crane in riverஓடிக்கொண்டிருப்பது
நிற்பதாகத் தெரியலாம்
முகம் திறக்காமல்
பார்க்கத் தெரிந்தால்
திறந்திருக்கும்
அகவெளி புரியும்
ஆகாயத்தின் முடிச்சை
அவிழ்த்தபடியே நகரும்
நீரின் விரல்கள்
நல்லூழ் நவில்தலென
அந்நன்னாற்று வளைவில்
கொக்கதிரா நீச்சல்
பொன்மீனுக்கு
நின்று குனிந்து அதன்
ஆவலைக் காண்கையில்
ஓடிக்கொண்டிருப்பது
நின்றதாகத் தெரிகிறது
நெளியும் சலசலப்பில்
நீர்மின்மினி
சடுதியில் காணாமல்போன
மீனுக்கோ நிம்மதி
அசையாமல் நிற்கிறேன்
கழுத்து திரும்பிய
கொக்கிடம் என்ன சொல்ல
நிமிர்ந்து நின்ற
என்னிடம் தான் என்ன சொல்ல?

கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.