கீற்றில் தேட...
இயற்கை & காட்டுயிர்கள்
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஆர்க்டிக் பகுதிகளில் பெரிய மரம் செடி கொடிகள் கிடையாது. ஏதோ கொஞ்சம் குற்றுச் செடிகள், பூண்டுகள், சின்ன சின்ன மூலிகைகள், லைக்கன்ஸ் மற்றும் பாசிகள் நிறைய உண்டு. இவைகள் இணைந்ததுதான் துந்திரா பிரதேசம். வடக்கே செல்லச் செல்ல, தாவரங்களைப் பராமரிக்க வேண்டிய வெப்பம் மிகக் குறைவு. அதன் அளவு, அடர்வு, உற்பத்தி, வகைகள் என அனைத்தையும் குளிர் காலி செய்து விடுகிறது. இங்கு வளரும் குற்றுச் செடிகளும் கூட அதிக பட்சம் 2 மீ உயரம் வரைதான் இருக்கும். லைக்கன்ஸ் மற்றும் பாசிகள்தான் அடர்வாக உருவாகின்றன. அதன் பெயர் செட்ஜ்ஜஸ்(sedges). ரொம்ப குளிரான பகுதிகளில், தரை மொட்டையாய் இருக்கும் சில புற்கள் இருக்கலாம். ஆர்க்டிக் பாப்பி என்ற மஞ்சள் நிற பூ பூக்கும் செடி உண்டு.
துந்திரா பகுதியில் தாவர உண்ணிகளும் உண்டு. துருவ முயல், லெம்மிங் (Lemming), புனுகு எருது, கலைமான்கள் உண்டு. துருவ முயல் குளிர் அதிகமாகும் காலங்களில் தரைக்கு அடியில் குழிபறித்து உறங்கும். காது மட்டும் கொஞ்சம் நீளமாக இருக்கும். புனுகு எருதின் உடலிலிருந்து புனுகு வாசனை வரும். இந்த வாசனை பெண்ணைக் கவருவதற்காகவே. ஆனால் இந்த விலங்குகளை எல்லாம், ஆர்க்டிக் நரியும், ஓநாயும் வேட்டையாடி உண்ணும். துருவக்கரடியும் கூட மற்ற விலங்குகளை அடித்து உண்ணும். ஆனாலும் கூட பொதுவாக துருவக்கரடிக்கு, கடல் வாழ் விலங்கினங்களின் மேல்தான் கொள்ளைப் பிரியம். கடலிலும், பனிப்பகுதிக்குள்ளும் நுழைந்தே வேட்டையாடும்.
ஆர்க்டிக் நரி வெள்ளையாகவே இருக்கும். பொதுவாக ஆர்க்டிக் பகுதியில் வாழும் அனைத்து விலங்குகளும் வெள்ளையாகத்தான் இருக்கின் றன. துருவ நரிக்கு அடர்த்தியான தோலும், அதன் கீழே கொழுப்பும், தோலின் மேல் அடர்வான நீண்ட முடியும், குளிர் மற்றும் பனிக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. இது பொதுவாக லெம்மிங் (lemming), வோல் என்னும் சிறிய கொரிப்பான், முட்டைகள், போன்றவற்றை சாப்பிடும். சமயத்தில் தாவரங்களையும், பெர்ரியையும் விதைகளையும் கூட உண்ணும். உணவு அதிகம் கிடைத்தால் பனித் தரையில் பதுக்கி, பாதுகாப்பாக வைத்திருந்து உண்ணும். அதே சமயம் உணவுத் தட்டுப்பாடு என்றால், மற்ற விலங்குகள் விட்டுச் சென்ற உணவையும், பெரிய விலங்குகளின் கழிவுப் பொருட்களையும்/மலத்தையும் கூட சாப்பிடும்.
ஆர்க்டிக்கில் வாழும் லெம்மிங் என்னும் கொரிப்பான் சிறியது. 30 -110 கிராம் எடைதான் இருக்கும். 7 -15 செ. மீ நீளம் இதன் உடல். உடல் சிறிதாக வால் நீளமானதாக இருக்கும். இவை தாவர உண்ணிகள். மற்ற துந்திர விலங்குகள் போல இவை குளிர்கால உறக்கம் மேற்கொள்வதில்லை. எந்த நேரமும் துறுதுறுதான். புல்லைப் பறித்து முன்னெச்சரிக்கையாக சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆர்க்டிக் பகுதியில் பறவைகளும் காணப்படுகின்றன. இங்குள்ள கடல் வாழ் விலங்குகள் இப்பகுதிகளுக்கு மட்டுமே உரித்தானவை. வேறு எந்த பகுதியிலும் காணப்படுவதில்லை. சீல், (கடல் பசு ) வால்ரஸ்(கடல் சிங்கம்), பலீன் திமிங்கலம், வெள்ளைத் திமிங்கலம் நீலத் திமிங்கலம் என்ற பெரிய கொலைகார திமிங்கலம் மற்றும் மேல்தாடை நீண்டு தந்தமான நார் திமிங்கலம் என ஏராளமான விலங்குகள் ஆர்க்டிக் கடலில் வாழ்கின்றன. நார்த்திமிங்கலத்தின் உடல் 5 மீ நீளம். ஆனால் இதன் தந்தம் சுமார் 3 மீ நீளம் உள்ளது.
அண்டார்க்டிகாவில் வாழும் வளர்ந்த நீலத் திமிங்கலம் சாப்பிடத் துவங்கினால் ஒரு நாளில் சுமார் 3.6 - 4 டன் உணவு உட்கொள்ளும். தொடர்ந்து 6 மாதம் சாப்பிட்டு விட்டுப் பின்னர் 6 மாதம் பட்டினி கிடக்கும். இது ஒரு நாளில் உண்பதை, ஒரு மனிதன் 4 ஆண்டுகள் நிறைவாக உண்ண முடியும். இங்கு ஒரு வினோதமான மீன் உள்ளது. அதன் பெயர் ஐஸ் மீன் ( Ice Fish). இதன் இரத்தத்தில் சிவப்பணு கிடையாது. இங்குள்ள குளிர்ச் சூழலில் எளிதில் நீரிலேயே ஆக்சிஜன் கரைந்து விடுவதால் அப்படியே ஆக்சிஜனை இந்த மீன் எடுத்துக் கொள்கிறது. இது மனத்தைக் கொள்ளை கொள்ளும் வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் செவுள் கூட வெள்ளைதான். அண்டார்க்டிகாவின் தரை விலங்கில் மிகப் சிறியது என்று சொல்லிக்கொள்ளக் கூடியது ஒரு பூச்சிதான். அதன் அளவு 1.3 செ. மீ தான். அதனால் பறக்க முடியாது. அண்டார்க்டிக்காவில் எல்லா விலங்கினங்களும் கடலில்தான் வசிக்கின்றன.
அண்டார்க்டிக்காவில் 17 வகை பென்குவின்களும், 35 வகை பறவைகளும், 11 வகை டால்பின்களும், 6 வகை சீல்களும், 8 வகை திமிங்கலங்களும் கடலில் வாழ்கின்றன. இந்த விலங்குகள் எல்லாவற்றையும் நீங்கள் அருகில் போய் பார்க்கலாம். மனிதனைப் பார்த்து பயந்து ஓடிவிடாது. இதனைப் போய் பார்ப்பதற்கு உகந்த நேரம் டிசம்பர், ஜனவரி மாதங்கள் தான். கடற்கரை ஓரங்களில் திமிங்கலங்கள் அணிவகுத்து நிற்கும். சீல்கள் பார்க்கவும் இதுதான் சரியான தருணம். இப்போதுதான் பெங்குவின்கள் முட்டையிட்டு, அடை காத்து குஞ்சு பொரிக்கும். பேபி பென்குவினை, அது ஓடி விளையாடுவதை வசந்த காலத்தில் (பிப்ரவரி, மார்ச்) பார்க்கலாம். ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு மாதிரி அண்டார்க்டிகா அழகாக காட்சி அளிக்கும். ஒரு நாளில் கூட, ஒவ்வொரு மணி நேரமும் வேறு வேறு வகையில் அழகு கொப்பளிக்கும்.
ஆர்க்டிக் டெர்ன் (Arctic Tern) என்ற குட்டிப் பறவைதான் உலகிலேயே அதிக தூரம் வலசை வரும் பறவையாகும். இது ஆர்க்டிக் வட்டமான துந்திராவில்தான் இனப்பெருக்கம் செய்கிறது. எங்கிருந்து எங்கு வலசை போகிறது தெரியுமா? வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் பறந்து ஓடி விடுகிறது. இதன் தூரம் எவ்வளவு என்று சொன்னால் மயக்கம் போட்டுவிடுவீர்கள். சுமார் 35,000 கி. மீ. தொலைவை. ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் இது. ஆனால் இந்த பறவையின் அளவு சுமார் ஒரு அடி நீளம்தான். இந்த அற்புதப் பறவை, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நம்மிடையே சில மாடுகளுக்கு சிவப்பு வண்ணம் பிடிக்காது என்று ஒரு நம்பிக்கை உலவி வருகிறது. அது உண்மை என்பதுபோல, காளை விரட்டு விளையாட்டுகள் இங்கும், அயல்நாடுகளிலும் கூட நடக்கின்றன. பல ஊடகங்களும் இந்தப் பொய்யை பலமாக விதைத்து வருகின்றன. பாலுட்டிகளில், குரங்கினம் மற்றும் மனித இனத்துக்கு மட்டும் தான் வண்ணம் அறியும் கண்கள் உள்ளன. ஆடு, மாடு, நாய் போன்ற எந்த பாலூட்டியும் வண்ணங்களை உணர முடியாது. அவை கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணத்தில் மட்டுமே பொருட்களைப் பார்க்க முடியும். நம் கண்களில், வண்ணம் மற்றும் கருப்பு வெள்ளை பார்க்க கண் திரையில் குச்சிகள் மற்றும் கூம்புகள் உள்ளன. குச்சிகள் கருப்பு வெள்ளையையும், கூம்புகள் வண்ணத்தையும் பார்க்கின்றன.
அதே நேரத்தில் பறவைகள், பூச்சிகள் வண்ணம் பார்க்க வல்லவை. நம்மைவிட அதிக நிறங்களை நிறங்களின் சாயல்களை, முக்கியமாக வண்ணத்துப்பூச்சிகள் பார்க்கின்றன. மனிதர் களால் காணமுடியாத, புற ஊதாக் கதிர்களையும் காணும் திறன் பெற்றவை பறவைகள். இவை களின் ரெட்டினாவில் மனிதர்களைவிட அதிக எண்ணிக்கையில் ஒளி வாங்கிக் கூம்புகளும், அதிக நரம்பு இணைப்புகளும் உள்ளன. மேலும் குறைவான ஒளியிலும் நன்கு பார்க்கும் அளவுக்கு, அடர்வாக கூம்புகள் உள்ளன. கடல் பறவைகளின் தூரப்பார்வை துல்லியமாக அமைய, அவைகளின் கண்களில், சிவப்பு அல்லது மஞ்சள் எண்ணெய் சுரக்கிறது. மனித கண்ணில் ஒரு ச.மி.மீ க்கு 20,000 ஒளிவாங்கிகள் உள்ளன. ஆனால் பறவைகளில் 40,000 முதல் 1,20,000 ஒளி வாங்கிகள் உண்டு. பகலில் இரை தேடும் பறவைகளுக்கு 80-90% ஒளி வாங்கிகள் கூம்புகளாகவும் இருக்கின்றன. ஆனால் இரவில் இரை தேடும் பறவைகளுக்கு கிட்டத்தட்ட அனைத்து ஒளி வாங்கிகளும் குச்சிகளாகவே உள்ளன.
ஆந்தையின் கண்கள் மற்றவைகளை விட 2.2 மடங்கு பெரியது. மனிதனை விட 5 மடங்கு அதிகமான ஒளி வாங்கி செல்கள் இதற்கு உள்ளன். இவை அகச்சிவப்பு கதிரிலும் கூட பார்க்கும். இருகண் நோக்கி போல இதன் கண் செயல்படுகிறது, இதன் உடலின் எடையில் 5% கண் உள்ளது.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
அமெரிக்க ஐக்கிய நாட்டு விஞ்ஞானிகளின் குழுவைச்சேர்ந்த கிரிஸ் ஆஸ்டின் என்ற விஞ்ஞானி , சமீபத்தில் நியூகினியாவில் இரண்டு புதிய இனங்களைச் சேர்ந்த தவளைக் கண்டுபிடித்துள்ளார். எலும்புள்ள விலங்குகளில் இதுதான் உலகிலேயே மிக மிகச் சிறியது என்பது வியப்புக்குரிய விஷயமாகும். இந்த தவளை எவ்வளவு பெரிசு தெரியுமா? சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இதன் அளவு 7 .7 மி.மீ தான். ஒரு இன்ச் நீளம் என்றால் உங்களுக்குத் தெரியுமல்லவா ? அந்த ஒரு இன்ச்சில் மூன்றில் ஒரு பகுதியைவிடச் சிறியது. இதற்கு முன் உலகின் சிறிய முதுகெலும்பி என்று பெயரும், பெருமையும் பெற்றிருந்த 8 மி.மீ நீளமுள்ள இந்தோனீசிய சின்ன மீனை இந்த தவளை பின்னுக்குத் தள்ளி விட்டது. இந்த குழு மூன்று மாதங்களாக உலகில் மிகப் பெரியதும், உயரமான வெப்ப மண்டல தீவான நியூகினியாவின் தீவை ஆராய்ந்து தேடித் தேடி இந்த தவளை இனங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது ஆஸ்டின் குழு வினருக்கு மிகப் பெரிய சவா லும்,சாதனையுமாகும்.
இம்மாத்தூண்டு தவளையைக் கண்டு பிடிப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இதன் பெயர் பீடோ பைரினி அமானூன்சிஸ் (Paedophryne amauensis) என்பதாகும் .இதன் ஆண் தவளையின் கீச்சிடும் ஒலி, ஒரு பூச்சியின் ஒலியைப் போலிருக்குமாம் . அதன் மூலம்தான் இந்த தவளையைக் கண்டுபிடித்தோம் என்று ஆஸ்டின் கூறுகிறார் . ஆனால் இது மிக மிகப் பெரிய கண்டுபிடிப்புதான்...! இதனைக் கண்ணால் காண்பதே பெரிய் விஷ்யம்தான். பொதுவாக நியூகினியா அதிகவகையான உயிரினங்கள் வாழும் ஓர் உயிரிப்பன்மையின் உச்ச பட்ச இடம். அந்த இடத்தில் எப்போதுமே புதிய வகை உயிரினங்களை கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிக்க முடியும்.அதனால்தான் ஏதாவது புதிய வகை உயிரினங்கள் கிடைக்குமா என்று தேடியவர்களுக்கு மிகப் பெரிய புதையல் அகப்பட்டதுபோல் கிடைத்ததுதான் இந்தப் புள்ளித் தவளை.இந்த தவளை பற்றிய தகவல் வெளியுக்லகுக்கும், அறிவியல் இதழிலும் 2012 , ஜனவரி 11 ம் நாள் வெளியிடப்பட்டது.
அங்கு கிடைத்த இரண்டாவது தவளை., இந்த பீடொபைரீன் அமானூன்சிஸைவிட துளியூண்டு பெரிது. அதன் அளவு, 8 .5 மி.மீ ஆகும். இந்த குட்டியூண்டு தவளையின் பெயர் பீடோபைரினி ஸ்விப்ட்டோரம் (Paedophryne swiftorum ). பொதுவாக முதுகெலும்பிகளில் மிகச் சிறியதும், மிகப் பெரியதும் கொஞ்சம் பெருமையும், பிரபலமும் உடையவை. மனித இனம் அறிந்த 60,000 வகை முதுகெலும்பிகளில், மிகப் பெரியது நீலத் திமிங்கலமே..! அது எவ்வளோ பெரிசு தெரியுமா? சுமார் 25 மீட்டர் அளவு இருக்கும். அதாவது 75 அடி. அம்மாடியோவ் ஒரு வீடு சைஸ் என்று சொல்லலாமா? அதற்கு அடுத்த படி, மிகச் சிறிய முதுகெலும்பி, இந்தோனீசிய மீன்தான் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தோம்.அதன் சைஸ் வெறும் எட்டு மி.மீ மட்டுமே. ஆனால் அந்த எண்ணத்தை தூக்கி கபளீகரம் பண்ணி சாப்பிட்டுவிட்டது இந்த துளியூண்டு பூச்சி சைஸ் தவளை. ஒரு தண்ணீர்ப் பூச்சியைவிடச் சிறியது. இந்த குட்டி,பொட்டுத் தவளையின் சைஸ் 7 .7 மி.மீ. இதுவரை உலகின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய முதுகெலும்பிகள் நீரில்தான் இருக்கும் என்றும் நினைத்தோம். அந்த எண்ணத்தையும் முறித்துவிட்டது இந்த தவளையார். ஆமாம் இது தரை வாழ் விளங்கல்லவா ? வாழிட சூழலில் மழைக்காடுகளின் தரையில், இலைகளில்தான் இந்த மாதிரி சிறிய விலங்குகள் வாழ்க்கை நடத்துகின்றன என்று ஆஸ்டின் தெரிவிக்கிறார் . அமெரிக்க பணமான டைமில்(Dime) .(.நம்ம ஊரு ஒரு பைசா நாணயம் போலத்தான் இந்த டைம்.).இந்த தவளையை வைத்து படம் எடுத்துள்ளனர். பாருங்களேன்..!
- பேரா.சோ.மோகனா (
- விவரங்கள்
- எம்.ஆர்.ராஜகோபாலன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்றுதானே கேட்கிறீர்கள்? உயரம் என்று எடுத்துக் கொண்டால் 16 முதல் 98 அடி வரை தான் இருக்கும். செக்வோவியா - ஆஸ்திரேலிய நாட்டு யூக்கலிப்டஸ் மரங்கள் 400 அடிவரை உயரமானவை. மரத்தின் குறுக்களவைக் (விட்டம்) கணக்கிட்டால் 23முதல் 36 அடிவரை உள்ளது. பாவோபாப்தான் வேறு எந்த மரமும் கிடையாது. அதற்கிணையாக மரத்தின் சுற்றளவு 154 அடி வரை உள்ளது. இந்தப் பார்வையில் பார்க்கும்போது பாவோபாப் மரங்கள்தான் உலகின் மிகப் பெரிய மரங்கள்.
பேரதிசயம் என்னவென்றால் அடிமரத்தின் உட்பகுதி மூங்கில்போல் வெற்றிடம் கொண்ட தாகவும் நீர் நிறைந்தும் இருக்கும். எவ்வளவு தண்ணீர் தெரியுமா? பெரியதோர் பாவோபாப் மரத்தின் கொள்ளளவு 1,20,000 லிட்டர்கள்! மேலும் கடும் கோடைக் காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட ஆவியாக வெளியேறாதவாறு பாதுகாப் பாக வைக்கப்பட்டிருக்கும். தண்ணீரில் வேறு பயனுள்ள சத்துக்களும் உண்டு. வறட்சிக் காலங் களில் மடகாஸ்கர் - ஆப்பிரிக்க நாட்டு ஏழை மக்கள் இதன் நீரைப் பருகிப் பயன்பெறுவர். மேல்மரம் காய்ந்துவிட்ட நிலையில் பல கிராமங் களில் அடிமரத்தை நீர்த்தேக்கத் தொட்டியாகப் பயன்படுத்துகின்றனர்.
லத்தீன் மொழியில் இதை ஆடன்சோனியா என்று அழைக்கிறார்கள். இந்த மரத்தை மடகாஸ் கர் நாட்டில் முதன் முதலாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஆடன்சன் என்ற பெயர் கொண்ட விஞ் ஞானி கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்தி னார். அவரை கௌரவிக்கும் விதத்தில் இம் மரத்திற்கு லத்தீன் மொழியில் ஆடன்சோனியா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆடன்சோனியா அதாவது பாவோபாப்பில் ஏழுவகை (ஸ்பீஷிஸ்) மரங்கள் உண்டு. இவற்றில் ஆறுவகை மரங்கள் மடகாஸ்கர் நாட்டிற்குரியவை. இந்த ஆறில் ஒரு வகை மட்டும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காணப் படுகிறது. ஏழாவது வகை ஆஸ்திரேலியா நாட்டிற்குரியது.
பாவோபாப் என்பது இந்த வகை மரங்களின் பொதுவான பெயர். இம்மரத்தை போஆப், போவாபோவா, தலைகீழ் மரம், குரங்கு-ரொட்டி மரம் என்றெல்லாமும் அழைக்கின்றனர். தென் ஆப்பிரிக்காவின் லிம்போமா மாகா ணத்தில் உள்ள க்ளென்கோபர்வோபாப் உலகின் மிகப் பெரிய மரமாகக் கருதப்படுகிறது. இதன் சுற்றளவு 47 மீட்டர் (154 அடி). சமீப காலத்தில் இம்மரம் இரண்டாகப் பிளந்து விட்டது. தென் ஆப்பிரிக்காவின் சன்லாண்ட் பகுதியில் அமைந் துள்ள பாவோபாப் மரம் இப்போது உலகின் மிகப்பெரிய மரமாகக் கருதப்படுகிறது. இதன் குறுக்களவு 10.64 மீட்டர், சுற்றளவு 33.4 மீட்டர் (130 அடி).
பல்வேறு பாவோபாப் மரங்கள் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தவையாகக் கருதப்படுகின்றன. ஏனைய மரங்களில் அவற்றின் வயதைக் குறிக்கும் வளர்ச்சி வட்டங்கள் (க்ரோத் ரிங்ஸ்) போல பாவோபாபில் கிடையாது. ஆனால் கார்பன் டேட்டிங் முறையில் இவற்றின் வயதைக் கணிக்க இயலும்.
மடகாஸ்கர் நாட்டின் காடுகளில் ஆடன் சோனியா மடகாஸ்கரியன்சிஸ் மற்றும் ஆடன் சோனியா ரூப்ரோஸ் ட்ரைப்பா வகை மரங்கள் காணப்படுகின்றன. கடற்கரையை ஒட்டிய பகுதி களில் ஆடன்சோனியா டிஜிட்டாட்டா வகை மரங்கள் வளர்கின்றன. இம்மரத்தின் பல்வேறு பாகங்கள் பயன்களைத் தரவல்லன.
இலைகள்: இவற்றைச் சமைத்துக் கீரை வகை யைப் போல் சாப்பிடலாம். ஆப்பிரிக்க நாடு களாகிய மலாவி, ஜிம்பாப்வே, சஹேல் நாடுகளில் இலை பச்சையாகவும், உலர வைக்கப்பட்ட இலை களைப் பொடி செய்தும் உணவாக உண்கின்றனர். நைஜீரியா நாட்டில் பாவோபாப் இலைகளை கூக்கா என்று குறிப்பிடுகிறார்கள். இலைகளி லிருந்து கூக்கா சூப் தயாரித்து சாப்பிடுகிறார்கள்.
பழம்: ஆரஞ்சுப் பழத்தைக் காட்டிலும் கூடு தலான அளவில் ‘சி’ வைட்டமின் நிறைந்தது பாவோபாப் பழம். கால்ஷியம் சத்து பசும்பாலைக் காட்டிலும் கூடுதல். குரங்கு-ரொட்டி அல்லது புளிக்கும் பழம் என்று அழைக்கப்படும் இப்பழத் தின் விதை நீக்கிய சதைப் பகுதியை அப்படியே சாப்பிடலாம். சிலர் பழத்தின் சதைப் பகுதியைப் பாலிலோ கஞ்சியிலோ கலந்தும் சாப்பிடு கின்றனர். மலாவி நாட்டில் இப்பழத்திலிருந்து பழச்சாறு தயாரிக்கப்படுகிறது. இப்பழத்தை ஜிம் பாப்வே நாட்டின் மாவுயு என்று அழைக்கின்றனர். பழம் அப்படியே சாப்பிடப்படுகிறது. இப்பழத்தி லிருந்து மருந்தாகப் பயன்படும் களிம்பும் தயாரிக் கப்படுகிறது. பழத்தில் சர்க்கரை தூவி வண்ணம் (பெரும்பாலும் சிவப்பு) கொடுத்து இனிப்பு அல்லது புளிப்பு மிட்டாயாகவும் விற்கப்படுகிறது. இந்த மிட்டாய்க்கு உபுயு என்று பெயர்.
விதைகள்: சூப்பை கெட்டியாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஊறவைக்கப்பட்ட விதைகளை வறுத்துச் சாப்பிடுகின்றனர். விதை களிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு சமை யலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மரத்திலிருந்து நார், வண்ணம் மற்றும் எரிபொருள் கிடைக் கின்றன. இதன் நார் மிகவும் கெட்டியானது.
காய வைக்கப்பட்ட பழத்தின் கூழ் அப்படியே உணவாக உண்ணப்படுகிறது - அல்லது கஞ்சி சற்று ஆறிவரும் போது அத்துடன் கலந்து சாப் பிடப்படுகிறது. இப்படிச் செய்வதால் அதிலுள்ள வைட்டமின்கள் அழிவதில்லை. இதைப் பொடி செய்தும் ஜூஸ் தயாரித்துச் சாப்பிடலாம். டான்சானியா நாட்டில் கரும்புச் சாறுடன் பாவோபாப் பழச்சாறைக் கலந்து பீர் தயாரிக் கிறார்கள்.
காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து வைத்தால் பழத்தின் கூழ் வெகு காலம் கெடாமல் இருக்கும். இதிலிருந்து குளிர் பானங்கள் தயாரிக் கலாம். சோடியம் மெட்டா சல்பைட் தூளைப் பயன்படுத்தி கூழைக் கெடாமல் பாதுகாக்க இயலும். கூழைத்தூள் பக்குவத்தில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப் போகாதவாறு பாது காப்பாக வைக்கலாம்.
சமீப காலம் வரை ஐரோப்பிய யூனியனில் பாவோபாப் பழ விற்பனை தடை செய்யப் பட்டிருந்தது. 2008-ஆம் ஆண்டு ஜூலை முதல் பாவோபாப்பின் உலர்த்தப்பட்ட பழக்கூழ் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. லாபநோக்கமில்லாத ஒரு தொண்டு நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் 25 லட்சம் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் பாவோபாப் பழம் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் பாவோபாப்: ஆஸ்தி ரேலியா நாட்டில் பாவோபாப் பழங்குடி மக் களால் உணவுக்கும் தண்ணீருக்கும் பயன்படுத்தப் பட்டு வந்தது. இலைகள் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டன. சுரைக்காய் போல் கெட்டியான தோல் கொண்ட பழத்தின் மீது சாயம் பூசி அலங் காரத்திற்கும் பயன்படுத்தினர். சிறிய துண்டுகளை ஆபரணமாகவும் அணிந்து வந்தனர்.
வேறு சில தகவல்கள்:
1. தண்ணீர்த் தொட்டி - வீடு - மதுக்கடை, சிறைச்சாலை:
பாவோபாபின் அடிமரம் சூடான் நாட்டில் தண்ணீர்த் தொட்டியாக (வாட்டர் டாங்க்) பயன் படுத்தப்படுகிறது. பாவோபாப் மரத்தைச் சிலர் வசிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். எர்ன்ஸ்ட் ஹெக்கல் என்ற பெயர் கொண்ட நூலாசிரியர் பாவோபாப் மரம் 5, 000 ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியது என்கிறார். தென் ஆப்பிரிக்காவின் லிம்போப்போ பகுதியில் உள்ள ஸன்லாண்ட் பண்ணையில் பெரியதோர் பாவோபாப் மரத் தைக் குடைந்து 72 அடி உயரம் 155 அடி சுற்றளவு கொண்ட இடத்தில் மதுபானக் கடை வைக்கப் பட்டுள்ளது. கார்பன்டேட்டிங்படி இம்மரம் 6,000 ஆண்டு தொன்மையானது என்று கணிக்கப் பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி நகரருகே இருந்த பெரியதோர் பாவோபாபின் அடிமரத் தைச் செதுக்கிச் சிறைச்சாலையே உருவாக்கப் பட்டிருந்தது. இது நிகழ்ந்தது 1890களில். இன்றும் அந்த மரம் ஒரு அரும் பொருட்காட்சியாக (மியூசியம்) மாறி மக்களைக் கவர்ந்து வருகிறது.
இதன் விசித்திரமான தோற்றத்தின் காரண மாக அரபு நாடுகளில் இப்படி ஒரு மரபுவழிக் கதை உண்டு. ஒரு பேய் இந்த மரத்தை வேருடன் பிடுங்கித் தலைகீழாக - அதாவது கிளைகளை பூமிக்கடியிலும் வேர்ப்பகுதியைப் பூமிக்கு மேலாகவும் நட்டு விட்டதாம்.
அமெரிக்க நாட்டிலும் ப்ளோரிடா போன்று சற்று வெப்பமான பகுதிகளில் பாவோபாப் மரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவின் மலைப் பகுதிகளில் இம்மரம் காணப்படுகிறது.
இந்தியாவில் பாவோபாப்: இந்தியாவில் கர் நாடகா மாநிலத்தில் சாவனூரில் 50 முதல் 60 அடி வரை சுற்றளவு (14-18மீட்டர்) கொண்ட மூன்று மரங்கள் உள்ளன. இந்த மரங்களும் 5,000 ஆண்டு தொன்மையானவை.
பெங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற லால் பாக் தோட்டத்தில் பாவோபாப் மரத்தைக் காண முடியும். இந்தியாவின் வேறு பகுதிகளிலும் இம் மரம் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு. சரியான தகவல் நம்மிடம் இல்லை.
தமிழகத்தில் வனத்துறையினர் கொடுத்த தகவல்படி ராஜபாளையத்தில் ஒரு மரம் உள்ளது என்று சொல்கின்றனர். வைகை அணை அருகே அமைந்துள்ள வனத்துறைப் பயிற்சிக் கல்லூரியின் தோட்டத்தில் 7 வயதுள்ள பாவோபாப் மரங்கள் இரண்டு உள்ளன. ஒரு மரத்தின் புகைப்படத்தை இங்கே தருகிறோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சி மடத்தில் பழைய மரம் ஒன்று உள்ளது. சென்னை நகரைப் பொருத்தவரை அடையாறில் உள்ள பிரசித்தி பெற்ற தியோசாபிக்கல் சொசைட் டியில் இரண்டு மரங்கள் உள்ளன. ஆந்திர மஹிளாசபா மற்றும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தலா ஒரு மரம் உள்ளது. நந்தனம் ஹவுசிங் போர்ட் அலுவலகத்திற்குப் பின்புறம் ஒரு மரம் உள்ளது. இன்னும் பல இடங்களில் இம்மரம் இருக்கக் கூடும். நமக்குத் தகவல் இல்லை.
இந்த மரத்தின் பல்வேறு தோற்றங்கள்பற்றி அறிய விரும்புவோர் இண்டர்நெட் வசதி இருந்தால் விக்கிப்பீடியாவில் காணலாம்.
(உங்கள் நூலகம் டிசம்பர் 2011 இதழில் வெளியானது)
- மணம் வீசும் பொருள் தரும் கஸ்தூரிமான்
- நிற்பதுவே… நடப்பதுவே… பறப்பதுவே…
- காட்டுக்குள் நடை பயணம்
- நீலகிரியின் நிலை....
- காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்
- நான், நீ, நாம் - இது பாக்டீரியா மொழி
- காட்டுயிர்களும் மூடநம்பிக்கைகளும்
- கானமயில்
- மயில்களை கொல்ல வேண்டாம்
- இலவங்கப் பட்டை - சில தகவல்கள்
- மாயமாகும் மயில்களின் உலகம்
- வாரணம் ஆயிரம்; வழி செய்வோம்
- இயற்கை கொடுத்த வரம்
- கடல் எனும் விந்தை
- வாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும்
- பறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன?
- சிறுத்தை புலிகள் - சிக்கல் அவிழ்கிறது
- சிறுத்தையும் நாமும் - யாருக்கு யார் எதிரி?
- வாழ்வை இழக்கும் வெளவால்கள்
- காண்டாமிருகங்களின் தாயகங்கள்