yazanathiகுமைந்து வெளியேறும் கண்ணீர்
கோபத்தால் மாறுகிறது நெருப்பாய்

அணைக்கவியலா வெம்மையில்
எழுகின்ற பக்கமெல்லாம் தெரிகிற
உயிரின் வலியில் துவழ்கிறது மனம்

எதனினும் தணியாத தாகம்
உயிரைக் குடித்தே முடிகிறது

தொடுவானின் செஞ்சிவப்பாய் மாறி
கனறுகிறது ரத்தம் தோய்ந்த நிலம்

தீத்துண்டமாய் வெளியில் தகிக்கிறது
உயிரினைப் பறிகொடுத்த உடல்

அடித்து அடித்தே விரட்டும் ஆதிக்கம்
கொன்றே ஓய்கிறது இறுதியில்

வாழும் போதே துரத்தி ஒதுக்கி
ஒடுக்கி நுணுக்கி மதியாத கைகள்
செத்த பின்பு என்ன செய்யும்?
செத்த எலி ஒன்றை தூக்கி
வீசுதலைப் போல
வீசுவதைத் தவிர

மண் வீழ்ந்த வித்தொன்று
முட்டி மோதி கிளம்பும் நாளில்
பெரும்பாறைகளும் தூளாகலாம்


ஈழப்போராளிகளின் நினைவிடம்

ThuyilumIllamபுதைப்பதை விதைப்பதாகவே
நம்ப முடிகிற வாழ்வில்
பிறப்பும் இறப்பும்
வெறும்
எண்ணிக்கையாவதில்லை...
இவர் வந்தார்
அவர் சென்றார் என
முடித்துவிட
இயற்கை எழுதிய
முடிவுரையா இது?
ரத்தம் தோய்ந்ததாக
தசைகள் இறுகியதாக
எலும்புகள் உடைபட்டதாக
நரம்புகள் அறுந்ததாகவுமின்றி
வேறெப்படி எழுதிவிட முடியும்
விடுதலைப் போரின்
வரலாற்றை...

-யாழன் ஆதி
Pin It