எங்கும் எதிலும்
உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி.
மனிதனை மனிதன் நம்பாமல்
வீட்டுக்குக் காவல் நாய்.
கொல்லைவழி போய்
பெரிய வீட்டுக் கோடியில்
பனையேறும் முருகன் அண்ணா.
காலை உணவு சுமந்து விற்கும்
பசியோடு பள்ளி செல்லாச் சிறுமி.
சாதிப்பெயரோடு
தன் பெயரை வைத்துக்கொண்டாலும்
*ஆச்சி* என்றழைக்கும் என் தாத்தா.
*உன் நல்வாழ்வுக்காகவே
உன்னை விட்டுப் போகிறேன்*
என்று பிரியும் காதல்.
விபச்சாரி வீடு சென்று
கால் அலம்பி
வீடு நுழையும் கணவன்.
ஒவ்வொரு முறையும்
*இனி வந்தால் வேண்டாம்*
என்று நினைத்தாலும்
வந்தவுடன்
முடி கத்தரிக்கத் தொடங்கும் கைகள்.
‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!
- ஹேமா, சுவிஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை