ஆகப் பெரிய காட்டையே அழித்துவிடும்
பெரு நெருப்பின்
முதல் பொறியின்
சூட்சுமத்தை ஒருபோதும்
காடு அறிவதில்லை.

அது புரிபடும்போது
சகலமும் சாம்பல்
ஆகி விடுகின்றது.

- அ.ஈடித் ரேனா

Pin It