பெருமளவு விற்பனையாகும் முன்னணி தமிழ் நாளிதழ்களில், அஜ்மல் கசாப்பிற்கு நிறைவேற்றப்பட்டுள்ள தூக்கு தண்டணை குறித்த செய்திகள் வெளியிடப்பட்ட விதம் குறித்து ஆராய்ந்தால், தமிழ் நாளிதழ்கள் கட்டமைக்கும் சமூகம், நாகரீகச் சூழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றதா என்ற அச்சம் மேலிடுகின்றது.
இச்செய்தியை காய்தல் உவத்தல் இன்றி, மிகச் சரியாக அறிக்கையிட்டது பிபிசி தமிழோசை மட்டுமே:
"மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டபோது உயிருடன் பிடிபட்ட துப்பாக்கிதாரி முகமது அஜ்மல் அமீர் கஸாப் புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார். பாகிஸ்தான் பிரஜையான கஸாப்பின் கருணை மனுவை இந்த மாதத் துவக்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்ததை அடுத்து, அவர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். புதன்கிழமை காலை 7.30 மணிக்கு புனே நகரில் உள்ள எரவாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.....". இந்தச் செய்தியில் தீவிரவாதி என்றோ, பயங்கரவாதி என்றோ அடைமொழியிட்டு செய்தி அறிக்கையிடப் படவில்லை.
தமிழ் முன்னணி நாளிதழ்கள் இச்செய்தியை அறிக்கையிட்டுள்ள விதத்தைக் கவனிப்போம்:
அஜ்மல் கசாப்பை "பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே ஒரு பயங்கரவாதியான அஜ்மல் கசாப்" என்று குறிப்பிட்டது தினமணி.
"உலகையே உலுக்கிய மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப்" என்று தினகரன் வர்ணித்திருந்தது. தினத்தந்தியோ, "மும்பை தாக்குதல் தீவிரவாதி", என்று குறிப்பிட்டிருந்தது.
"ஈவு இரக்கமின்றி 166 பேரைக் கொன்று குவித்த பாகிஸ்தானின் லஸ்கர் -இ-தொய்பா பயங்கரவாதிகளில், உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்" என்று நீண்ட அடைமொழியுடன் கசாப்பைக் குறிப்பிட்டது தினமலர்.
முன்னணித் தமிழ் நாளிதழ்கள் குறைந்தது மூன்று பக்கங்களிலாவது இந்தச் செய்தி தொடர்பான படங்கள், கிராபிக்ஸ், துணுக்குகள் என்று இந்தச் செய்தியை விரிவாகக் கொண்டாடியுள்ளன. இந்த 4 நாளிதழ்களுமே, தூக்கு தண்டணை நிறைவேற்றப்பட்ட பூனா நகரில் செய்தியாளரைக் கொண்டிருக்கவில்லை. இவை நான்குமே, பிடிஐ அல்லது யுஎன்ஐ என்ற இரு செய்தி நிறுவனங்கள் தரும் செய்தியை மொழி பெயர்த்தே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
தி இந்து நாளிதழ் தனது முதல் பக்கத்தில் அரைபக்கத்திற்கும் மேல் வெளியிட்டுள்ள இந்தச் செய்தியில் எங்குமே தீவிரவாதி என்ற சொல்லையோ, பயங்கரவாதி என்ற சொல்லையோ பயன்படுத்தவில்லை.
உலகில் 110 நாடுகள் மரண தண்டணையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று ஐ நா மன்றத்தில் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, இந்தியா இந்த மரண தண்டணையை நிறைவேற்றியுள்ளது. தமிழ்ச் சமூகம் இதனைக் கொண்டாடிக் கொண்டுமிருக்கின்றது.
தமிழ்ப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக அஜ்மல் கசாப்பின் தூக்கினை விவரித்துக் கொண்டாடும் அதே வேளையில், நாகரீக சமூகங்கள் மரண தண்டணையை ஏன் ஒழிக்க விரும்புகின்றன என்பது பற்றிய விவாதத்தைத் தமிழ் மக்களிடம் தொடங்கி வைத்திருக்கும் அரிய வாய்ப்பினைத் தவற விட்டிருக்கின்றன.
தூக்கு தண்டணை நிறைவேற்றப்படக் காரணமாக அமைந்த மும்பைத் தாக்குதலை கசாப் திட்டமிட்டவரல்ல என்பது உலகறிந்த விஷயம். அதனால் தான், அவரை துப்பாக்கிதாரி என்ற அடைமொழியுடன் நிறுத்திக் கொண்டுள்ளது பிபிசி தமிழோசை. "அவரைத் தூக்கில் போடாமல் இருந்திருந்தால், இந்தச் செயலைச் செய்யத் தூண்டியவர்கள் பற்றி அவர் இன்னும் விரிவாகச் செல்லியிருக்கலாம் என்பதையும்", ஒரு ஆங்கில நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது.
2000 பேருக்கும் அதிகமானோர் பலியாகக் காரணமாக இருந்த இன மோதல்களைத் திட்டமிட்டவர்களும், செயல்படுத்தியவர்களும் குற்றவாளிகளாகவோ, தீவிரவாதிகளாகவோ, பயங்கரவாதிகளாகவோ கருதப் படவில்லை என்பதையும் ஒரு விவாத்ததில் ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான ஆரோக்கியமான விவாதங்களை எழுப்பி, நாகரீக சமூகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டுவதை விடுத்து, பக்குவப்படாத நிலையில் செய்திகளை வெளியிட்டு, உலக அரங்கில் தமிழ் முன்னணி நாளிதழ்கள் தம்மைத் தாமே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளன.
செய்கையை கட்டுரையாளருடன் சேர்ந்து நானும் வன்மையாக கண்டிக்கிறேன். கசாபுக்கு பொருத்தமான அடைமொழியாக, அஹிம்சாவாதி, காருண்ய கசாப் ஆகியவற்றைப் பரிந்து உரைக்கிறேன். கட்டுரையாளர் ஏன் சுற்றி வளைத்து மூக்கைத் தொட வேண்டும்? கசாபுக்கு பாரத ரத்னா வழங்கக் கோரி இயக்கம் நடத்தலாமே! கசாப்பின் மிருக வெறிக்குப் பலியான 166 உயிர்களும் கட்டுரையாளருக்க ு மயிருக்குச் சமம் போலும்! இணைய தளத்துடன் நின்று விடாமல், கட்டுரையாளர் தெருவில் இறங்கி மக்களிடம் சென்று தம் கருத்தைப் பரப்பட்டும்! அதுதான் நேர்மை!
இந்த தாக்குதல் , தீவிரவாதத் தடுப்புப்படைத்த லைவரும் தீவிரவாதம் என்பது முகமதியர்களிடம் மட்டுமல்ல இந்துஅடிப்படைவா திகளிடமும் இருக்கிறது என்று சொல்லி, இந்து சாமியாரிணி பிரக்யா சிங், போன்ற மற்றும் பலரை காராக்கிருகத்தி ல் உறங்கவைத்த, இந்து தீவிரவாதிகளுக்க ு ராணுவமேஜர் வரை தொடர்பு உள்ளது என்று வழக்கு தொடுத்த( ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து ராணுவத்தில் மட்டுமே பயன்படுகிறது அது பள்ளிவாசல் வாயிலுக்கு எப்படிவந்தது என்று கேள்வி எழுப்பவைத்த ஹேமந்த் கர்காரே கொல்லப்பட்ட விதமும் சந்தேகத்தை எழுப்பவல்லது என குறைந்த அளவே ஆராய்ச்சி செய்யும் யாருக்கும் இந்த 166 பேர் கொல்லப்பட்டதை தடுத்திருக்க முடியும் என்றும் என்ன காரணத்திற்காக திறந்த வீட்டில் நாய் நுழைகிற அளவுக்கு அந்நிய நாட்டில் நுழைகின்ற பதற்றமே இல்லாமல் நுழைய வைத்த காவலினைமைக்குக் காரணம் யார் என் விநா எழுப்பியுள்ளார் முநநாள் காவல்துறை அதிகாரி ஒருவர். படியுங்கள் கர்க்காரேவைக் கொன்றது யார்? என்ற மும்பை தாக்குதல் மட்டுமன்றி கவனத்தை ஈர்த்த அனைத்து தீவிரவாதச்செயல் களையும் ஆய்ந்திருக்கிறா ர் . இது ஒரு அரசு செய்த கொலை என பெரும்பாலோர் கணிக்கின்றனர்.
துக்கிலிட்டாலும ் போகும்
இந்திய ஏகாதிபத்தியத்தி ன் மற்றுமொரு காட்டுமிராண்டித ்தனம். மரண தண்டனைக்கு எதிராக அனைவரும் வலுவாக குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது.
இவ்வாறான ஆரோக்கியமான விவாதங்களை எழுப்பி,நாகரிக சமூகம் மேற்கொள்ளவேண்டி ய நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டுவ தை விடுத்து,பக்குவ ப்படாத நிலையில் செய்திகளை வெளியிட்டு,உலக அரங்கில் தமிழ் முன்னணி நாளிதழ்கள் தம்மைத்தாமே தரம் தாழ்த்தி கொண்டுள்ளன.//
தமிழ் நாளிதழ்கள் தாமும் தரம் தாழ்ந்து, படிக்கும் வாசகன் அறிவையும் மழுங்கடித்து அவனை வெறும் உணர்ச்சிப் பிண்டமாக வார்த்தெடுப்பதி ல் வெற்றிபெற்று விட்டன,என்பது முதல் பின்னூட்டத்திலே யே தெரிந்துவிட்டது .அவர்கள் இலக்கை அடைந்து விட்டார்கள். “தி இந்து” திருந்தினாலும் தமிழ் காகித வியாபாரிகள் திருந்தமாட்டார் கள்.அநியாயமாக கொல்லப்படும் அப்பாவி மனித உயிர்கள் கூட இங்கு மதத்தை வைத்தே மதிப்பிடப்படுகி றது. இது போன்ற மதிப்பீட்டாளர்க ள் மனம் குளிர மோடி அவசியம் பிரதமர் ஆகி, இரண்டாயிரத்தை இரண்டு லட்சமாக உயர்த்தவேண்டும்
மக்களுக்காக உழைப்பவர்களின் மரணம் தாய் மலையை விடக் கனமானது என்றார் மாவோ. பகத்சிங்கின் மரணம் தாய் மலையை விட கனமானது. அதே நேரத்தில் மக்கள் விரோதிகளின் மரணம் இறகை விட லேசானது. கொண்டாடத் தக்கது. 166 பேரைச் சுட்டுக்கொன்று, 250க்கும் மேற்பட்டோரை நொண்டி முடமாக்கிய அஜ்மல் கசாப் வெறுக்கத்தக்க மக்கள் விரோதி. அந்த மிருகத்தின் சாவுக்கு வருந்துபவன் மனப்பிறழ்ச்சி நோய் உடையவன். ஊருக்குள் புகுந்து கண்டவர்களையும் கடித்துக் குதறும் வெறி நாயைச் சுட்டுக் கொல்வதில் என்ன தவறு? ஒரு மக்கள் விரோதியின் மரணத்தைக் கொண்டாட மறுப்பவன் மன நோயாளியே!
கசாபைக் குற்றவாளியாக உருவாக்கிய இந்தச் சமூகம் தண்டிக்கத் தக்கதில்லையா ? என்பதே அவரது வாதம்.
பாகிஸ்தனில் ஏழ்மையில் வாடவிட்டு, கல்வியை மறுத்து குற்றவாளியாக உருவாக்கியது இந்தச் சமூகம்.
நீதி பரிபாலனத்தின் வழி ஒருவருக்கு மரண தண்டணை வழங்கலாகாது என்பது நீதியரசர் வி ஆர் கிருஷ்ணய்யரின் கருத்து. ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையவர்கள ் என்று குற்றஞ் சாட்ட்டப் பட்டு தூக்கு தண்டணை விதிக்கப் பட்டுள்ளவர்களைத ் தூக்கில் போட வேண்டாம் என்று அப்போதைய ஜனாதிபதி கே அர் நாராயணனுக்கு சோனியாகாந்தி எழுதிய மடலை முன்வைத்து வாதிட்டுள்ளார் கிருஷ்ணய்யர்.
thehindu.com/.../...
RSS feed for comments to this post