கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
தலித் முரசு - மார்ச் 2008
- விவரங்கள்
- யாழன் ஆதி
- பிரிவு: தலித் முரசு - மார்ச் 2008
யாழன் ஆதி கவிதை
இதனால் சகலமானவர்களுக்கும்...
நீதியின் பாதை உங்களுக்கானதாகவே இல்லை
அநீதிகளின் குரலில்
நீங்கள் கத்துகிறீர்கள்
மலத்தைக் கழிப்பதைப் போல
ஜாதியை கழிக்காமல்
அதை மீண்டும் மீண்டும் உண்ணுகிறீர்கள்
உங்கள் வாயின் வார்த்தைகளில் நாறும்
மலத்தை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள்
சகல ஜாதிகளையும் சீடராக்குங்கள்
மறந்து போனது உங்களுக்கு
உங்கள் ஜாதியை மட்டும்
உள்ளே வைத்திருக்கிறீர்கள்
தெரிந்தே செய்யும் உங்கள் பாவத்தை
எங்கே கொட்டுவீர்கள்
ஜாதி மகிமையின் ரூபத்தை
சரியாகவே மிகச்சரியாகவே காட்டுகிறீர்கள்
நீங்கள்
வெள்ளை அங்கி அணிந்தாலென்ன
மஞ்சள் கட்டினால்தான் என்ன!