சமூகத்தை ஆளும் வர்க்கம், தான் மேலாண்மை செலுத்தும் வர்க்கத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள எப்போதும் ஆயுங்களை மட்டுமே நம்பி இருப்பதில்லை. மக்களை முழுவதுமாக ஆயுத நீக்கம் செய்துவிட்டு நிராயுதபாணியாய் நிற்கும் அவர்களை மிரட்டிப் பணிய வைக்க மட்டுமே ஆயுதங்களாலும், அவற்றைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்ட வன்முறை அமைப்புகளாலும் முடியும்.
ஆனால் வரலாறு முழுவதும் மாற்றி அமைக்கப்பட்ட சமூக அமைப்புகள் அனைத்துமே அரசின் இந்த ஆயுதப் பூச்சாண்டியை முறியடித்தே நடந்துள்ளன. மக்களை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று களத்திற்கு வரும் போராளிகள் யாரும் இந்த ஆயுதங்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சுவதில்லை.
அதனால்தான் ஆளும் வர்க்கம் வாள்களையும், துப்பாக்கிகளையும் கொண்டு இந்தச் சமூகத்தை அடிமைப்படுத்தியதை விட மக்களின் மூளையில் அடிமைத்தனமான சிந்தனையைக் கருத்தியால் ரீதியாக ஏற்றுக் கொள்ள வைத்து, அவர்கள் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகப் போராடாமல் பார்த்துக் கொண்டது. இதைத்தான் மார்க்ஸ் “கருத்து மக்களைப் பற்றிக் கொள்ளும் போது அது ஒரு பெளதீக சக்தியாக மாறி விடுகின்றது” என்றார்.
வேதங்களும், உபநிடதங்களும், புராண இதிகாசங்களும், மநு ஸ்மிருதிகளும், இந்த மண்ணில் விதைத்தது இந்த அடிமைத்தனத்தைதான். கோடான கோடி இந்திய மக்கள் இன்று தம்மீது திணிக்கப்பட்டிருக்கும் நெருக்கடிக்கு எதிராகப் போராடாமல் வாய் மூடி மெளனியாய் கடந்து போவதற்குக் காரணமாய் இருப்பது இந்த மண்ணில் பார்ப்பனியம் எப்போதோ வலுவாய் விதைத்துச் சென்ற இந்தக் கருத்தியல் குப்பைகள்தாம்.
துப்பாக்கிகள் தேவைப்படவில்லை, குண்டாந்தடிகள் தேவைப்படவில்லை - மக்கள் இயல்பாகப் பட்டினியையும் ஒடுக்குமுறையையும் கடந்து சென்றுகொண்டு இருக்கின்றார்கள். கோயில்கள் கூடப் பெரும்பாலும் திறக்கப்படவில்லை. ஆனாலும் அடிமைத்தனமான சிந்தனை இன்னும் நம்மை கடவுள் காப்பாற்றுவார் என்று இந்த மக்களை எண்ண வைத்திருக்கின்றது. இது பார்ப்பனியத்தின் வெற்றி என்றும் சொல்லலாம்; உலகளாவிய போக்கில் இதை ஆளும் வர்க்கத்தின் வெற்றி என்றும் சொல்லலாம்.
உலகம் முழுவதும் முதலாளித்துவம் தோல்வியுற்று நிதியாதிக்கக் கும்பல்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து இருக்கின்றன. இந்தப் பெருமந்தத்தைக் கொரோனோவானது இன்னும் மோசமான நிலையை நோக்கி உந்தித் தள்ளிக் கொண்டு இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாததோடு, இருக்கும் வேலை வாய்ப்புகளும் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன.
அதுவும் இந்தியா போன்ற பெரும்பான்மையாக இளைஞர்களைக் கொண்ட நாட்டில் இந்த நெருக்கடியானது காலப்போக்கில் ஆளும் வர்க்கத்தின் மீது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இன்று ஆளும் வர்க்கத்தின் முன் உள்ள முக்கியப் பிரச்சினையே இவர்களை எப்படி எதிர்கொள்ளப் போகின்றோம் என்பதுதான்.
நாம் முன்பே சொன்னது போலச் சமூகத்தின் அசமத்துவத்தை எதிர்கொள்ளும் சக்திகளை வன்முறை மூலம் மட்டுமே என்றென்றும் எதிர்கொள்வது என்பது இயலாத காரியம் என்பதோடு, அது மூலதனத்தின் குறைந்த பட்ச வளர்ச்சியைக் கூடத் தடுத்து நிறுத்தும். மூலதலத்தின் வளர்ச்சியானது அமைதியான சூழ்நிலையை எதிர்பார்க்கின்றது. அதாவது இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் எந்தவிதக் கேள்வியும் இன்றி எதிர்ப்பும் இன்றி சுரண்டுவதற்கான அமைதியை எதிர்பார்க்கின்றது.
அதை ஒரு சமூகத்தின் பொது உளவியலாகக் கட்டமைக்கத்தான் ஆளும் வர்க்கம் கல்வியை ஒரு ஆயுதமாக உலகம் முழுவதும் கையில் எடுத்திருக்கின்றது. இன்று பல கல்லூரிகளில் நடத்தப்படும் மதிப்பீட்டுக் கல்வி என்பது (வேல்யூ எஜுகேசன்) இந்த வகையைச் சார்ந்ததுதான். ஆன்மீகம் என்ற போர்வையில் பார்ப்பனியத்தைப் போதிப்பது.
ஏற்கெனவே பல பல்கலைக்கழகங்களில் வேத சோதிடம், வாஸ்து சாஸ்திரம், கர்ம காண்டம் போன்றவற்றைப் பாடத் திட்டமாக வைத்து அதில் முனைவர் பட்ட ஆய்வுகள் வரை அனுமதிக்கப்படுகின்றன. 2004-ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் கல்லூரிகளிலும், பல்கலைக்கழங்களிலும் சோதிடத்தைப் பாடமாக வைப்பதற்கு அனுமதி அளித்திருந்தது. நாடு எவ்வளவு மோசமான இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுகின்றது என்பதற்கு இவை எல்லாம் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இந்தப் பின்னணியில் இருந்துதான் நாம் இன்று மோடி அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கல்விக் கொள்கையைப் பார்க்க வேண்டும். பார்ப்பனியம் எவ்வளவு நயவஞ்சகமானது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினால் அதன் இலக்கியங்களையும் புராணப் புரட்டுகளையும் படிக்க வேண்டிய தேவை ஏற்படாதவாறு அதன் ஒட்டுமொத்தச் சூழ்ச்சியையும் இந்தக் கல்விக் கொள்கையில் அப்பட்டமாக ஆனால் அருவருக்கத்தக்க வகையில் சொல்லி இருக்கின்றார்கள்.
தேசிய கல்விக் கொள்கை அறிக்கை 4.13-இல் மும்மொழி கற்றல் என்பது மாநிலம், மண்டலம் மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப மொழிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லும் அதே வேளையில் அவற்றில் மூன்றில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. ஒன்று தாய் மொழி, மற்றொன்று ஆங்கிலம், மூன்றாவது நிச்சயமாக உங்களுக்குப் பிடித்த மொழி அல்ல. காரணம் பகுதி 4.17-இல் சமஸ்கிருதம் மும்மொழிப் பாடத்திட்டத்தின் ஒரு மொழியாகப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் எல்லா நிலைகளிலும் கல்லூரிகளிலும் ஒரு முக்கிய வளமூட்டக் கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும் என உறுதியாகத் தெரிவிக்கப் பட்டிருகின்றது.
அதே போலப் பகுதி 4.13-இல் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடிக்கும் முன் மூன்று மொழிகளிலும் அடிப்படைச் செயல்முறையில் தேர்ச்சி பெறுதல் தேவை என்று கூறுவதன் மூலம் முன்றாவது மொழியில் - அதாவது மாணவர்கள் மீது சங்கிகளால் திணிக்கப்பட எல்லா வாய்ப்புகளும் உள்ள சமஸ்கிருதத்தில் - தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்படுகின்றது. இதன் மூலம் மீண்டும் சமஸ்கிருதத்தின் மூலம் பார்ப்பனர்கள் தவிர்த்த கோடான கோடி சூத்திர மாணவர்களின் கல்வியில் கொள்ளி வைக்கக் காத்திருக்கின்றது இந்தப் பார்ப்பனியக் கல்வி முறை.
4.26-இல் NCFSE 2020-2021-ஐ உருவாக்கும்பொழுது NCERT 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்குத் தோதான ஒரு பயிற்சியை அடிப்படையாகக் கொண்டதொரு பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்றும், இந்தக் காலக்கட்டத்தில் அனைத்து மாணவர்களும் தச்சு, தோட்ட வேலை, மட்பாண்டம் ஆகியவற்றைச் செய்யும் உள்ளூர்க் கைவினைக் கலைஞர்களிடம் பத்து நாள்கள் புத்தகப் பையற்ற தொழிற்பயிற்சி பெற வேண்டும் என்று குலக்கல்வி திட்டத்தை பார்ப்பனத் திமிரோடு கொண்டு வந்திருக்கின்றது.
4.37-ஆனது பொதுத் தேர்வை இரண்டு சந்தர்ப்பங்களில் எழுத அனுமதிக்கின்றது. ஒன்று முதன்மைப் பொதுத்தேர்வு (Main exam) மற்றொன்று மதிப்பெண்ணை அதிகப்படுத்திக் கொள்வதற்கான தேர்வு (Improvement exam). இதன் மூலம் வசதி படைத்த பணக்கார வீட்டுப் பிள்ளைகள் தனியார் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து அதிகப்படியான மதிப்பெண் பெறுவதற்கு வழி திறந்து விட்டுள்ளது.
7.10 பின்வருமாறு கூறுகிறது: அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நேர்மறையான புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஒரு தனியார்ப் பள்ளியுடன் ஒரு பொதுப் பள்ளியை இணைத்து, அந்த இணைக்கப் பெற்ற இரு பள்ளிகளும் தங்களுக்குள் சந்திக்கலாம், தொடர்பு கொள்ளலாம், கற்றுக் கொள்ளலாம், முடிந்தால் தங்களிடம் உள்ள வளங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்ளலாம், தனியார்ப் பள்ளிகள் தங்களின் சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்தி, பகிர்ந்து, அரசுப் பள்ளிகளில் நிறுவலாம்; இதைப் போலப் பொதுப் பள்ளிகளும் முடிந்தவரை செய்யலாம்!
இதன் மூலம் அரசுப் பள்ளிக்கு சொந்தமாக உள்ள வளங்களைத் தனியார் கல்விக் கொள்ளையர்கள் சூறையாடவும் காலப் போக்கில் தனியார் பள்ளிகளே சிறந்தவை என்ற தோற்றத்தை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தி அவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிப் பள்ளியைவிட்டு நிற்கவும், அதன் மூலம் அரசுப் பள்ளிகளையே இழுத்து மூடவும் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
11.9-இல் இளநிலைப் பட்டக் கல்வி பல்நோக்கு வாய்ப்புகளுடன் 3 அல்லது 4 ஆண்டுக் காலப் படிப்பாக இருக்கலாம் என்றும் இந்தக் காலத்திற்குள் பொருத்தமான சான்றிதழ் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ், இரண்டாம் ஆண்டுக்குப் பின்னர் மேம்பட்ட பட்டயம் ('டிப்ளமோ’), மூன்றாம் ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டம், நான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ் ஆகியன வழங்கப்படும். ஓராண்டுக் கல்வியுடன் வெளியேறினால் சான்றிதழ் மட்டுமே கிடைக்கும், இரண்டாண்டுக் கல்வியுடன் வெளியேறினால் பட்டயம் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் கல்லூரியில் தொடர்ந்து படிக்க வசதியற்ற மாணவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் நின்றுகொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதே போலத் தனியார் கல்வி நிறுவனங்கள் வலுக் கட்டாயமாக மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு வெளியேற்றவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த 100 பல்கலைக்கழங்களுக்கு இந்தியாவில் செயல்பட வசதி செய்து தரப்படும் என்று 12.8-இல் அறிவித்திருப்பதன் மூலம் பன்னாட்டு கல்விக் கொள்ளையர்கள் இந்தியாவின் கல்விச் சந்தையைக் கைப்பற்ற அகலமாகக் கதவு திறந்து விடப்பட்டுள்ளது.
தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்றவாறு அதிகபட்சக் கட்டண வரம்பினை நிர்ணயிக்க வெளிப்படையான விதிமுறைகள் உருவாக்கப்படும் என்றும், இதனால் எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் 18.14 கூறுகின்றது.
மேலும், அனுமதிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விதிகளுக்குட்பட்டுத் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டங்களுக்குத் தகுந்தாற் போலக் கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ள வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. கல்விக் கொள்ளையர்களைக் குளிர்விக்க இதைவிட எப்படி வெளிப்படையாக அரசு தனது பெருநிறுவன ('கார்ப்பரேட்') விசுவாசத்தைக் காட்ட முடியும்?
இது மட்டுமல்ல! 3, 5, 8-ஆம் வகுப்புகளில் உரிய ஆணையம் நடத்தும் பள்ளித் தேர்வுகளை அனைத்து மாணவர்களும் எழுதுவார்கள் என்று கூறுவதன் மூலம் முதல் தலைமுறையாகப் படிக்க வரும் கிராமப்புற வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இடை நிற்றலுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. தச்சு வேலை, தோட்ட வேலை, மட்பாண்டம் செய்யும் வேலை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்து அவர்களை கிராமப்புறங்களிலேயே ஆதிக்கச் சாதிகளுக்குச் சேவை செய்யும் அடிமைகளாக மாற்ற வேண்டும் என்பதுதான் இந்தப் பார்ப்பனிய சனாதன அரசின் நோக்கமாகும்.
மேலும், மேல்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தேசியக் கல்வி முகமை (NTA) மூலம் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதன் மூலம் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து, படிக்கும் வசதியுள்ள பணக்கார மாணவர்களுக்கு மட்டுமே இனி உயர்கல்வி நிறுவனங்களில் இடம் என்ற நிலையையை ஏற்படுத்தி இருக்கின்றது.
தேசியக் கல்விக் கொள்கை - 2020 மாணவர்களுக்கு உதவும் கல்விக் கொள்கையன்று. அவர்களை அழிக்கும் கல்விக் கொள்ளை. தேனிலே நஞ்சைக் கலந்தல்ல, நஞ்சில் தேனைக் கலந்து அது உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை - 2020 என்ற பெயரில் பார்ப்பனியத்தையும் தனியார்மயத்தையும் ஒரு சேர மக்கள் மீது திணிப்பதன் மூலம் மீண்டும் பார்ப்பனிய மற்றும் சுரண்டல் பேர்வழிகளுக்கு ஏற்ற அடிமைகளை உருவாக்க அடிகோலுகிறது. இதைத் தடுக்காமல் போனால் மக்கள் இன்னும் பல தலைமுறைகள் சுயமரியாதை அற்ற அடிமைக் கூட்டமாக மந்தைகளைப் போல் வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது.
- செ.கார்கி
மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ளவர்கள் மக்களுக்கு இலவசமாக தகுதியான பாடத்திட்டத்தை வழங்காமல் சமச்சீர் கல்வி என்ற பெயரில் குழந்தைகளின் கல்வித்திறனை ஒரு புறம் நாசமாக்கி விட்டு மறுபுறம் தனியார் பள்ளிகளில் தரமான கல்வியை நமக்குப் பணத்திற்கு விற்கிறார்கள்.
இதையெல்லாம் மறைக்கத்தான் இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, தமிழ் அழிந்து விடும், தமிழன், தமிழ் மொழி, …… அது…. இதுவென… ஊடகங்களின் மூலம் விவாதங்களை நடத்தி மக்களைப் பலரும் திசைத் திருப்புகின்றனர ்.அரசு பள்ளிகளில் இலவசமாக கிடைப்பது தரமற்ற கல்வி, தனியாரிடம் சென்றால் தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலைக்கு மக்களையும், தமிழகத்தையும் கொண்டு வந்து விட்டவர்கள் புலம்புகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல், மருத்துவ கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அனைத்தும் யாருக்குச் சொந்தமோ, அவர்களே புலம்புகிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையால் பலருக்கும் காமதேனுவாக இருக்கும் கல்வி வியாபாரம் மொத்தமும் கிட்டத்தட்ட காலியாகி விடும். கல்வி தந்தைகள், கல்விக் கொள்ளையர்களின்… நிலை அவலமாகிவிடும்.
புதிய கல்விக் கொள்கையில் உள்ள பரிந்துரைகளின் படி-
ஆசிரியர் தயாரிப்பு திட்டம் மிகக் கடுமையானதாக இருக்கும். உயிர் துடிப்புள்ள பல்துறை உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும். வகுப்பு நிலை - குறித்த , பாடங்கள் குறித்த பல்துறை நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற நான்காண்டுகள் ஒருங்கிணைந்த இளங்கலைக் கல்வி பாடத் திட்டம் ஆசிரியராவதற்கு முக்கியமான தகுதியாக இருக்கும். தரம் குறைந்த மற்றும் செயல் படாத கல்வியியல் கல்லூரிகள் மூடப்படும்.
இனிமேல் பி.எட் படிப்பு அதாவது ஆசிரியர் கல்லூரி என்று நாலு குட்டிச்சவரை வச்சிக்கிட்டு, எழுத்து பிழையில்லாமல் எழுத கூட தெரியாதவர்களை ஆசிரியராக்க முடியாது. பாடத்திட்டம் சல்லடையாக சலித்து எடுத்தவர்களைத்த ான் ஆசிரியராக்கும். தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்லூரிகளை வைத்து இலட்சங்களையும், கோடிகளையும் அள்ளுபவரின் நிலை இதனால் பரிதாபமாகிவிடும்.
ஆசிரியர்கள் உறுதியான வெளிப்படையான முறைகள் மூலம் வேலைக்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள். பதவி உயர்வுகள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களின் பணி மதிப்பீடு செய்யப்படும். கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆகவும், ஆசிரியர் பயிற்சி பயிற்றுனர் ஆகவும் அவர்களுக்கு வழி ஏற்படுத்தி தரப்படும்.
இந்த பரிந்துரைகள் படி இனி தனியார் பள்ளிகளில் தகுதியற்றவர்களை ஆசிரியராகப் போட்டு மாதம் ஐந்தாயிரம் சம்பளம் கொடுக்கும் அவல நிலை நடக்காது.
சரியான கல்வி தகுதியும் அறிவாற்றலும் உள்ளவர்கள் மட்டுமே ஆசிரியர் கல்வியை முடித்து வெளிவர முடியும். அப்படி ஆசிரியர் பயிற்ச்சியை முடித்தவர்களை மட்டுமே தங்களது பள்ளியில் ஆசிரியர் பணிக்கு வைக்க முடியும். முறையான ஆசிரியரை வேலைக்கு அமர்த்தினால் அரசாங்க பள்ளிகளில் கொடுக்கும் சம்பளத்தை கொடுத்தால் மட்டுமே வேலைக்கு வருவார்கள். தகுதியற்றவர்களை வேலைக்கு வைத்தால் அரசே அந்த பள்ளியை மூடி விடும்.
இரண்டாவதாக பத்தாவது வரை ஆல்பாஸ் என்று ஆசிரியர் வேலைக்கு வந்தவர் வகுப்பில் படுத்து தூங்க முடியாது. குறிப்பிட்ட இடைவெளிகளில் அதாவது உதாரணமாக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அவர்களின் வேலையை பணி மதிப்பீடு மற்றும் அவர்களின் திறனை தேர்வு செய்யும் போது ஒரு ஆப்பு கட்டாயம் இறங்கும்.
இதனால் தான் சில அமைப்புகளும், கல்வி தந்தைகளுடன் சேர்ந்து கொண்டு புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கின்றன
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சுயேச்சையான கல்வியாளர்களை கொண்ட குழுவிடம் பாடதிட்டங்களை மாற்றி அமைக்கும் அதிகாரம் வரும் போது தங்கள் இஷ்டப்படி பொய்யான தகவல்களை(பெரியா ருக்கு யுனெஸ்கோ விருது, வைக்கம் வீரர் முதலிய பிராடுத்தனங்கள் ) புரட்சி வரலாறு எனக் குழந்தை பருவத்திலேயே திணிக்க முடியாது. இதனால் போலி அரசியல் இனி இங்கே எடுபட முடியாமல் போகும்.
கொடுமையான விஷயம் என்னவென்றால்…. மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ளவர்கள் மக்களுக்கு இலவசமாக தகுதியான பாடத்திட்டத்தை வழங்காமல் சமச்சீர் கல்வி என்ற பெயரில் குழந்தைகளின் கல்வித்திறனை ஒரு புறம் நாசமாக்கி விட்டு மறுபுறம் தனியார் பள்ளிகளில் தரமான கல்வியை நமக்குப் பணத்திற்கு விற்கிறார்கள்.
இலவசமாக நமது குழத்தைகளுக்கு கிடைக்க வேண்டிய தரமான கல்வி, மூன்றாவது மொழியறிவை தடுத்து, அதை பணம் உடையவர்கள் மட்டும் அவர்களிடம் விலை கொடுத்து வாங்குவதை சட்டப்பூர்வமாக் கி வைத்துள்ளனர்.
மூன்றாவது மொழியை கற்கும் அளவிற்கு நமது குழந்தைகள் இல்லை என்று ஒரு அறிவற்ற காரணத்தை முன்வைக்கின்றனர ் சிலர்.
இதை விட முட்டாள்தனமான வாதம் வேறு எதுவும் கிடையாது. பணக்காரக் குழந்தை மூன்று மொழி படிக்கும் போது குப்பன், சுப்பன் வீட்டு குழந்தை படிக்காதா…? பணக்காரர்களின் குழந்தைகளுக்கு மட்டும் கூடுதலான அறிவை வைத்து ஆண்டவன் படைக்கிறானா என்ன….?
தொழிற் கல்வி மற்றும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வையும் கடுமையாக எதிர்க்கின்றனர் இந்த நாசகாரர்கள். அதற்கு இவர்கள் கூறும் காரணம் தமிழகத்தின் சமச்சீர் பாடத்திட்டத்தில ் படித்த மாணவர்கள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில ் படித்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்பது.கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா இதை சொல்ல….? அப்படியானால், இவர்கள் கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டம் வெறும் குப்பை என்று அவர்களே மறைமுகமாக ஒத்துக் கொள்கிறார்களா?
You will not have any answers.That is why,you are side tracking the issue by criticizing the present education system in TN.Your ire against Periyar is understandable because he was the one who made us to think and question. Vaikom is a historical event and you cannot just wipe it out by your cry.You should be ashamed about the circumstances leading to Periyar's fight there. NEP's theme is to make students dumb.They cannot even select their desired subject for research.
They are not imaginary devils. Real ones. For people like you flawless education system is the so called samacheer kalvi. No sane people will bring that. TN is going deep and deep down because of mindless corruption and nepotism by the local dravidian politicians. Vaikom is a historical event no doubt but periyar's role is not a significant one as portrayed by these local TN politicians.
The real vaikom heroes are Madhavan Nair and kelappan. Not periyar. And even if his role is is considered to be a significant one, it is the Kerala people who should recognise and appreciate. And they don't consider it to be significant. Don't spread canards. Periyar is only a rebellion and not great thinker.
Keetru moderator should take care of it.
There is one particular group in this country who don't want to give the rightful credit to Periyar for his Vaikom struggle..
Periyar was the only satyagrahi who was imprisoned twice during the struggle.That too,once that was rigorous imprisonment for which Rajaji himself recommended to Dewan of Travancore to lighten the prison terms.
Periyasamy says that Kerala people have not recognized Periyar's part in the struggle. This statement of him is far from truth.
"He won the life long respect of Ezhavas following his role in the Vaikom Satyagraha (1924-25)'-wrot e Prof A.R.Venkatachal apathy in his book,"Tamil characters" .A.R.Venkatachal apathy is currently writing the biography of Periyar. Venkatachalapat hy taught at Manonmaniyam Sundranar University,Univ ersity of Madras and University of Chicago.He was awarded the VKRV Rao Prize for History in 2007.
T.K.Madhavan,influential Ezhava leader,presente d a report in the Kakinada meet of the Congress party in 1923 citing the discrimination that the depressed castes people were facing in Kerala. T.K.Madhavan ,K.Keliappan,Ve layutha Menon and others in the Committee formed for the purpose ,started the Satyagraha on 30-3-1924 with active support of Kerala Pradesh Congress Committee.The KPCC wrote to Periyar pleading with him to lead the Satyagraha. As he was then the President of Tamil Nadu Congress Committee,Periy ar handed over temporary charge to Rajaji. He arrived at Vaikom with his wife Nagammai on 14-4-1924.They were arrested immediately and imprisoned for participation.T ill November 1925 ie end of the Satyagraha ,Periyar provided unrelenting leadership.He was part of every consultative meeting,peace committee and in the campaign.He was part of 8 member delegation constituted to meet the Dewan. He countered orthodoxy through rationality.He used wit and folk logic to punch holes in the argument of the orthodox.He generated mass support in the villages around Vaikom. Periyar's campaign tour stretched to Trivandrum and even further to Nagercoil. During the Satyagraha,ever y major personality who came to Vaikom met with Periyar. This included Swami Shraddhananda of the Arya Samaj.Gandhi,Ra jaji and Sree Narayana Guru. And only because of his active participation,P eriyar was called "Vaikom Veerar". E.V.R.Periyar Memorial Park with his statue is there in Vaikom. Periyasamy says that Periyar is not a great thinker. He is talking so low about the Dravidian ideologue. Periyar wrote many books particularly against superstitions, social ills,Puranas and epics. His books were translated in Hindi and sold in Bihar and other northern states.The questions raised by him about the characters in Ramayana in his book "Ramayana Pathirangal"wer e not replied by any one until today.
I don't think so. It is another canard similar to unesco award for him. Even veeramani wrote a book on unesco award to Periyar. TN These Dravidian parties and their acolytes spin stories for their political survival. The real Vaikom heroes are Madhavan and Kelappan. Not Periyar. I do have great respect for Periyar as I belong to a middle caste. But I can't go with canards like unesco award to him. These Dravidian parties are corrupt to the core. They are no way representatives of Tamil people of of this land. Samacheer kalvi is a garbage deliberately brought by the DMK politicians with selfish motives. That ruined the academic standard for next ten years. You are supporting it shamelessly by becoming a spin doctor.
-NUNIPPUL MEYBAVARE! You don't have the patience to read the history of Vaikom event (1924-25) forget about reading the nation's history.
-I am quoting actual facts from the history of the event
-//Do Kerala historians recognize Periyar's role in Vaikom struggle?//
-
-Yes,my friend,Kerala historian late T.K.Ravindran (24 works and 68 publications),f ormer Vice Chancellor of Calicut University ,author of the book,"Eight furlongs of Freedom" observed,"Periy ar's arrival gave a new life to the movement"
-When Kerala leaders asked for Gandhi's permission to make Satyagraha an all-India affair,Gandhi refused saying volunteers from Tamil Nadu would keep it alive.The British Resident in Kerala said in his report to the Government of Madras,"In fact,the movement would have collapsed long ago but for the support it has received from outside Travancore"
-From available evidence,Periya r visited Vaikom seven times.Of the 114 days that he devoted to the struggle,he languished in prison for 74 days.
-Among the Satyagrahis who were jailed with him,he was the only person who was not treated as political prisoner.He was under vigorous imprisonment,ti ed with iron chains and provided with jail clothing in spite of protests by Rajaji and fellow prisoner Kesava Menon.
-The indignities continued till he was released along with other prisoners when the minor king,Chithira Tirunal ascended the throne.
-On 10-9-1924,Periy ar returned to Erode,when he was again arrested,but this time by the British Indian Police for a seditious speech delivered earlier.It was but a ploy to keep him away from Vaikom.
-As President of TNCC,he arranged for a contribution of Rs1000/- to the movement
-Gandhi consulted him during his visit to Vaikom. Periyar
received Gandhi at Erode on 8-3-1925 on his way to Vaikom joined him at Varkala on 12-3-1925.He was present in the closed door meeting between Gandhi and Narayana Guru.Gandhi had consulted him before his all important meet with Maharani Regent.
-Following an agreement between Gandhi and the police,the prohibition order against Periyar,which had been in place for over a year was withdrawn.Gandh i wrote in Young India (23-4-1925) "The readers will be glad to learn that the Travancore Government has withdrawn the prohibition order against Sri Ramaswamy Naicker"
-Periyar was the only leader from outside Kerala who participated in the Vaikom struggle.He was not only invited for the victory celebrations but was also asked to preside over the meeting.
RSS feed for comments to this post