றி ருக்கிறார்கள்.

இடிந்தகரை கிராமத்தை ஏறக் குறைய தனியாக துண்டித்தபோ தும், அத்தனை கடற்கரை கிரா மங்களிலிருந்தும் மக்கள் கொடுக் கும் அபரிதமான ஆதரவு அந்த மன வலிமையை ஏற்படுத்தியுள் ளது.

இந்த ஜனநாயக அறவழிப் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று அரசு மனப்பால் குடிப் பது முட்டாள்களின் சொர்க்கத் தில் இருப்பதைப் போன்றது தான்!

கூடங்குளம் போராட்டத்தை மேலும் ஒடுக்க, ஒடுக்க இந்தியா வின் ஒட்டுமொத்தமான அணு உலைக்கு எதிரான போராட்டம் இன்னும் வீரியமடையும். மக்கள் வீறு கொண்டு எழுவார்கள்.

இப்பொழுது இந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்க லாம். ஆனால் இந்த மக்கள் போராட்டம் அணு உலையை நிச்சயம் விரட்டியே தீரும்.

அரசு அணு உலை திறக்கும் முடிவை எடுக்கலாம். ஆனால் மக்கள் அடுத்தப் போராட்ட வியூ கத்தை வகுப்பதில் உறுதியாய் இருக்கிறார்கள். எந்த தனி நபரை நம்பியோ, தனி நபரை அசிங்கப் படுத்தியோ, வழக்குப் போட்டோ இந்தப் போராட்டத்தில் அரசு வெற்றி பெற முடியாது.

இது மக்கள் போராட்டம் என் பதை அரசாங்கம் புரிந்து கொள்ள úண்டும். இது தனி நப ரால் நடத்தப்படும் போராட்ட மல்ல. இதற்கு 25 ஆண்டு கால வரலாறு உள்ளது. அதன் பரிணாம வளர்ச்சிதான் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

ஆக, 25 ஆண்டு காலமாக அணு உலை எதிர்ப்பை ஒடுக்க முடியாத அரசு, எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் ஒடுக்க முடியாது. இந்தப் போராட்டம் வெற்றி பெறும். ஆனால் அர சுக்கு தற்காலிக வெற்றி என்று அரசாங்கம் ஏமாந்து கொண்டி ருக்கிறது.

- ஃபைஸல்

Comments

1 comment

1
Mari
Thanks for finally talking about >கீற்று - கீற்று

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.