*
எங்கோ ஒரு முறை
சாத்தியமான துரோகச் சாயலை
வர்ணம் தீட்டுகிறது இவ்விரவு..

புன்னகைகளின்
குழிக்குள்ளிருந்து வழியும் கனவுகளை
மொழிபெயர்த்துக் கற்றுக்கொள்ள
மௌனப்படிவம் நீட்டுகிறது
உன் நேற்றைய நிழல் ஒன்று..

அடுக்கி தைத்து வைத்திருக்கும்
ஞாபகங்களைப்
பிரித்துப் பதறும்
விரல்களுக்குப் புரிவதில்லை
இந்த அலமாரியின் தடுப்புகளுக்குப் பின்னே
காத்திருக்கும் தவிப்பின் வரிகள் எதுவும்..

இவைகளைக் கடந்தோ
அல்லது
கடத்தியோ நிரப்பப் போகும்
படிவத்தின் இறுதியில்
கையெழுத்து இட
உன் பெயரைத் தான் சிபாரிசு செய்கிறது

எங்கோ ஒரு முறை
சாத்தியமான துரோகச் சாயலை
வர்ணம் தீட்டும் இவ்விரவு..!

****
--இளங்கோ

Pin It