கருநாடக பா.ஜ.க. - குடுமி பிடிச் சண்டையில் முதலமைச்சர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இப்போது முதல்வராக வந்திருப்பவர் ஜெகதீஷ் ஷட்டர். இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர் என்று ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ‘இந்துத்துவ நாத்திகர்’ ஆட்சி, தமது மாநிலத்தில் நிலவும் வறட்சியைப் போக்க மாநிலம் முழுதும் உள்ள 34,000 கோயில்களிலும் ‘வருண ஜெபம்’ நடத்த உத்தரவு போட்டுள்ளது. பார்ப்பனர்களைக் கொண்டு பூஜைகளையும், ஹோமங்களையும் நடத்தப் போகிறதாம். இதற்காக அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.17 கோடி. வறட்சி நிவாரணத்துக்காக நிதி கேட்டு மத்திய அரசு கதவுகளைத் தட்டிக் கொண்டே 17 கோடியை வீண்விரயமாக்குகிறது பா.ஜ.க. ஆட்சி. அரசின் இந்த நடவடிக்கையை சட்டமன்றத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியைச் சார்ந்த சி.எஸ்.புட்டே கவுடா, மகாதேவ பிரசாத் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், துறை அமைச்சராக உள்ள கோட்டா சீனிவாஸ் பூசாரி என்பவர், “நான கடவுளை நம்புகிறேன். வருண பகவானை வேண்டினால் மழை வரும். இந்த முடிவை அரசு திரும்பப் பெறாது” என்று கூறியுள்ளார். ‘மனுதர்ம’ம்தான் பா.ஜ.க வழியாக ஆட்சி நடத்துகிறது!

Comments

2 comments

2
c_natarajan20
வருண ஜபத்துக்கு சக்தி இருக்குமென்றால் ராஜஸ்தான் பாலைவங்களில் மழையைத் தருவித்து சோலைவனங்களாக மாற்ற வேண்டியது தானே. இந்தியாவில் மட்டுமே வருண ஜபம் நடத்தும் இவர்கள் அமெரிக்க ஆப்பிரிக்க இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் வருண ஜபம் நடத்த வேண்டியது தானே. அந்நியச் செலவாணி நம் நாட்டுக்கு கிடைக்குமே.மென் பொருள் இஞ்சினீர்கள் ஈட்டும் டாலர்களை விட நம் நாட்டுக்கு இவர்கள் சம்பாதிக்கலாமே. அந்த நாட்டிலே கேள்வி கேட்பான்.மழை தருவிக்காவிட்டால் விரட்டி அடிப்பான். துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓட வேண்டியது தான்.நம் நாட்டிலே தான் இளிச்ச வாயர்கள் அதிகம். பணத்தை தண்டமாக அழுவார்கள். இவர்கள் மந்திரத்துக்கு சக்தி இருக்குமென்றால் உலகிலுள்ள ஏதேனும் ஒரு பாலைவனத்தில் உட்கார்ந்து ஒரு முப்பது நாள் ஜபம் செய்யட்டும். காஞ்சு கருவாடு ஆக வேண்டியது தான்.
seyed muhammed
துறை அமைச்சர் பூசாரியின் நம்பிக்கை வருண பகவான் மழை பொழிய செய்வார் என்பது;இந்திய அரசியல் சாசனத்தின் எதிர்பார்ப்பு பூசாரி வீட்டில் நம்பிக்கையாளாராக இருக்கட்டும்;ஆட்சியில் அதிகாரத்தில் அரசியல் சாசனத்தை பின் பற்றற்றும்;ஆனால் பூசாரியோ மறுத்து விட்டார்.பூசாரியாகிய நான் எல்லா நிலையிலும் ஹிந்து சனாதானத்தை பின்பற்றுபவன் என அறைகூவல் விடுத்துள்ளார்;
மதசார் பற்ற அரசியல் சாசனத்தை காப்பாற்ற துள்ளி குதிக்கும் உச்ச நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன?
மத்திய ஆளும் மதசார் பற்ற காங்கிரஸீம் அதன் உள் துறையும் ஏன் மெளனம் சாதிக்கின்றனர்?ஒ!ஒ!ஒ!எல்லோரும் ஹிந்துக்களோ!
பிறகு ஏன் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க கூடாது?அறிவியுங்கள் இந்தியா ஒரு ஹிந்து சனாதானத்தை பின்பற்றும் நாடு;
முஸ்லிம்களும்,மனித தன்மையில் நம்பிக்கை கொண்ட நல்லவர்களும் தங்களின் வழியை தேடி கொள்வார்கள்.
வருண பகவான்கள் மழை பொழியும் இந்தியாவில் பூசாரிகள் விமர்சனங்களின்றி வாழலாம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.