ஜோடி செருப்பில்
ஒன்றின் வார் அறுந்தவுடன்
சரிசெய்து கொண்டுவிட்ட
அப்பாவுக்கும்,
கொலு படியில் இடம் மாறிவிட்ட
சீதை பொம்மையை ராமர் அருகில்
வைத்து அழகு பார்த்த அம்மாவுக்கும்,
ஏனோ புரியவில்லை...
மணமான மறுவருடமே
கணவனை இழந்து
கைம்பெண்னாகிவிட்ட
மகளின் தனிமை!

- சஜயன்

 

Pin It