மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

100 வது ஆண்டில் சோசலிசம் - இலக்கு வைத்துப் பயணிக்கும் மக்கள் சீனம்!

02 ஜூலை 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

ஆர்தர் கிரோபர் 2002 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் சீனா-சார்ந்த ஆராய்ச்சி சேவையான டிராகனோமிக்ஸை கூட்டாக நிறுவினார். 2017 வரை அதன் முதன்மை இதழான சீனா எகனாமிக்...

கருத்துரிமையை மறுப்பதற்கா நீதித்துறை?

02 ஜூலை 2025 சிந்தனையாளன் - மே 2025

நடிகர் கமலகாசன் நடித்த திரைப்பட நிகழ்ச்சியில் பேசியஅவர், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட கன்னட திரைப்படநடிகர் சிவராஜ்குமாருக்கும் தனக்குமுள்ள அன்புறவை...

உயர்கல்வி நிறுவனங்களில் மேல்சாதியினரின் ஆதிக்கம்

02 ஜூலை 2025 சிந்தனையாளன் - மே 2025

2006ஆம் ஆண்டு ஒன்றிய அரசின்கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு முதன்முதலாக வழங்கப்பட்டது. 1970கள் முதல்...

வானில் இருந்து தூவப்பட்ட நூறு மில்லியன் விதைகள்

02 ஜூலை 2025 சுற்றுச்சூழல்

சூழல் நட்புடன் ஒரு வான் சாகசம். ஸ்கை டைவிங் (Sky diving). ஸ்கை டைவிங் என்பது வானில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் பாதுகாப்பான ஒரு குறிப்பிட்ட உயரம் வரை...

சிகரம் ச.செந்தில்நாதனின் அமர படைப்பு

02 ஜூலை 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியில் பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்குண்டு, மதங்கள் உருவாக்கிய பக்தியும் அவற்றுக்கிடையே நடந்த போர்களும் பல்வகைப்பட்டவை;...

ரொட்டித் துண்டுகள்

02 ஜூலை 2025 கவிதைகள்

நல்ல உறக்கத்தில் சங்கிலி என் கனவினில் வந்து இரண்டு ரொட்டித் துண்டுகளும் கொஞ்சம் தண்ணீரும் கொடு என்றது மறுபேச்சின்றிகுளிர் சாதனப் பெட்டியிலிருந்துஇரண்டு...

தைரியலட்சுமி

02 ஜூலை 2025 கவிதைகள்

பெற்றோரின் பார்வை தாங்காதென்பதால்காதல் மலரை மனதில் மறைத்தாள். கணவனின் கண்கள் பொறுக்காதென்பதால்கவிதைப் பூக்களை கனவில் ஒளித்தாள். புகுந்த வீட்டார் புருவம்...

தஞ்சை ஜில்லா ஆதி திராவிட வாலிபர் மகாநாடு

02 ஜூலை 2025 பெரியார்

தோழர்களே! இன்று இம்மகாநாட்டைத் திறந்து வைப்பது என்னும் முறையில் இந்த மகாநாடு சம்பந்தமாய் நான் ஏதாவது சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று நீங்கள்...

தமிழிலிருந்து தமிழியல் நோக்கிய பயணம்

30 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

போரின் வடுக்கள்... தீய்ந்துபோன விழுப்புண்கள்... காணாமல் போதல்கள்... உடல் ஊனமுறுதல்... இழப்பின் துயர் தரும்வலி... போரிலிருந்து மீண்டெழ முடியாதபடியான...

திருப்பூர் நகர 28 சிறுகதைகள்

30 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் கதைகளை மாவட்ட வாரியாக தொகுப்பாக்கி வெளியிட்டு வருகிறார் சேலம் பொன் குமார் அவர்கள். உழைப்பும் பணச்...

வள்ளிமலை வரலாறும் வழிபாடும் சமண சிற்பங்கள்

30 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வள்ளிமலை என்ற இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. அந்தக் கிராமத்தில் அந்த சிறிய மலைப் பகுதிக்கு அருகே மிகப்பெரிய குளம், அதை ஒட்டிய...

அன்றாட தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கான சிறந்த கையேடு

30 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

நீண்ட அனுபவம் பெற்ற ஒரு நல்ல தமிழாசிரியர் என்பதோடு மட்டுமல்லாது, நமது தமிழ் மொழியையும், அதன் இலக்கிய இலக்கண வளங்களையும் வெவ்வேறு தளங்களில் மிகச் சிறப்பாகப்...

குயிலனின் முச்சந்தியில் மூதறிஞரும் ஈ.வெ.ராவும்

30 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

தமிழிலக்கியப் பெரும்பரப்பில் 1939இல் தொடங்கி 2002 வரைக்குமான காலவெளியில் அசாத்தியப் பல்திறப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர் கவிஞர் குயிலன் என்ற கு.இராமலிங்கன்....

ஒரு நூற்றாண்டுப் பெண்களின் கதை

30 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

எழுத்தாளர் அகிலாவின் இரண்டாவது நாவல் ‘அறவி.’ இவர் ஏற்கெனவே ‘தவ்வை’ என்றொரு நாவல் எழுதியுள்ளார். மனநல ஆலோசகராகப் பணியாற்றுகிறார். இந்தப் பணி அனுபவம்தான் ‘அறவி’...

அரோகராவுக்கு ஆசைப்படும் பாரத மாதா

30 ஜூன் 2025 கவிதைகள்

மாநிலத்துக்கு மாநிலம் மாற்றுப் பெயர்களில்அவாதாரமெடுத்தகடவுளுக்கு நோக்கம்எதுவாகவும் இருக்கலாம்.பக்தாளுக்குஒரே நோக்கம் தான்...அடிமைகளைத் தூண்டிமத வெறுப்பில்...

கீற்றில் தேட...

"மாட்டுக்கறி தின்னும் புலையா - உனக்கு
மார்கழித் திருநாளா?'' - என்ற கேள்வியால்தான் அன்று நந்தன் முகத்தில் அறைந்தனர். இன்றும் தொடர்கிறது நந்தன் கதை.

உண்ணும் உணவு, செய்யும் தொழில் எல்லா வற்றுடனும் சாதி முடிச்சைச் சலிக்காமல் போட்டது, இந்துத்வாவின் வருண சமூகம். உண்ணும் உணவில் ஒருவருக்கு உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டதும், உண்ணும் உணவைக் கொண்டு ஒருவரின் சாதி நிர்ண யிக்கப்பட்டதும், உலகிலேயே இங்கு மட்டும்தான்.

brahmins_321ரத்தக்கண்ணீர் படத்தில் ராதா சொல்வார் - இங்கதான்டா சாப்பிடறதுல கூட ரெண்டு கட்சி வச்சிருக்கான் - என்று. அது கட்சியன்று, சாதி. இரண்டல்ல இரண்டாயிரம். பார்ப்பனர்கள் புலால் உண்ணாதவர்களாம். அதனால் உயர்ந்தவர்களாம். அவர்களைப் பார்த்து சைவப் பிள்ளை, சைவச் செட்டியார், சைவ முதலியார் என ஒரு வரிசை. பெரியார் சொல்வார், "இவனுங்க எல்லாம் ஒன்றரைப் பார்ப்பானுக்குச் சமம்'' வரலாற்றைப் புரட்டினால், புலால் உண்ணும் பழக்கமே எங்கிருந்து, யாரிடமிருந்து வந்தது என்பது புரியும். யாகம் நடத்தி, அந்த யாகத்தீயில் மாடுகளையும், குதிரைகளையும் வெட்டிப்போட்டு, நெய் வழிய வழிய புலால் உண்ட கூட்டம் எது என்பதைப் "புனித வேதங்கள்' புகலும்.

"ரிக்வேதகால ஆரியர்கள்' என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன், "அவர்களிலே (ஆரியர்களில்) மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை எனலாம். பெரிய பெரிய ரி´கள், முனிவர்களுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றாலும் புலால் மிகவும் அவசியமான ஒன்றாகும்'' என்று எழுதியுள்ளார்.

"தன் மகன் புலவனாகவும், புகழ்பெற்றவனாகவும், நல்ல பேச்சாளனாகவும், எல்லா வேதங்களையும் படித்தவனாகவும், முழு ஆயுளைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால், தாயானவள் நெய்யுடன் கலந்த பொலி எருது அல்லது எருதுவின் மாமிசம் கலந்த சாதம் சாப்பிட வேண்டும்'' என்கிறது பிரகதாரண்ய (6-4-18) உபநிடதம்.

அன்று வாழ்ந்த ஜீவகாருண்ய சீலர் புத்தர் மட்டுமே. "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என உரைத்தவர் வள்ளுவர் மட்டுமே. மற்ற அனைவரும் மாட்டுக்கறி தின்ற மகானுபாவர்கள் தாம்!

அவர்கள் தின்ற போதெல்லாம், மாட்டுக்கறி என்பது மாமுனிவர்களின் உணவாய் இருந்தது. அதனையே நாம் தின்னத் தொடங்கிய பின், அது அருவெறுக் கத்தக்க உணவாகிவிட்டது. கொல்லாமை அறம் கூறி அன்று பெளத்தமும், சமணமும் மக்களிடம் செல்வாக்குப் பெறுவதை அறிந்த ஆதி சங்கரர், அதனைத் தன் கொள்கையாக வரித்துக் கொள்ள முயன்றார்.

பெளத்தத்தின் பல சிறப்புக் கூறுகளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, தன் மதமே அஹிம்சை போற்றும் அரிய மதம் என ஆரவாரம் செய்தார். அதனால்தான்அவரைப் "பிரசன்ன பெளத்தர்' (பெளத்தத்தின் பின்னால் மறைந்து நிற்பவர்) என்று இன்றும் கூறுகின்றனர். இப்படித்தான் பார்ப்பனர்கள் "சைவர்களாக' ஆயினர். அவர்கள் சைவர்கள் ஆனவுடன், அசைவர்கள் ஈனப்பிறவிகள் என்று அறிவிக் கப்பட்டனர்.

அசைவம் என்று சொல் லப்படும் புலால் உண்ணும் பழக்கத் திலும் பல நிலைகள் கற்பிக்கப் பட்டன. ஆடு, மீன், கோழி தின்பவர்கள் சற்று உயர்தரம். "கோமாதா' என்று போற்றப்படும் மாட்டின் கறியை உண்பவர்கள் புலையர்கள், கீழானவர்கள். அவர்களைத் தீண்டவே கூடாது. பன்றிக்கறி தின்பவர்களோ அவரினும் கீழான வர்கள். பூனைக்கறி, நரிக்கறி தின்பவர் கள் எல்லோரும் இழிவானவர்கள்.

எழுதப்படாத சட்டமாக இன்றுவரை நம் சமூகத்தில் இதுதானே நிலவுகிறது? உழைக்கும் மக்கள் மாட்டுக்கறியை விரும்பி உண்பதற்கான காரணம் என்ன? குறைந்த செலவில், நிறைந்த புரதம் அதில் உள்ளது என்பதுதான். வெயிலில் போராடி, வியர்வை சிந்தி உழைப்போர் தங்களுக்குத் தேவையான புரதச் சத்தைப் பெறுவதற்கு அந்த உணவை நாடுகின்றனர். அதிலென்ன குற்றம்? அதிலென்ன அருவெறுப்பு? கோழி, கண்டதையும் தின்கிறது. மீனோ அழுக்கையே ஆகாரமாகக் கொள்கிறது. அவற்றை எல்லாம் தின்னலாமாம். அது நாகரிகமாம். ஆனால், புல், வைக்கோல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு ஆகியனவற்றை மட்டும் உண்டு வளரும் பசு மாட்டின் கறி அருவெறுப்பாம். எந்த ஊர் நியாயம் இது! அவாளின் அந்த ஊர் நியாயம்தான்...வேறென்ன?

மேலை நாடுகளில் நூற்றுக்கு தொன்னூறு பேருக்கு மேல், மாட்டுக்கறியும், பன்றிக்கறியும்தான் உண்கிறார்கள். அமெரிக்காவில் வான்கோழிக் கறிதான் சிறப்பு விருந்து. தென் அமெரிக்காவில் குதிரைக் கறியும், அரபு நாடுகளில் ஒட்டகக் கறியும் சாதாரணமானவை. சீனாவில் தவளை, பாம்பு எல்லாம் உணவு வகைகளே. கொரிய நாட்டின் தலைநகரில் (சீயோல்) நாய்க்கறிக்குத் தனி வரவேற்பு உண்டு.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் உள்ளது. அவரவரின் தேவை, சுவையைப் பொறுத்ததாகவும், அந்தந்த நாட்டுச் சூழல், பருவநிலைகளைப் பொறுத்த தாகவும் உணவுப் பழக்கம் அமைகின் றது. ஆனால் உணவை வைத்து உயர்வு தாழ்வு எங்கும் கற்பிக்கப்படுவதில்லை, இந்தியாவைத் தவிர.

அதனால்தான், ஜெயலலிதா மாட்டுக்கறி தின்னும் பழக்கமுடையவர் என்று நக்கீரன் எழுதியவுடன், அவர்களின் அலுவலகத்தைக் கல்லால் அடிக்கின்றனர். எங்கள் தலைவியை எப்படி இழிவுபடுத் தலாம் என்கின்றனர்.

இதிலே இழிவு எங்கிருந்து வந்தது. ஒரு வேளை அவருக்கு அந்தப் பழக்கம் இல்லையயன்றால், நக்கீரன் தவறான செய்தி வெளியிட்டதாய்ச் சொல்லி, அதற்குரிய சட்ட நடவடிக்கையை எடுத்துக்கொள்ளட்டும். ஜெயலலி தாவை நக்கீரன் இழிவுபடுத்தி விட்ட தாக ஏன் சொல்ல வேண்டும்?

அப்படிச் சொல்வதன் மூலம், மாட்டுக்கறி தின்பது இழிவு என்று தானே ஆகிறது. அப்படியானால் மாட்டுக்கறி தின்பவர்கள் அனைவரும் இழிவானவர்கள் என்பதுதானே பொருள். அப்படிச் சொல்வது தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றம் என்பது ஒருபுறமிருக்க, மாட்டுக்கறி தின்னும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை இழிவானவர்கள் என்று சொல்ல எவனுக்கும் உரிமை யில்லை என்பதை உணர வேண்டும்.

மாட்டுக்கறி தின்பவர்கள் அனைவரும் இழிவானவர்கள் என்றால், அந்த இழிந்தவர்களின் வாக்குகள் இனி எங்களுக்கு வேண்டாம் என்று அவர்கள் முதலில் அறிவிக்கட்டும். அதன்பின், நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கலாம். அப்படித் தாக்குகிறவர்களும், மாட்டுக் கறி சாப்பிடாத "அவாளாகவே' மட்டும் இருக்க வேண்டும் !