தொலைந்து விடுதலின் மகத்துவம்
கசிந்து உருவாகிறது
ஒவ்வொரு சந்திப்பினுடேயும்
அடக்கவியலாப் பேராவலோடு
தாகத்துடன் காத்திருக்கின்றன
வெளியேற வழியற்று
திகைத்து நிற்குமென்
நேசப்பெருவெளி
உன்னோடு அளாவுளாவ
இரவின் கதவு திறந்து
தனிமையில் உறவாடத் தொடங்குகிறது
என் அந்தரங்க பரிமாணங்கள்
இருளேந்திய வெளிச்சத்தில்
உன்னை இறுக்கியணைக்க
தேகக் கொடிகளின் சல்லாபம்
எனது உள்ளக்கிடக்கைகளை உயிரூட்ட
தகிப்பின் வெம்மைதணில்
துவண்டு விழுகிறேன்
தூக்கம் புறக்கணித்து
நீளும் ஒரு இரவில்
தனிமையைக் கைப்பற்றி
சுயத்தை வரைகிறதென் தூரிகைகள்
யாருமற்ற வனாந்திரமாய்
அலைகிறது என் வானம்

- நீதிமலர், வழக்கறிஞர்

Pin It