பென்சிலை கூராய் சீவி
குத்தும் போது
உணரும் வலி
மரங்களினுடையது!
____________________
சித்திரை, மார்கழி
வேறல்ல ஒன்று தான்
நடைபாதையில் உறங்குபவனுக்கு!
________________________
காலங்களை கலைத்து
விளையாடிய பிள்ளைகளால்
மணிக்கூண்டில் ஏற்றப்படுகின்றன
மணிகள்!
_______________
காற்றின் கொடையான
புல்லாங்குழல்
சில்லிட்டுச் சிலிர்த்தது
பார்வையற்றவர்
ஊதும் போது!
- ந.சுரேஷ், ஈரோடு