பறவைகள் கூடுதிரும்புகின்றன
குஞ்சுகளுக்கு இரையோடு
குழந்தைகள் வீடுதிரும்புகின்றன
தாய்க்குச் சொல்லக் கதைகளோடு.
 
பொம்மைகளோடும்
பேசுகின்றன குழந்தைகள்
குழந்தைகளோடும்
பேசுவதில்லை நாம்.
 
அடித்த தாயையே    
கட்டிக்கொண்டழுகிறது
ஆறுதல் சொன்னவர்களை
விட்டுவிலகியோடுகிறது.
 
குழந்தைகள் உறக்கத்தில் முணுமுணுக்கின்றன
தேவதைகளின் கதைகளை வாசிக்கின்றன.
 
- ரவி உதயன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It