புலவர் க.முருகேசன் அவர்களின் இந்தத் திறனாய்வு திராவிடக் கோட்பாட்டாளர்களுக்கேயுரிய விவாத முறையைக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். தனிமனிதத் தாக்குதல், இழிவு செய்தல், கோட்பாட்டு விவாதங்களுக்குள் புகும்போது, தமக்கு வசதியான தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு வாதிடுதல் ஆகியவை ‘திராவிடக் கோட்பாட்டாளர்களுக்கே’ உரிய பண்புகள்.

       முதலில் ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விரும்புகிறேன். கடந்த ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் (04-05-2009), நான் சார்ந்துள்ள இளந்தமிழர் இயக்கம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியது. அப்போராட்டத்தில், நான் உட்பட 65 பேர் கலந்து கொண்டோம். பின்னர் 38 பேர் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டோம். 58 வயது பெண்ணும் சிறை சென்றவர்களில் ஒருவர்.

       ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெரியாரைப் பற்றி தனிப்பட்ட முறையில் இழிவாகப் பேசியதால், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடந்த முற்றுகைப் போராட்டம் அது. எமது இயக்கத்தவர் மட்டுமல்ல, பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர். அந்த வழக்கில் நிபந்தனைப் பிணை பெற்று, தஞ்சையிலிருந்து வாராவாரம் ஈரோடு சென்று நீதிமன்றத்தில் கையெழுத்திட்டவன் நான். இன்னும் வழக்கு நடக்கிறது. போராட்டம் நடத்தியபோது எந்தளவு மனநிறைவும் பெருமிதமும் இருந்ததோ, அதே உணர்வு எனக்கு இன்றும் உள்ளது.

       பெரியாரை மதிப்பது வேறு, அவரைத் திறனாய்வு செய்வது வேறு! அவரது ரசிகர்களாக இருப்பது வேறு.

       எத்தனையோ இனத்தாரை, கோட்பாடுகளைத் தன்னுள் ஏற்று, அவற்றுள் கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ளி வளர்வது வருவது தமிழியம். திராவிடக் கோட்பாட்டிலும் கொள்வனவும் உண்டு. தள்ளுவனவும் உண்டு.

       புலவர் முருகேசன், கற்பு குறித்த தொல்காப்பியர் சூத்திரத்திற்கு, “கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் பெண் என்ன கடைச் சரக்கா?’ என்ற அளவில் ஒரு விமர்சனத்தை வீசுகிறார். கற்பு மணம் என்பது, மானுடவியல் போக்கில், பண்பாட்டுப் பரிணாமத்தில் விளைந்த முறையாகும். பலதார மணம், இணைமணம் ஆகிய முறைகளின் தொடர்ச்சி அது. சுருங்கக் கூறின், குடும்பம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட முறையே கற்பு மணம் ஆகும். திரு.முருகேசன், மேற்கோள் காட்டும் பாடலின் முன்பாதி,

‘கற்பு எனப்படுவது, சடங்குகளோடு புணர ஏற்படுத்தப்பட்ட முறை’ என்று கூறுகிறது. ‘காதலர்கள் தம் விருப்பம்போல் பாலுறவு கொண்டு பிள்ளைகள் பெற்று வரையறைகள் இல்லாதிருந்த காலத்திலிருந்து மாறி, குடும்பம் எனும் அமைப்பை நிலைநாட்ட, முன்னோர் வகுத்த முறை கற்பு’ என்பது அதன் விரிந்த பொருளாகும். இக்கருத்தை,

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப’- என்கிறார் தொல்காப்பியர். ஐயர் என்றால், தலைவர் என்று பொருள் - பார்ப்பன‌ர் அல்லர்!

       ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகள் அதிகரித்த பின்னர், சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் என்பது கருத்து. இன்றும், திருமணம் என்றால் அது கரணம்தான் - சடங்குதான். யாருமறியாது ஆண் - பெண் கூடி வாழ்வதில்லையே! உற்றார் உறவினரைக் கூட்டித்தானே திருமணம் நடக்கிறது! இதுவே கற்பு மணம் ஆகும்.

       கற்பு என்பது, ஆண் - பெண் நிலைத்த குடும்பமாக வாழ வேண்டுமென்று தலைவர்களால்/ ஆன்றோர்களால் கற்பிக்கப்பட்ட முறையாகும். கற்பு என்றால் கற்பிக்கப்பட்டது என்றே பொருளாகும்.

       திரு.முருகேசன் குற்றம் சாட்டும்விதமாக, ‘பெண் என்ன கடைச் சரக்கா?’எனக் கேட்கும் படியான எந்தப் பொருளும் தொல் காப்பியத்தில் இல்லை.

‘கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே’

- என்றால், ‘கொடுப்பதற்குரிய மணமகனையும் மணமகளையும் பெறுவதற்குரியவர்கள் பெறுவது கற்பு மணம்’ என்றுதான் பொருள். தமிழறிந்த யாரும் இதைப் புரிந்து கொள்ளலாம்.

       இப்பாடல் “பெண்ணை மட்டும் கொடுப்பது - பெறுவது’ என்று எழுதப்பட்டதாகக் கற்பனை செய்து கொண்டு, அப்பாடலே ஆணாதிக்கப் பாடல் என்கிறார் திரு.முருகேசன். கற்பு என்ற சொல்லை வைத்துத் திராவிடக் கோட்பாட்டாளர்கள் ஆடிவரும் பொய் ஆட்டம் அறிவுலகிற்குப் பொருந்தாது. ‘கற்பு என்றாலே அது ஆணாதிக்கம்’ என்பது அவர்களது கண்டுபிடிப்பு. இந்த அவதூறு களுக்குத் தொல்காப்பியர் பொறுப்பாக முடியாது. பின்வரும் பாடல் கருத்துகளைப் பார்ப்போம்.

· காதலன் காதலி விரும்பித் தாமே சேர்ந்துகொண்டால், கொடுப்போர் இல்லாமலும் கற்பு மணம் நிகழும் என்கிறது கற்பியல் சூத்திரம்.

· பெண்ணின் காதலை அறிந்து அவளுக்கு மணம் செய்விக்கும் உரிமையும் கடமையும் தாய்க்கு மட்டுமே உண்டு. இதை விளக்கும் பாடல்கள் சங்க இலக்கியங்களில் ஏராளம். காதலனுடன் உடன்போக்கு சென்ற பெண்ணைத் தேடி, தாய் செல்லும் பாடல்கள் மட்டுமே உண்டு. தந்தை சென்றதாக இல்லை. மேலும், தொல்காப்பியர் களவியலில் இதுகுறித்து நிறைய உரைத்துள்ளார். மகள் காதலிக்கும் சேதி அறிந்த தாய், மகளின் காதலனைப் பற்றி, சான்றோர் களிடம் கேட்டுத் தெளிவு பெறுவாள் என்கிறார் தொல்காப்பியர் (களவியல்-26- ‘கிழவோன் அறியா அறிவினள்...’) பெண்ணின் தாய்க்கும் செவிலித் தாய்க்கும் தோழிக்கும் மட்டுமே களவியலி லும் கற்பியலிலும் மிகையான பங்களிப்புகள் உண்டு.

· பெண்ணின் திருமணத்தில்/ காதல் வாழ்க்கையில் தந்தைக்கும் சகோதரனுக்கும் குறிப்பிடத்தக்க இடமே இல்லை என்பதைத் தொல்காப்பியர், “தந்தையும் தன்னையும் முன்னதின் உணர்ப” (களவியல்) என்கிறார். அதாவது, பெண்ணின் காதல் வாழ்க்கை/கற்பு வாழ்க்கை குறித்து இவர்கள் இருவரும் கேள்விப் படுவார்கள். அவ்வளவே. மற்றபடி, அனைத்து உரிமைகளும் பொறுப்பு களும் தாய்க்கும் பிற பெண்களுக்கு மே உண்டு. இதில் ஆணாதிக்கம் எங்கு வந்தது?

       தொல்காப்பியம் மட்டு மல்ல, சங்க இலக்கியங்கள் அனைத் தையும் படித்து ஆய்வு நோக்கில் உணர வேண்டு மெனில், மானுட வியல், பண்பாட்டுப் பரிணாமவியல் அறிந்திருத்தல் வேண்டும். சங்க இலக்கியங்களைப் போகிற போக்கில் கெல்லி எறிய முடியாது.

       இதேபோல், பரத்தமை ஒழுக்கம் குறித்தும் திரு.முருகேசன் திராவிடக் கோட்பாட்டு விளக்கங்கள் கொடுக்கிறார். ‘பரத்தையர் என்போர் விபசாரிகள் அல்லர்’ என்பது என் ஆய்வு முடிவு. எனது “நிலம் பெண்ணுடல் நிறுவனமயம்” நூலில் இக்கூற்று விளக்கப்பட்டுள்ளது. ஆயினும் இக்கருத்தைச் சுருங்கக் கூறுகிறேன். ஆண் - பெண் பாலுறவு வாழ்க்கை கட்டுப்பாடற்று இருந்த காலத்தில் குடும்பம் எனும் அமைப்பும் இல்லை. நிலவுடைமையும் இல்லை. இந்த நிலை மாறத் தொடங்கி, குடும்பமும் நிலவு டைமையும் உருவாகியபோது நிலவிய முறையே பரத்தமை ஆகும். அதாவது, பல்லாயிரம் ஆண்டுகளாக, மணம் புரியாது வாழ்ந்த பெண்களும் ஆண்களும் குடும்பம் எனும் புதிய அமைப்பு முறைக்குள் செல்லும்போது, அனைவரும் இந்த அமைப்பை விரும்பி ஏற்கவில்லை. சிலர் ஏற்றனர்; சிலர் மறுத்தனர். ஏற்றோர் கற்பு மணம் புரிந்தனர். மறுத்தோர் பரத்தமை ஒழுக்கம் நாடினர். பரத்தைப் பெண்கள், பொருளுக்காக/பணத்துக்காக ஆணுடன் உறவு கொண்டதாக எந்தச் சங்க இலக்கியமும் கூறவில்லை. திருமணத்தை விரும்பாத பெண்கள் தாமாக தேர்ந்தெடுத்த வாழ்க்கை அது.

       பரத்தையர்களும் குடும்பத் தலைவியரும் சகோதரிகளாக வாழ்ந்ததற்கான சான்றுகளே சங்க இலக்கியங்களில் மிகையாக உள்ளன.

       தொல்காப்பியரும் இதைப் பதிவு செய்துள்ளார். குடும்ப ஆதிக்கம் பெண்கள் கையில்தான் இருந்தது என்பதற்கான சான்றாகவும் இதை அணுகலாம். பரத்தையர் வீட்டிற்குச் சென்று திரும்பும் கணவனை வீட்டு வாசலிலேயே நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்கும் பெண்ணை சங்க இலக்கியங்கள் முழுதும் காணலாம்.

       “பரத்தை வீட்டிற்குச் சென்று திரும்பும் கணவன், மனைவி யின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான். அவனைத் தூக்கி விடும் மனைவி, ‘நீ இம்மாதிரி காலில் விழுவதை என் தங்கையராகிய பரத்தையர் கண்டால் சிரிக்க மாட்டார்களா? எனக் கேட்பாள்’ என்கிறார் தொல்காப்பியர். (கற்பியல் - 6).

       இந்த நிலை எதைக் குறிக்கிறது? மண வாழ்க்கை வேண்டுமென்று விரும்பித் தேர்ந் தெடுத்த ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்துகின்றனர். இதில், ஆண் மண வாழ்க்கையிலிருந்து விலகி, மண வாழ்க்கையை விரும்பாது வாழும் பெண்களுடன் பாலுறவு கொள் கிறான். இதை மனைவி கண்டிக் கிறாள். இது விபசாரம் அல்ல. பரத்தையர்கள், ஆண்களின் பாலுறவுப் பதுமை களாக நடத்தப் பட்டார்கள் என்பதற் கான சான்றும் அல்ல இது. திராவிடக் கோட்பாட்டாளர்கள் கதைகட்டுவது போல், ஆணாதிக்கச் சமூகம் நிலவி யிருந்தால், பரத்தை வீட்டுக்குப் போய்த் திரும்பிய ஆண் மனைவி யின் காலில் ஏன் விழ வேண்டும்?

       பெரியாரின் கொள்கைகளை ஏற்ற திராவிடக் கோட்பாட்டாளர்கள், பரத்தமை ஒழுக்கத் தை ஏன் எதிர்க்க வேண்டும்? “குடும்பம் என்பதே தேவையற்ற ஒன்று” என்பதுதானே பெரியாரின் கொள்கை!

       பெரியாரின் வார்த்தை களிலேயே இதற்கான விளக்கத்தைக் காணலாம்.

       “...திருமண முறை எதற்காக எப்போது ஏற்பட்டது எனப் பார்ப்போம். ஆணின் மீது பெண் ணுக்கு எப்படி ஆதிக்கம் இல்லாமற் போய்விட்டது என்பது குறித்துச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம்... தனியுடைமைச் சுதந்திரம் இல்லாத போது தனக்கே பிள்ளை பிறக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் உதித் திருக்க இடமே இல்லை. என் றைக்குத் தனக்கென்று பொருள் சேமித்து வைத்துக்கொள்ள உரிமை ஏற்பட்டதோ, அதன்பிறகுதான் திருமணமுறையும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

....தனி உடைமை இல்லாத ரசியா போன்ற நாடுகளில் பெண்கள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந் திருப்பதை நாம் பார்க்கலாம். தனி உடைமையில்லாத நாட்டில் திருமணமுறை இருக்காது; வாழ்க்கை ஒப்பந்தந்தான் இருக்கும்.

(விடுதலை - 11-10-1948)

       பெரியாரைப் பொறுத்த வரை, திருமணம் என்பதே, ஆணாதிக்கத்தனமானது. அப்படி யானால், பெண்களும் ஆண்களும் எவ்விதமான வாழ்க்கையை மேற் கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கு கோட்பாட்டு அடிப் படையிலான விளக்கம் திராவிடக் கோட்பாட்டாளர்களால் இதுவரை முன்வைக்கப்படவில்லை. இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீர்வு கண்டவர்கள் தமிழர்கள். கற்பு மணம், பரத்தமை ஒழுக்கம் ஆகிய இரு பிரிவினரையும் சமமாக அங்கீகரித்தது தமிழர் மரபு. பரத்தையர் என்பதால், அவர்களைப் பாலியல் அடிமைகளாக ஆண்கள் நடத்தியதாகவோ, அவர்கள் பொரு ளுக்காகத் தமது பாலுறவை விற்றதாகவோ ஒரு சான்றும் இல்லை.

       மேலும், திருமணம் என்பதே ஆணாதிக்கத்தனமானது என்ற கருத்தும் தமிழர் மரபு சார்ந்தது அன்று. திருமணத்தை முடிவு செய்யும் இடத்திலேயே பெண்கள் தான் இருந்தனர் என்பதை முன்னர் கண்டோம். முறையான ஆய்வு எதுவும் இல்லாது, தமிழர் மரபை இழிவுசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கோடு வார்த்தைகளை வீசுவது திராவிடக் கோட்பாட்டாளர்களின் வழக்கம்.

       குடும்பம் எனும் அமைப் புக்குள் புகாமல், வாழ்ந்த பரத்தை யரைப் பாராட்ட வேண்டிய திராவிடக் கோட்பாட்டாளர்கள், அவர்களை விபசாரிகளாகக் கருதி, தொல்காப்பியச் சமூகமே ஆணாதிக்க மானது என முழங்குவது ஏனோ?

       கற்பு மணம் எனப்படும் திருமண முறையும் தவறு, திருமணம் புரியாது வாழ்ந்த பரத்தமையும் தவறு என்றால், எது சரி என்பதையாவது திராவிடக் கோட்பாட்டாளர்கள் உரைப் பார்களா?

       ஆங்கிலத்தில் ஃபேமிலி (ஞூச்ட்டிடூதூ) எனும் சொல், கிரேக்கச் சொல்லில் இருந்து பறந்தது. “அடிமைகளின் தொகுப்பு’ என்று இதற்குப் பொருள். கிரேக்கத்தில், ஆண் பல பெண் அடிமைகளை வைத்திருந்தான். அவர்களைப் பொறுத்தவரை அது தான் குடும்பம். ஊச்ட்டிடூதூ(ஃபேமிலி) என்ற சொல்லைக் கொண்டுள்ள ஆங்கிலம் உயர்ந்த மொழி, குடும்பத்தை இல்லறம் என்று உரைக்கும் தமிழ் காட்டுமிராண்டி மொழி! - இதுதான் திராவிடக் கோட்பாடு.

‘தனிச் சொத்துடைமையை ஒழித் தால்தான், திருமணம் ஒழியும்’ என்ற பெரியாரின் கொள்கையை இன்றுள்ள திராவிடக் கோட் பாட்டாளர்கள் ஏற்கின்றனரா? அவ்வாறு ஏற்பதாக இருந்தால், தனிச் சொத்துடைமையை,ஒழிப்பது எப்படி என்ற செயல் திட்டம் அவர்களிடம் உண்டா?

       தமிழ்த் தேசப் பொது வுடைமைக் கட்சிக்கு அவ்வாறான தத்துவ அறிவும் செயல்திட்டங்களும் உண்டு.

       தமிழ்ச் சமூக வரலாற்றில், தனிச் சொத்துடைமை, அரசு உருவாக்கம் ஆகியவற்றின் வழியே பொருளாதார முறைகளின் மாற்றம் எப்படி நடந்தது என்பதை விளங்கிக் கொள்ளாமல், இன்றைய சிக்கல் களுக்குத் தீர்வு கூற முடியாது. பரத்தையர், வரைவின் மகளிர், பொருட் பெண்டிர் - ஆகிய பிரிவுச் சொற்களுக்கிடையே உள்ள பொருள் வேறுபாடு, கால வேறுபாடு ஆகியவற்றை உணர்ந்து உரைத்தலே ஆய்வு. பொருட் பெண்டிர் முறை சங்கப் பிற்காலத்தில் ஏற்பட்டதாகும். பொத்தாம் பொதுவாக, பரத்தமை இருந்தது, விபசாரம் இருந்தது என்றால், அது அவதூறு!

       ‘மேலோர் -கீழோர்’ எனும் சொற்களைக் கொண்டு, “தமிழர் மரபு ஏற்றத் தாழ்வு மிக்கது” என்கிறார் திரு.முருகேசன். குறிப்பிட்ட அந்தப் பாடலில், கற்பு மணம் யாருக்கு உரியது என்று விளக்குகிறார் தொல்காப்பயர்.

       “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

       கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே” என்கிறார். இதில், மேலோர் மூவர் யார் எனப் பார்த்தால்தான் உண்மையான பொருள் புரியும். அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகியவையே நான்கு பிரிவுகள். இவற்றில், முதல் மூன்று பிரிவினரான அரசர், அந்தணர், வணிகர் ஆகியோருக்கு உரிய கற்புமண முறை, வேளாள ருக்கும் ஆகிய காலமும் உண்டு’ என்பது இப்பாடலின் பொருள். இதில், மேலோர் மூவர்- கீழோர் என்பது முதல் மூன்று பிரிவினர் மற்றும் நான்காம் பிரிவினர் என்ற வரிசை பிரித்தலே அன்றி, பாகுபாடு அல்ல.

       கட்டுரை எழுதும் போது “மேலது, கீழது” என்று குறிப்பிடும் முறை உண்டு. இதன் பொருள் முன்னர் சொன்னது, பின்னர் சொன்னது என்பதாகும்; மேலானது, கீழானது என்பது அன்று.

       இது பாகுபாடுதான் என்றால், வேளாளரைக் கீழ்நிலை யில் வைத்திருந்ததா தமிழ்ச் சமூகம் என்ற கேள்விக்கு திரு.முருகேசன் விடையளிக்க வேண்டும். அவ்வாறு விளக்குவதே ஆய்வு. ஒரு சொல்லை மட்டும் பிடித்துக்கொண்டு, அச் சொல் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டது எனப் பாராமல், அவதூறுகளை வீசுவது முறையல்ல.

       நாமறிந்த தமிழர் வரலாற்றில், வேளாளருக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. வேளாளர்களைத் தமிழ்ச் சமூகம் கீழ்நிலையில் வைத்திருந்தது என்ற கருத்தை முன்வைத்தால், தமிழ் ஆய்வுலகம் ஏற்காது. திராவிட “ஆய்வுலகத்திற்கு” இது உவப்பான கருத்தாக இருக்கலாம்.

       “திராவிடம்’ என்னும் சொல் லுக்கு திரு.முருகேசன், பல விளக்கங் களைக் கொடுக்கிறார். அவை அனைத்துமே, “பிற மொழியினர் தமிழரைத் திராவிடர்’ என்று அழைத்தனர்’ என்ற முடிவில் போய்த்தான் நிற்கின்றன. தமிழர் தங்களைத் தமிழர் என்று அழைக்கும்போது, பிறர் திராவிடர் என்று அழைத்தால் என்ன வேறு பெயரிட்டு அழைத்தால் என்ன? நம் இனத்துக்கு வேற்று இனத்தவர்தான் பெயர் சூட்ட வேண்டுமா?

       ‘திராவிடர் என்றால் பார்ப்பன‌ர் வரமாட்டார்’ என்ற திராவிட வாதம், முற்றும் முழுதாக மறுக்கப்பட்டுவிட்டது. இதே தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் 2010 ஏப்ரல் இதழில், பேரா.த.செயராமன், ‘திராவிடர் என்போர் தென்னிந்திய பார்ப்பன‌ரே’ என்ற ஆய்வைச் சான்று களுடன் வைத்துள்ளார். மார்ச்சு ஏப்ரல் இதழ்களில் வந்துள்ள (த.தே.த.க.) எனது கட்டுரைத் தொடரிலும் இதற்கான சான்றுகள் வைக்கப்பட்டுள்ளன. ‘இது யாரோ திரித்துவிட்ட கதை’ என்கிறார் திரு.முருகேசன். கதை திரிப்பதற்கா, இத்தனை வரலாற்றுச் சான்றுகள் முன்வைக்கப் படுகின்றன? ஒரு சான்றையேனும் மறுக்கும் ஆய்வு திராவிடக் கோட் பாட்டாளர்களிடம் உண்டா?

       திராவிடர் என்றால் “தென்னிந்திய பார்ப்பன‌ர்” என்று நிறுவ, பிரிட்டானிகா என்சைக்ளோ பீடியாவில் இருந்தும் பேரா. த.செயராமன் சான்று காட்டியுள்ளார். பிரிட்டானிகா என்சைக் ளோபீடியா, திராவிடத்துக்கு உவப்பான ஆங்கில மொழிக் களஞ்சியம்தானே! உண்மையைச் சொன்னால் ஆங்கிலமும் கசக்குமோ!

       திராவிடம் என்ற நிலப் பகுதியில் வாழ்ந்ததால், ஆரியப் பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்று புதுவிளக்கம் தருகிறார். தஞ்சாறூரில் வாழ்பவரைத் ‘தஞ்சாறூரான்’ என்று அழைப்பது போல் தான் இது என்கிறார். தஞ்சாறூரான் என்று சொல்வது அவ்றூரில் வசிக்கும் எல்லா சாதி மக்களையும் குறிக்கும். ஆனால், திராவிடர் என்ற சொல் தென்னாட்டில் வசிக்கும் பார்ப்பன‌ர்களை மட்டும் தான் குறிக்கும் என்று ஏராளமான தரவுகளுடன், பேரா. த.செயராமனும் நானும், தமிழர் கண்ணோட்டம் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளோம். எனவே, அவர் சொல்லும் தஞ்சாறூரான் உவமை பொருந்தாத ஒன்று.

       பெரியார், தமிழ்த் தேசிய விடுதலைக் கருத்தியலில் தெளிவாகச் செயல்படவில்லை. அவர் முரண் பாடுகளுடன் இயங்கினார். தனித்தமிழ்நாடு வேண்டும் என்பார். தேசியம் என்றாலே பாசிசம் என்பார். இனப்பற்றோ மொழிப் பற்றோ எனக்கில்லை என்பார். கன்னியா குமரி மாவட்ட அளவு கிடைத்தாலும், வர்ணாசிரமம் இல்லாத நாடு இருந்தால் போதும் என்பார். தமிழ் மொழியை மறுத்து அவர் பேசியதும் எழுதியதும் ஏராளம். ஆகவே, தமிழ்த் தேசிய விடுதலை அரசியலுக்குப் பெரியாரைப் பின்பற்ற முடியாது என்பது என் கட்டுரையின் சாரம். ‘தனித் தமிழ்நாடுதான் பெரியாரின் இலக்காக இருந்தது’ என்கிறார் திரு.முருகேசன். பெரியாரது இலக்கு தனித் தமிழ்நாடு தான் என்றால், அவரது பாதையில் பயணிக்கும் எந்த இயக்கம் ‘தனித் தமிழ்நாடு அமைப்பது எமது கொள்கை’ என்று அறிவித்து உள்ளது என திரு.முருகேசன் விளக்க வேண்டும். திராவிட இயக்கங்கள் அனைத்துமே, இந்திய தேசியத்தின் கிளையாகச் செயல்படுகின்றன. தமிழக அரசுக்கும், தில்லி நாடாளு மன்றத்துக்கும் வாக்கு சேகரிக்கும் அல்லது வாக்குக் கேட்கும் கட்சி களாகத்தானே செயல்படு கின்றன! இதில் திராவிடத்திற்கு எங்கிருந்து, “தனித் தமிழ்நாடு” வந்தது?

       மொழிப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் திராவிட இயக்கத்தவர் அல்லர். மொழிப்போராட்டத்திற்கு அடித் தளமும் உந்துவிசையும் அளித்தது தி.மு.க. தான். மொழிப்போர் தீவிரமடைந்த பிறகு, ‘நடக்கும் கலவரங்களுக்கும் தி.மு.கவிற்கும் சம்பந்தமில்லை’ என அறிவித்தவர் அண்ணாதானே! களத்தில் பலியான 400க்கும் மேற்பட்ட தமிழ் மறவர்களைச் சொந்தம் கொண் டாடக்கூட ஒரு கட்சி இல்லை என்ற நிலை உருவானது யாரால் என்பதை வரலாறு அறிந்தோர் உணர்வர். எந்தக் காங்கிரஸ் கட்சி அம் மறவர்களைக் கொன்றதோ, அதே கட்சியுடன் கூட்

       இருமொழிக் கொள்கையை உருவாக்கி தமிழை ஆங்கிலம் அடிமைப்படுத்த வழிசெய்ததுதான் அண்ணாவின் மொழிக் கொள்கை. இந்தியும், ஆங்கிலமும் எங்களுக்கு இணைப்பு மொழி அல்ல. தமிழே இணைப்பு மொழி என்ற ஒரு மொழிக் கொள்கை தமிழ்த் தேசியர்களால் உருவாக்கப் பட்டதாகும்.டணி அமைத்து வாக்குக் கேட்டதுதானே திராவிட இயக்கங்களின் வரலாறு!

       ‘திராவிடக் கட்சிகள் பார்ப்பன‌ ஜெயலலிதாவிற்கு வாக்கு கேட்பது ஏன்?’ என்ற கேள்விக்கு திரு.முருகேசன் அளித்துள்ள விடையின் சாரம், “கலைஞர் கருணாநிதியை எதிர்த்து அரசியல் நடத்த, இழந்தவற்றை அவரிடமிருந்து மீட்க” என்பதே ஆகும்.

       ‘தமிழர் என்றாலே அது தவறு. அப்படிச் சொன்னால் பார்ப்பன‌ர் வந்து விடுவார்கள்’ என்று கதைகட்டி, இன அடையாளத்தையே மறைத்த இயக்கத்தின் பிரதிநிதி, பார்ப்பன‌ர் ஒருவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தக் கூறும் காரணம் இதுதான்! பார்ப்பன‌ர் தமிழரை ஆட்சி செய்யத் துணைபோவதும், பார்ப்பன‌ ஆதிக்கத்தை எதிர்க்கத் தானோ?

       சேரி என்றால், சேர்ந்து வாழும் இடம் என்று பொருள். சேரி என்றாலே தாழ்த்தப்பட்ட சாதியினர் வாழும் இடம் என்று கதை கட்டப்படுகிறது. இதை மறுக்கும் சான்றுகளை என் கட்டுரையில் முன் வைத்தேன். திரு.முருகேசன், ‘மேல்சாதிக்காரன் ஒருவனாவது கீழ்சாதிக்காரன் சேரியில் குடியிருந்தானா?’ எனக் கேட்கிறார். தமிழர் அரசாண்ட காலம் வரை, பள்ளர், பறையர், வள்ளுவர், நாவிதர், வண்ணார் உள்ளிட்ட அனைத்துமே குலங்களாகத்தான் இருந்தன. சாதிகளாக இல்லை. அவற்றின் மீது சாதி ஆதிக்கம் திணிக்கப்படவில்லை என்பது எனது கருத்து. சோழர்காலத்திலிருந்த வலங்கை இடங்கைப் பிரிவினருக்கும் இது பொருந்தும்.

       பார்ப்பனருக்கும் சேரி இருந்தது. ஆனால், பார்ப்பனர்கள் பறைச் சாதியினரைத் தீண்ட மாட்டோம் என்று சொல்லவில்லை. அதற்கான உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

       சிலப்பதிகாரம் கூறும் புறஞ்சேரியில் பார்ப்பனர்களும் பாணர் குலத்தவரும் கலந்து வாழ்ந்தனர் என்பதையும் எனது கட்டுரையில் தெளிவாகக் குறிப்பட்டிருந்தேன். (சான்று: புறஞ்சேரி இறுத்த காதை) சாதி ஆதிக்கமே இல்லாத சமூகத்தில் மேல்சாதிக்காரர் கீழ் சாதிக்காரர் என்று பிரித்து, அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இருந்தது; இவர் அங்கு வாழமாட்டார். அவர் இங்கு வாழமாட்டார் என்று கதைகட்டும் திறனும் மரபும் தமிழியக் கோட் பாட்டாளனான எனக்கு இல்லை.

       சேரிகள் என்பவை, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான குடியிருப்பு களாக மாற்றப்பட்டது விஜயநகரப் பேரரசுக் காலத்தில்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி, தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு 2007)

       ஆனால், கிருதீண தேவராயர் மீது பழி விழாமல் காக்க திரு. முருகேசன் துடிப்பது ஏன் என்று விளங்கவில்லை.

       ‘கிருதீணதேவராயர் தன் மகனைக் கொன்ற சாளுவ திம்மா என்ற பார்ப்பன‌ அமைச்சரைக் கொல்வதற்கு ஆணை பிறப்பக்க வில்லை’ என்ற சான்றை அவர் கேலி செய்கிறார். கிருதீண தேவராயர் ஆட்சிக் காலத்தில் எந்த பார்ப்பன‌ரும் எந்தக் குற்றத்திற்காகவும் தண்டிக்கப் படவில்லை என்ற வரலாற்றை முன்வைத்து அதற்கான முகாமைச் சான்றாகவே, சாளுவதிம்மா குறித்த செய்தியைக் குறிப்பட்டேன். ஓர் அரசன் தன் நாட்டில் எந்த பார்ப்பன‌ரும் தண்டிக்கப்பட மாட்டார் எனச் சட்டம் இயற்றினார் என்ற உண்மை திரு.முருகேசனுக்குச் சுடவில்லை. மாறாக, ‘ராஜராஜ சோழன் தன் அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்ற பார்ப்பன‌ர்களைத் தண்டிக்கவில்லை’ என்று தமிழ்ப் பேரரசன் மீது பாய்கிறார். இதுதான் திராவிடப் பற்றோ!

       தமது வாதத்தை வலுப்படுத்த திரு.முருகேசன், நீலகண்ட சாஸ்திரியைத் துணைக்கு அழைக் கிறார். சோழர் காலம் குறித்த பல தவறான முடிவுகளை முன் வைத்தவர் நீலகண்ட சாஸ்திரி. “சோழர் காலத்தில் பார்ப்பன‌ர்களுக்கு சிறப்பான மரியாதை அளிக்கப் பட்டது” என்று பொய்யாக, தவறாக எழுதியவர் இவர். தமது சாதியின் பெருமையைப் போலியாக வடித்துக் கொண்டவர் என்றும் சாஸ்திரி மீது ஆய்வுலகில் குற்றச் சாட்டு உண்டு.

       ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தோர் குறித்த உடையார் குடிக் கல்வெட்டுகள் பற்றி ஆய்வு செய்த முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியம், கூறும் கருத்துகள் சிலவற்றைக் காண்போம்.

· ‘உடையார்குடிக் கல்வெட்டுச் சாசனம் என்பது கரிகாலனைக் கொலை செய்தவர்கள் யாவர் என்பதை ஒரு வரியில் கூறும் கல்வெட்டே அன்றி, அக்கொலை பற்றிய பிற செய்திகளையோ அல்லது அவர்களுக்குக் கொடுக்கப்பெற்ற தண்டனை பற்றியோ விவரிக்கும் சாசனமாகாது’

· ‘இராஜராஜ சோழன் குற்றம் செய்த பார்ப்பன‌ர்களைக் கொல்லாது விடுத்தான் என்பதும் சான்றுகள் இன்றிக் கூறப்பெறும் கூற்றாகும். இராஜராஜன் மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாச்சரியனுடன் போரிட்டதைக் கூறும் சாளுக்கிய நாட்டுக் கல்வெட்டுகள் அவன் அந்நாட்டில் பார்ப்பன‌ர்களைக் கொன்றவன் என்று குறிப்பிடுகின்றன’

(உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை, முனைவர் குடவாயில். பாலசுப்ரமணியன் /கோயிற்களஞ்சியம் வெளியீடு, தஞ்சை-7)

       ‘பிரமதேயங்களில் அரசன் ஆதிக்கம் செல்லாது’ என்பதும் நீலகண்ட சாஸ்திரியின் கற்பனைக் கதைதான். இதுகுறித்த எண்ணற்ற சான்றுகளை, முனைவர் மே.து.ராசு குமார் எழுதிய “சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்” எனும் நூலில் இருந்து காட்டியுள்ளேன்.

       திரு.முருகேசன், நீலகண்ட சாஸ்திரியைத்தான் ஆய்வாளராக மதிப்பார் போலும்!

       திராவிடக் கோட்பாட்டாளர்கள் பொதுவாகவே, பார்ப்பன‌ரல்லாத ஆய்வாளர்களின், குறிப்பாக தமிழிய ஆய்வாளர்களின் முடிவு களை மதிப்பதில்லை. அதன் தொடர்ச்சியே இது.

       திராவிடக் கட்சிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கோரியதையும், வழங்கியதையும், சாதி இழிவுகளுக்கு எதிராகப் பரப்புரை செய்ததையும் தனிப் பெரும் சாதனையாக திரு.முருகேசன் கூறுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு கூட, பெருமைப்பட்டுக் கொள்ள அதன் ஆட்சிக்கால சாதனைகளும் விடு தலைப் போராட்ட கால சாதனை களும் உண்டு. தீண்டாமைக்கு எதிராக காந்தியாரின், காங்கிரசாரின் பரப்புரையும் போராட்டங்களும் நடந்துள்ளன.

       ஆங்கிலேயர் ஆட்சியில் கூட மக்களுக்கு சில நன்மைகள் நடந்துள்ளன.

       கோட்பாடுகள் குறித்து திறனாய்வு செய்யும் போது, காங்கிரஸ் மற்றும் ஆங்கிலேய ஆட்சிகளை எவ்வாறு வரை யறுப்பது? காங்கிரஸ் பார்ப்பனியச் சார்புள்ள இந்தியத் தேசியக் கட்சி என்றும் அது தமிழ்த் தேசியத்திற்குப் பகை சக்தி என்றும் வரையறுக்க வேண்டும்.

       ஆங்கிலேயர் ஆட்சி ஏகாதிபத்திய நலன் கொண்ட காலனியக் கோட்பாடு கொண்டது என்று திறனாய்வு செய்தால் அவ்வாட்சிகள் செய்த சில நன்மைகளைக் காட்டிக் குறுக்குச்சால் ஓட்டுவது தர்க்கமன்று.

       திராவிட இயக்கம் தந்த இட ஒதுக்கீடு மட்டும் இல்லை யென்றால், ‘செந்தமிழன் எங்காவது பண்ணையில் கிடைமாடு மேய்த்து வயிறு கழுவிக் கொண்டிருப்பார்’ என்கிறார் திரு.முருகேசன்.

       நான், பி.காம் மற்றும் முதுகலைத் தமிழ்ப் பட்டம் பெற்றுள்ளேன்.

       இன்று சொந்த மண்ணில் இயற்கை வேளாண்மை செய்கிறேன். என் தோட்டத்தில் ஆடு, மாடுகளும் உண்டு. அவற்றை மேய்ப்பதில் பெருமையே தவிர, இழிவு இல்லை.

       நான் மட்டுமல்ல, என்னைவிட படித்த பலர் கூட பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை உதறிவிட்டு இயற்கை வேளாண்மை யில் ஈடுபட்டு வருகின்றனர்.

       கிராம வாழ்க்கையை, வேளாண்மையை, ஆடு, மேய்த் தலை இழிவாகப் பேசுவது முதலாளியவாதிகளுக்கு மட்டு மின்றி, திராவிடக் கோட் பாட்டாளர்களுக்கும் வழமை யான ஒன்று.

       நவீனம், முன்னேற்றம் என்ற பெயர்களில் மேற்கத்திய வாழ்முறையை உச்சி மேல் வைத்து பாராட்டுவதும், இவர்களது இயல்பு. புலவர் முருகேசனிடமும் அது வெளிப்படுகிறது.

Pin It