சிலருக்குவெற்றுப்

பெயர்

சாதியால்

சிறைபட்டோர்க்கோ

தன்மானம்பற்றும்

உயிர்

 

படைத்தகடவுளின்

பாதத்துகளில்பிறந்த

கடையன்

எனும்அவர்பொய்யை

உடைத்துகடஉள்

புகுந்த

விடையோன்

 

பாதியில்வந்தவர்

ஓதியசாதியை

மோதிமிதித்தவன்

நாங்கள்

ஆதியில்பிறந்த

சாதியிலாதவர்

என்றறிவித்தவன்

கடையன்நீ

என்றவரை

நாட்டின்சக்கரத்தை

சுழலவைக்கும்

கடையாணி

எனச்சொல்லச்செய்தவன்

 

தீட்டாகிவிடும்

என்று

குடைசாய்த்தவரை

குடைசாய்த்தவன்

 

நூலை

நூலால்

அறுத்தவன்

 

தன்னைப்

பிடிக்காமல்

வெறுத்தவர்பலர்

தன்னைப்

படிக்காமல்

வெறுத்தவர்பலர்

என்றறிந்தும்

வெறுத்தவர்க்கும்

சாதிவினையறுத்த

வீரன்

 

ஒடுக்கப்பட்டோர்

விடுதலையின்

அகரம்

தீண்டாமையை

திருத்திய

மை

 

ஒருமையை

அழித்த

பன்மை

 

சாகும்சனத்தை

மீட்கும்

சாசனத்தை

எழுதிய

எழுத்து

கருத்தக்குழந்தைகளாம்

திராவிடரை

மீட்கும்

கருத்துக்குழந்தைகளை

ஈன்றெடுத்தத்தாய்

 

பூதானம்பறித்து

வாழ்வோரைப்

புரட்ட

ஊமையர்க்கு

நாதானம்

அளித்தவள்ளல்

 

புரட்சியைத்தொடங்க

தேவையில்லைதுவக்கு

பேரழிவுஆயுதமாம்

கற்பித்தலைதொடங்கு

என்றுகற்பித்தவன்

 

அவன்

போராளியின்தொடக்கம்

சமத்துவத்தின்எல்லை

Pin It