லண்டனிலிருந்து வந்திருந்த ஹோமியோபதி நிபுணர் டாக்டர் நஹோமஜாருடன் ஒரு சந்திப்பு. இந்த பேட்டி ஹோமியோ சிகிச்சை பற்றி ஒரு விசாலமான பார்வையை கொடுக்கும்.

  • ஹோமியோபதியில் மருத்துவ பெற விரும்புகிற நோயாளிகளுக்கு ஆங்கிலமருந்துகளை அவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று அறிவுரை தருவீர்களா?

                இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு அலோபதி மருந்துகளை உடனே விட்டுவிட வேண்டும் என்று அனுபவமும் அறிவும் உள்ளவர் கூற மாட்டார். நோயாளி அம்மருந்துகளுடன் சேர்த்தே ஹோமியோபதி மருந்துகளையும் உட்கொண்டுவரலாம். பொதுவாக அலோபதி மருந்துகள் கொஞ்சம்கொஞ்சமாக விடப்பட வேண்டியவைதான். எனவே அவற்றை விட்டு விடுவதால் திடீர் விளைவுகள் எதுவும் வந்துவடாது. சில கேசுகளில் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை (எ.கா. இன்சுலின்) இருக்கலாம். இதையெல்லாம் ஹோமியோபதியில் கணக்கில் கொண்டு சரிப்படுத்தி விடலாம்; இவ்வாறாக வேண்டாத சிக்கல்களைக் களைய முடியும்.

                ஹோமியோபதி மருத்தின் விளைவுகள் கூர்ந்து பார்க்கப்பட்ட பிறகே அலோபதி மருந்து உட்கொள்வது கைவிடப்படுகிறது. எனினும் நோயாளி அம்மருந்துகளை அப்போதுதான் எடுக்கத் தொடங்கியிருந்தார் எனில் அவற்றை உடனடியாக நிறுத்தி ஹோமியோபதி மருந்துகளை முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

  • ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வது மட்டுமே போதுமானதா அல்லது துணை நடவடிக்கைகளையும் பின்பற்றி வர வேண்டுமா?

        இரவில் கண்விழித்தல், அளவுக்கு மீறி மது அருந்துதல், ஈரக் கசிவான அறைகளில் வசிப்பது, அதிக மசாலாப் பொருட்கள் சேர்த்த உணவுகளை உண்பது, இன்னபிற யாவும் தவிர்க்கப்படவேண்டும். நோயாளியின் அசௌகரியங்கள் அப்போதைக்கப்போது மருந்து கொடுத்து தீர்க்கப்பட்டாலும் மேற்கண்ட பழக்க வழக்கங்களையெல்லாம் அவர் கைவிடாதவரையில் முழுக்குணம் பெற முடியாது. அதைப்போலவே பக்கவாதம் அல்லது ருமட்டாய்டு மூட்டுவீக்கக் கேசுகளில் இயன் மருத்துவம் (Physiotherapy) கண்டிப்பாகத் தேவைப்பாடலாம். உடலில் நீர்மக் குறைவு ஏற்பட்டவர்களுக்கு I.V. திரவ மருத்துவம் தருவது இன்றியமையாதது. ஆக்சிஜன் பற்றாக் குறையடையவர்களுக்கு ஆக்சிஜன் தரப்பட வேண்டியது அவசியம். இப்படியே இன்றிமையாத தவிர்க்க முடியாத பிறவும், இவையாவும் மருத்துவத்தில் இன்றியமையாதவை.

  • மக்களில் பெரும்பகுதியினரிடம் ஹோமியோபதி மருத்துவத்தில் உணவிக்கட்டுபாடுகள் கடுமையாக உள்ளது என்கிற நினைப்பு இருந்து வருகிறது. இதனால் சிலர் சோர்ந்து போகின்றனர் இதுபற்றி தங்கள் கருத்து என்ன?

                1.             தேவைப்படும்போது சரியான உணவுக் கட்டுப்பாடு கண்டிப்பாகத் தேவைதான் . ஆனால் அதற்காக பயந்து விடக்கூடாது. உணவுக்களைப் பார்க்க வேண்டும்.

                நோயை அதிகப்படுத்தும் உணவுப்பொருட்கள், சான்றாக சர்க்கரையும் இனிப்புகளும் நீரிழிவு நோயாளியின் உணவில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். உயர் இரத்த அழுத்தக்காரர்கள் விஷயத்தில் உப்பு, மஞ்சள்காமாலை அல்லது அது போன்ற பிற கோளாறுகளில் கொழுப்பு கட்டூப்படுத்த வேண்டும். இப்பொருட்கள் நோய்க்கான காரணமல்ல என்றாலும் அவை காலப்போக்கில் நோயை அதிகப்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை.

                2. ஹோமியோபதி வீரிய மருந்துகளுக்கு முறிவு மருந்துகளாகச் செயல்படுபவை. எ.கா. கற்பூரம் பெரும்பாலான மருந்துகளின் செயல்களை முறிக்கக்கூடியது. புளிக்காடி : லெச்சிஸ் Lachesis எனப்படும் மருந்தை முறிக்கும். வெங்காயம்; தூஜா ( Thuja) மருந்தை உட்கொள்ளும் நோயாளிகளின் துன்பங்களை அதிகப்படுத்தும்.

       உணவுக் கட்டுப்பாடுகளில் மிகவும் கடுமையாக இருக்க வேண்டாம். ஆளைப் பொறுத்து அதை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். உண்மையில் பலரால் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க முடிவதில்லை எனினும் ஹோமியோ மருந்துகள் சிறப்பாக வேலை செய்வதால் தான் நோயாளி குணமடைகிறார்.

  • ஹோமியோபதி மருந்துகள் குணமளிக்க நீண்டகாலம் ஆகிறது என்று புகார் உண்டு. அது உண்மையா?

       அப்படியெல்லாம் இல்லை இது ஒரு தவறான எண்ணம். கடுமையான நோய்களிலும் அறிகுறிகள் உடனடியாக மறையத் தொடங்கி மிகக் குறைந்த காலத்திலேயே நோய் குணமடையவும் செய்கிறது. ஆனால் 15 - 20 ஆண்டுகளாக தொடரும் நாட்பட்ட நோய்களில் கொஞ்சம் நீண்டகாலம் எடுக்கத்தான் செய்யும். ஏனெனில் இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு நோய்கள் ஆழமாக வேரோடிப் விடுவதோடு, இவை பரம்பரை நோய்களாவும் இருப்பதால் குணப்படுத்தக் கடினமாகிறது. நாட்பட்ட நோயான மூச்சுக்குழல் ஆஸ்துமாவாக இருந்தாலும் 5 ஆண்டுகள் மருத்துவத்தில் குணமடைகிறது. இந்நோய் பொதுவாக குணமடைவதேயில்லை. குறிப்பாக பரம்பரை வழி வந்ததாக இருக்கும் நிலையில்.

  • ஹோமியோபதி மருத்துவத்தில் ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியது உள்ளதா?

         ஆம். உள்ளது. நோயாளி ஒருவர் நீரிழிவு உடையவர் என்றால் (அவர் இனிப்பு உட்கொள்வதை நாம் கட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது சிறுநீரகக் கோளாறுக்கு உப்பு உட்கொள்வதையும் மஞ்சள் காமாலைக்கு கொழுப்பு உட்கொள்வதையும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இப்படியே பிறவும் ஆய்வுக்கூட பரிசோதனையின்றி நீரிழிவு எந்த அளவு உள்ளது. அதை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது என்றெல்லாம் நம்மால் எப்படி அறிய முடியும்? ஆய்வுக்கூப் பரிசோதனைகள், உடற்பயிற்சி, நோய்க்கூறு அடிப்படையில் மருந்துத் தேர்வு - குறிப்பாக குணப்படுத்த அரிதான கேஸ்கள் போன்றவற்றைத் தீர்மானிக்கவும் துணைநிற்கும். மருத்துவத்தினால் ஏற்படும் முன்னேற்றத்தைப் புரிந்துகொள்ள ஆய்வுக்கூட பரிசோதனைகள் துணை செய்கின்றன.

  • ஹோமியோபதி மருந்துகள் பாக்டீரியாக்களையோ, வைரஸ்களையோ கொல்லுமா?

       ஹோமியோபதி மருந்துகளால் தொற்று நோய்கள் குணமடைவதில்லை என்று பொதுவாக எண்ணம் உள்ளது. ஆனால் இது முழுவதும் உண்மையல்ல. டைபாய்டு, காலரா, B . கோலை, நிமோனியா, தொற்றும் தன்மையுள்ள ஹெபடைட்டிஸ் இன்ன பிற யாவும் ஹோமியோபதி மருந்துகளால் குணப்படுத்தக் கூடியவையே. தொடக்கத்தில் நமது நாட்டில் காலரா மருத்துவத்தில் ஹோமியோபதி நல்ல பெயர் பெற்றது.

       ஹோமியோபதி மருந்துகள் சோதனைக்குழாயில் (Invitro) பாக்டீரியாக்களையோ, வைரஸ் களையோ கொல்வதில்லை என்பது உண்மையே. ஏனெனில், நமது மருந்துகள் உடலியல் அல்லது வேதியியல் ரீதியாக செயல்படுபவையல்ல; மாறாக ஒருவகை ஊக்குவிக்கும் வழியில் செயல்படுகின்றன. ஆற்றல் மிக்க மருந்துகள் நரம்பு முனைகளைத் தொட்டு, நோய்க்குக் காரணமான கூறுகளுக்கு எதிராகச் செயல்படுமாறு உடல் முழுவதையும் தூண்டுகின்றன. இதன்விளைவாக தனிப்பட்ட மற்றும் பொதுவான நோய் எதிர்ப்புக்கூறுகள் உருவாகி நோய்க்கூறுகளை எதிர்த்து செயல்படுவதால் நோயாளி நலமடைகிறார். இதை எந்தத் தொற்று நோயிலும் சோதித்துச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

  • ஹோமியோபதியில் தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லையா ?

       உண்டு. எமது முற்கால ஹோமியோ மருத்துவர்கள் பரிந்துரைத்தபடியும் உலகம் முழுவதும் புதிதாக பல மருத்துவர்களின் கண்டு பிடிப்புகளையொட்டியும் எல்லாவகையான தொற்று நோய்களுக்கும் பல தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இவ்விஷயத்தில் பெருமளவிலான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இத்திட்டத்தை நடத்த அரசாங்கஉதவியும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. ஆனால் கொள்ளை நோய் தாக்கிய காலத்தில் பாஸ்போரஸ் என்ற ஹோமியோபதி தடுப்பு மருந்து இந்தியாவெங்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டது. கண் நோய் பரவிய காலத்திலும் யூப்ரேசியா எனப்பட்ட தடுப்பு மருந்து பெங்களூர் ஹோமியோபதி மருத்துவமனை ஒன்றில் ஆயிரக்கணக்கானோருக்கு கொடுக்கப்பட்டது.

  • ஹோமியோபதியில் கருத்தடை மாத்திரைகள் உண்டா?

           ஹோமியோபதியின் வீரியமருந்துகள் உடல் -மனம் இரண்டின் மீதும் செயல்படுபவை அவற்றை நீண்டகாலம் பயன்படுத்துவது செயற்கையான மருந்து நோய்க்கு வழிவகுக்கக்கூடும். எனவே மாதவிடாய் சுழற்சியை மாற்றிக் கருவுறுதலைத் தடுக்கக் கட்டாய் மருந்துகள் அதேசமயம் அதை பயன்படுத்து வோரை நாள்பட்ட நோயாளியாக அல்லது மன அளவில் பிறழ்ச்சி உடையவராக மாற்றக்கூடும். எனவே ஹோமியோ கருத்தடை மாத்திரைகளை அறிமுகப்படுத்துவதில் ஒருசில முயற்சிகளே நடைபெற்றுள்ளன. ஆனால் இப்பொழுது ஹோமியோ மருத்துவர்கள் இதை மனதிற் கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள். சிலருக்கு வெற்றியும் கிடைத்துள்ளது எனப் படித்திருக்கிறேன்.

  • ஹோமியோபதி மருந்துகள் கருச்சிதைவு உண்டாக்குவதின் மூலம் தாய்மையுறுவதை நிறுத்தக் கூடுமா? 

       அநேகமாக இல்லை எனலாம். ஹோமியோபதி அடிப்படைகளை மீறி மருந்துகளைச் கொடுத்தாலன்றி இது சாத்தியமில்லை. 

  • தாய்மையுற்ற நிலையிலும் ஹோமியோபதி மருத்துவத்தைத் தொடரலாமா?

        தொடரலாம். கருவுற்ற நிலையிலும் நோய்களை குணமாக்க ஹோமியோபதி மருத்துவம் செய்யலாம். கருவுற்ற நிலையில் ஹார்மோன்களின் செயல்பாடு பெருகுவதால் எல்லா நோயறிகுறிகளும் வெளிப்படையாகத் தெரிகின்றன. தாய்க்கு ஏற்ற மருந்தை தேர்ந்தெடுப்பது எளிது; வயிற்றில் வளரும் சிசுவும் பரம்பரை நோய்களின் பிடியிலிருந்து விடுபட முடியும். கருவுற்றதால் ஏற்படும் சிக்கல்கள், குழந்தை தவறான நிலையில் இருப்பது அல்லது கருப்பை மந்த நிலை போன்றவைகளை தாய்மைக்காலம் நெடுகிலும் தாய்க்கு வெற்றிகரமாக மருத்துவம் தரமுடியும். 

  • ஹோமியோபதி மருத்துவர்கள் நோய் வரலாற்றை அறிய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். நோயாளிகளுக்குப் பிடிக்காத பல கேள்விகளைக் கேட்கிறார்கள் குறிப்பாக நேரம் அற்ற நோயாளிகள் விஷயத்தில் என்று புகார் உள்ளது. இதுபற்றி என்ன கூறுகிறீர்கள் 

 அது உண்மைதான். முக்கியமான நோய்கள் பலவற்றிற்குக் குடும்பப்பின்னணி உள்ளதா நோயாளியின் கடந்தகால வாழ்விலும் தனிப்பட்ட முறையிலும் நோயுடன் என்ன தொடர்பு என்பவைகளையெல்லாம் ஆராய்ந்து பிறகே நோயின் காரணம் என்ன என்பதையும் அதன் அடிப்படையையும் நோயாளியிடம் உறுதிசெய்ய வேண்டியுள்ளது. நோயாளியைப் பற்றிய விரிவான தகவல் மதிப்பீடின்றி நோயாளிக்கு ஏற்ற சரியான மருந்தைத் தெரிந்தெடுக்க முடியாது - குறிப்பாக நாள்பட்ட நோய்கள் விஷயத்தில் தீவிரத் தாக்குடைய நோய்களில் இதுபோன்ற நோய் வரலாறு பொதுவாகத் தேவையில்லை இவ்விஷயத்தில் நோயாளிகள் தாமாக முன்வந்து மருத்துவருடன் உடனுழைக்க வேண்டும். மருத்துவரைப் பார்த்துச் செல்ல அடிக்கடி வந்தாலும், முதல் முறை பார்க்க வந்த போது இருந்த சிக்கல்கள் ஒவ்வொன்றும் அதிகரிக்கிறதா குறைகிறதா என்ற மாற்றங்களை அறிந்து உறுதிசெய்ய குறிப்பிடத் தகுந்த நேரம் செலவாகும்.

  • ஹோமியோபதிக்கு ஏதேனும் வரையறைகள் உள்ளனவா?

       ஆம். உண்டு ஒவ்வொரு மருத்துவ அறிவியலுக்கும் உரிய வரையறைகள் (எல்லை) உண்டு அதற்கு ஹோமியோபதியும் விதி விலக்கல்ல. மரபு வழிவரும் நோய்களுக்கும் பிறவி ஊனங்களுக்கும் நிவாரணம் கிடையாது. இவை ஒரளவுக்கு சரிசெய்யப்படலாம். கைமீறிப் போய்விட்ட அல்லது பின்திரும்பச் செய்ய இயலாத சில மாற்றங்களுடன் கூடிய நோய்களுக்குப் பொதுவாக நிவாரணம் இல்லை (எ.கா.) விழித்தசைகளில் குறைபாடு, கல்லீரல் சிதைவு மிக மோசமடைந்த நிலை, கேடடைந்த கீல்வாத மூட்டுவீக்கம் (ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்) முற்றிய புற்றுநோய் மற்றும் பிற உணவு வைட்டமின்கள் போன்ற உடலியல் பற்றாக்குறைகளை ஹோமியோபதி ஒரளவே சரிசெய்யும். விபத்து, நஞ்சு அருந்திவிடல் அறுவை சிகிச்சையின்றி முடியாது என்னும் நிலையிலுள்ளவர்களுக்கு ஹோமியோபதியால் சிறதளவே பயன்தருகிறது. அல்லது ஒன்றுமே செய்யமுடியாமலும் போகலாம். நோய்க்கான காரணங்கள் தொடர்கின்ற நிலையில் ஹோமியோபதியால் கிடைக்கும் நன்மை ஒரு எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும்.

  • ஹோமியோபதி அறிவியல்பூர்வமானதா என்பது பற்றி எப்போதுமே சில ஐயங்கள் இருந்த வருகின்றன. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

                ஹோமியோபதி மருந்துகளின் வீரியத்தன்மையை நிரூபிக்கும் பரிசோதனை முறை எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற நிலையில் ஹோமியோபதி அறிவியல் பூர்வமானதா என்ற கேள்வி எழுவதில் வியப்பு இல்லை. ஆனால் இதை வைத்து உண்மைகளை மறைத்துவிட முடியாது.

                ஹோமியோபதி மருந்துகள் 30-வது அல்லது அதிகமான வீரியத்தில் தரப்படும் போது, உடல்நல முடைய மனிதனிடம் வெளிப்படையான மாற்றங்களை இயல்புக்கு மாறான உணர்வுகள், செயல்பாடுகள் என உண்டாக்குகின்றன. இது நிரூபிக்கப்பட்ட உண்மை. யார் வேண்டுமானாலும் இதை சரிபார்த்துக் கொள்ளலாம். அதைப்போலவே, மேற்கண்ட வீரியங்களிலுள்ள ஹோமியோபதி மருந்துகள் பல்வேறு நோய்களால் துன்புறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இவ்வுண்மையை நிருபிக்கக்கூடியர்களாக இருப்பர்.

                ஒரு ஹோமியோபதி மருந்து எவ்வாறு செயல்படுகின்றது என்பது நிபுணர்களுக்கு கூட இன்னமும் தெளிவாகவில்லை; ஆனால் இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படுகிற நாள் வெகுதொலைவில் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வு ஒன்று ஹோமியோபதியின் அறிவியல் பூர்வமான நிலையை நிரூபிப்பதாக இருந்தது. 

                இந்த ஆய்வின் சுருக்கம் பிரிட்டிஷ் மெடிக்கல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வை செய்தவர்கள் ஹோமியோபதி மருத்துவர்கள் அல்ல மாறாக மருத்துவப் பேராசிரியர்கள். (Clinical Trails Of British Medical Journal Feb 9,1991)

  • ஹோமியோபதி அறிவியல்பூர்வமான மருத்துவ முறையாகத் கருதாதவர்கள் ஹோமியோபதியால் குணமடைவதெல்லாம் நம்பிக்கை மருத்துவம் (Placebo) என்று குறிப்பிடுகின்றனர். இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்? 

                இது முற்றிலும் தவறான கருத்து. சிறுபிள்ளைகள், நினைவிழந்த நிலையிலுள்ள நோயாளிகள், மனக்கோளாறு உள்ளவர்கள் அல்லது விலங்குகள் விஷயத்தில் Placebo நம்பிக்கை பற்றிய கேள்வி வரமுடியுமா? இப்படிப்பட்ட கேசுகளிலும் நோய்கள் குணமடைகின்றனவே அது எப்படி ? வீரியத்தன்மையுள்ள ஹோமியோபதி மருந்துகள் விலங்குகளிடமும் அற்புதமாக வேலை செய்கிறது என்று மீண்டும் மீண்டும் சரிபார்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, புற்றுநோய், ருமட்டாய்டு, ஆர்த்ரைட்டிஸ் மூட்டுவாதம் G-6-P-D பற்றாக்குறை அல்லது விழித் திரைக்கோளாறு போன்றவைகளை வெறும் நம்பிக்கையால் மட்டும் குணப்படுத்தப்பட முடியுமா? அநேகமாக முடியாது. எனவே ஹோமியோ மருந்துகள் டப்ஹஸ்ரீங்க்ஷர் இல்லை.                          

                         - நன்றி : ஹெல்த் & பியூட்டி, ஜூலை 2000

Pin It