மொபைல் தொலைபேசி கோபுரங்களும் மொபைல் தொலைபேசிகளும் வெளியிடும் மின் காந்தக் கதிர்கள் தேனீக்களை மிரட்டுகின்றன என்று இந்தியாவில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் மொபைல் நிறுவனங்கள் நிறுவியுள்ள மொபைல் கோபுரங்கள் வெளியிடும் மின்காந்தக் கதிர்கள் தேனீக்களின் திசையறிந்து பறக்கும் திறனை முடக்கி விடுவதாக ஆய்வு நடத்திய டாக்டர் சைனுதீன் பட்டாஸி தெரிவித்தார். தேன்கூடு அருகே மொபைல் நிரந்தரமாக வைக்கப்பட்டால், தேன் எடுக்கச்சென்ற தேனீக்களால் கூடுகளுக்கு திரும்ப முடிவதில்லை. இதனால் ராணித்தேனியும் முட்டைகளும் 10 நாட்களில் இறந்துவிடுகின்றன என்று அவர் கண்டறிந்தார்

-மாற்று மருத்துவம் செய்தியாளர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.