ஆற முடியாமல் அலைகிறது
பொங்கும் மனத்தின் கோபம்
சுவாசப் பைகளை நிரப்பும் காற்று
புயலெனச் சீறி பெருமூச்சாகிறது
தொலைந்து போன வாழ்வுகளை அபகரித்து
குப்பையில் கொட்டும் கொடும் வியாதி உங்களுடையது
தளிர்களின் கைகளில் சூலத்தைத் திணிக்கும்
எண்ணக்குழிகள் படுபாதாளமானவை
படிப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய அக்கைகளை
இடிப்பதற்குத் தயாராக்கும் இதயமற்றவர் நீங்கள்
ஒளியின் ஊற்றான கண்களை
இருளுக்கு இடமாக்குகின்ற அழுகல் அறிவு உங்களுடையது
நிழலை எரித்து குளிர் காயும்
மடத்தனம் நிறைந்தது உங்கள் வாழ்வு
குழந்தைகளின் மெல்லிறகு மூளைகளில்
மதக்கனத்தை தூக்கிப் போடும் உங்களை
ஒப்பிட விலங்குகள் ஏதும்
உலகில் இல்லை என்பதால்
சுரக்கும் எச்சிலை துப்பிட பயன்படுத்துகிறோம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- யாழன் ஆதி
- பிரிவு: தலித் முரசு - ஜூன் 2009