எந்த 1925-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தோற்றம் பெற்றதோ, அதே 1925இல்தான், ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கம் - ஆர்.எஸ்.எஸ். தோற்றம் பெற்றது.

அதே 1925இல், காங்கிரசில் இருந்த ஈ.வெ.ரா. “குடிஅரசு” கிழமை ஏட்டைத் தொடங்கினார்.

1925இல் தோற்றுவிக்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சி, இந்தியாவில் பொதுவுடைமை மலர - இந்திய சமுதாய அமைப்பை ஆய்வு செய்திடவும், அதற்கேற்ற வேலைத் திட்டத்தை - வியூகத்தை அமைத்துச் செயல் படவும் முனையவில்லை. அதற்கு மாறாக “சோவியத் துப் பாதையை” ஒருபிரிவினரும், “சீனத்துப் பாதை யை” இன்னொரு பிரிவினரும் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடினர். இப்போது அக்கட்சி கள் எங்கே இருக்கின்றன என்று தேட வேண்டிய ஈன நிலைமை தோன்றிவிட்டது.

30-8-1945-இல் மிகவும் துல்லியமாகவே ஈ.வெ.ரா. திராவிட நாட்டுப் பிரிவினைக் கோரிக்கை யை முன்வைத்தார். ஆனால், அது உயிர்களை ஈந்து திராவிடருக்கான ஓர் தனிச்சுதந்தர அரசை நிறுவுவது தான் என்பதை, உடனிருந்த படித்தவர்களுக்கும் தொண்டர்களுக்கும் புரிய வைக்க ஏற்ற பணிகளை அவர் செய்யவில்லை; திராவிட மொழிகளைப் பேசுகிற மற்ற பகுதிகளில் அக்கொள்கையைப் பரப்பி, அவர் களையும் ஏற்கச் செய்யவில்லை.

அதனால்தான் திராவிடர் கழகத்திலிருந்து 1949இல் பிரிந்த படித்த கூட்டத்தாரும், ஆர்வலர்களும் வாக்கு வேட்டைக்குப் போகிற வரையில் தூக்கிப் பிடித்த நாட்டு பிரிவினைக் கொள்கையை - 1963இலேயே காற்றில் பறக்கவிட்டு விட்டனர். அவர்களும், எப்போதும், இந்தியா முழுவதிலும் சென்று செயல்படவில்லை.

“பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் - திராவிடர் இயக்கம் அனைத்திந்திய இயக்கமாக உருவாக்கப்பட வேண்டும்” என எழுதியும் பேசியும் செயல்பட்ட தந்தை பெரியார், அவர் காலத்தில் அதற்கான எந்த முயற்சி யையும் செய்யவில்லை.

ஆனால், மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக் குப்பிறகு, 1-11-1956 முதல் அவர் மறையும் வரையில் “தனிச்சுதந்தரத் தமிழ்நாடு வேண்டும்” என்பதில் உறுதியாக இருந்தார்; அதை அடைந்திட இலட்சக் கணக்கான தமிழர்கள் சாகத் துணிய வேண்டும் என, 9-12-1973 மாநாட்டில் பேசினார்.

அவர் மறைவுக்குப் பின்னர், அவசர காலக் கொடு மைக்கு ஆளான திராவிடர் கழகம், இந்திய ஒருமைப் பாட்டுக் கொள்கையை அதிகாரம் வாய்ந்த ஒரு தீர்மானம் வழியாகவே ஒத்துக்கொண்டது.

இவ்வளவு வரலாற்று உண்மைகளையும் மனத் தில் கொண்டு, நாம் எல்லோரும் இந்துத்துவக் கொள் கைக் காப்பாளர்கள் 1925 முதல் 1948க்குள் என்ன செய்தார்கள்-1948 முதல் 2000க்குள் எதை அடைந் தார்கள்-2014இல் எதை அடையத் திட்டமிடுகிறார்கள் என்பதை உன்னிப்பாக ஆராய வேண்டும்.

விநாயக் தாமோதர சாவர்க்கர் தந்ததே, “இந்தியா வை இந்து இராச்சியமாக அமைக்க வேண்டும்” என்கிற கொள்கை. அதை அடைந்திட ஏற்ற அமைப் பாக ஆர்.எஸ்.எஸ். என்பதை உருவாக்கியவர் ஹெக்டே வர். இவர்களும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரும் காந்தியாரை ஒழிப்பதே உடனடி வேலை என்று முடிவெடுத்தனர். ஏன்?

1. காந்தியார் தன்னுடைய அன்றாடப் பிரார்த் தனைக் கூட்டத்தில் பகவத் கீதையைப் பரப்பினார்; நால்வருணப் பாதுகாப்பையும் பரப்பினார்; அவற்று டன், “ரகுபதி ராகவ ராஜாராம் பதித்தபாவன சீத்தா ராம்! ஈஸ்வர அல்லா தேரேநாம்” என்று, அல்லாவை நம்பும் இ°லாமியர்களையும் இணைத்துக் கொண்டு பாடினார்.

2. 1947இல் பாக்கிஸ்தான் பிரிந்த பிறகு, இந்திய அரசு பாக்கிஸ்தானுக்குத் தரவேண்டிய சொத்துப் பங்கை நாணயமாகத் தந்துவிட வேண்டும் என்று இந்திய அரசுக்கு அழுத்தம் தந்தார்.

3. 1947 நவம்பரில் சென்னை மாகாண அரசில், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், முதன்முதலாக பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் தனி இடஒதுக்கீடு தந்த தை ஆதரித்தார்; அதை எதிர்த்த சென்னைப் பார்ப்ப னர்களை நேரில் அழைத்துக் கடிந்து கொண்டார்.

இத்தகைய காரணங்களால்தான், உடனே, 1948 சனவரி 30இலேயே, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் காந்தி யாரைக் கொன்று போட்டார்கள். அதுதான் அவர்கள் கண்ட முதல் வெற்றி.

பின்னர் 1948 பிப்ரவரியில் பூனாவில், இரகசியக் கூட்டத்தைக் கூட்டினர், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். பார்ப்பனரின் நல்லெண்ணத்துக்கு ஆளாகியிருந்த மகாத்மா புலேவின் பெயரன் அக்கூட்டத்துக்குப் போயிருந்தார். அங்கே அவர்கள் என்ன முடிவெடுத்தார்கள் என்பதை அவரே பின்னாளில் வெளிப்படுத்தினார்.

என்ன முடிவுகள் அவை?

1. கி.பி. 2000க்குள் இந்தியாவில் இராமராஜ் யத்தை அமைக்க வேண்டும்.

2. அதற்கு வசதியாக, இந்தியச் சமூகத்தின் எல்லா அங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஊடுருவ வேண்டும் (Infiltration)  என்பவையே அம்முடிவுகள்.

ஷியாம் பிரசாத் முகர்ஜி, முதன்முதலாக ஜம்மு-காஷ்மீரை இந்தியாவோடு சேர்த்திட அப்போது முதலே முயற்சித்தார்.

1996க்குப் பிறகு ஓர் ஆறு ஆண்டுகள் தென் னாட்டுத் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.வையும்- வடநாட்டு லோகியாவாதக் கட்சிகளையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, இந்திய ஆட்சியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தி னர் பிடித்தார்கள்.

1. இராமராஜ்யம் அமைத்திட அடிகோலும் தன்மை யில், 6.12.1992இலேயே - ‘இராமர் பிறந்த இடத்தின் மேல் கட்டப்பட்டதே பாப்ரி மசூதி’ என்று கூறி, பட்டப் பகலில் வன்முறை செய்து, அதை இடித்தார்கள். அங்கே, தற்காலிகமாக இராமர் கோவிலை அமைத்தார்கள். அன்றைய காங்கிரசுப் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அதற்கு உடந்தையாக இருந்தார்.

2. பாரதிய சனதாக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி பல பல்கலைக்கழகங்களில் சோதிடம் பார்ப்பது, புரோகி தச் சடங்குகள் செய்வது இவற்றைக் கல்வித் திட்டத்தில் இணைந்த பாடங்களாக வைத்திட வழிவகுத்தார்.

தமிழ்நாட்டில் நேற்று மதுரை காமராசர் பல்கலை யிலும், இன்று அண்ணாமலைப் பல்கலையிலும், வடநாட்டில் பல பல்கலைக்கழகங்களிலும் சோதிடம், புரோகிதம் கற்பித்தல் இவை இப்போது பாடங்களாக உள்ளன.

இப்படி, அரசு மூலம் அவர்களின் குறிக்கோளில் -குறிக்கோளை அடைவதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதாவது உண்மையான அதி காரம் பெற்றதோர் அரசாக இருக்கிற இந்திய ஆட்சியைக் கைப்பற்றினால்தான், இராம இராஜ் யம் - இந்துக்களின் பேரரசு அமைக்க முடியும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை எதிர்க்கும் எவரும் இதில் தெளிவாக இல்லை.

அதனால்தான், 543 பேர்கள் தேர்தல் மூலம் வரும் நாடாளுமன்ற மக்கள் அவைக்கு, 282 ஆர்.எஸ். எஸ்.காரர்கள் - பாரதிய சனதாக் கட்சியின் பேரில் வெற்றி பெற்று இந்தியாவில் தம் கட்சி ஆட்சியை அமைத்துக் கொண்டனர். அவர்களின் தொங்கு சதைக் கட்சிகளைச் சார்ந்த 58 பேர் அந்த ஆட்சியைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள்.

இன்றையத் தலைமை அமைச்சர் நரேந்திர தாமோதரதாஸ்  மோடி ஒரு புடம்போட்ட ஆர்.எஸ்.எஸ். காரர் என்பதை, 2012, ஏப்பிரலில் நானே, குசராத் தில், காந்திநகர் தலைமைச் செயலகத்தில், நேரில் பார்த்தேன்.

வெள்ளையன் வெளியேறிய பிறகு - விடுதலை பெற்ற இந்தியாவில் பிறந்த ஒருவர் - அதாவது மோடி தலைமை அமைச்சராக ஆகி இருக்கிறார். இவர், ஆட்சியைக் கைப்பற்றி, பழைய பா.ஜ.க. பெருச்சாளி களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்திய ஆட்சி தன்னிடமும் - ஆளும் பாரதிய சனதாக் கட்சி தன் கை யாளான அமித் ஷாவிடமும் என்று, தன் நிலையைக் கெட்டிப்படுத்திக் கொண்டார்.

அவர் ஆர்.எஸ்.எஸ். பாதையிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக விலகிப் போகிறார் என்றே ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நினைக்கிறார்கள். இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்?

ஆர்.எஸ்.எஸ்.ஸின் மூத்த தலைவர்களும், அதன் துணை அமைப்புகளான விசுவ இந்து பரீஷத், சுதேசி ஜாக்ரன் மஞ்ச் முதலான அமைப்பின் முக்கியத் தலைவர்களும் 400 பேர்களுக்குமேல், 2014 ஆகத்து 1 முதல் 4 வரை, போபால் நகரத்தில் “அதிரடிச் சிந்தனை” (Loud Think Tank-Chintan Baithak )க் கூட்டத்தை நடத்தினார்கள்.

அக்கூட்டத்தில், என்ன முடிவெடுத்தார்கள்?

1. “மோடி தலைமையிலான இன்றைய இந்திய அரசு, ஆர்.எஸ்.எஸ். பாதையிலிருந்து விலகிப் போவ தாகத் தெரிகிறது. எனவே மோடி அரசின் மீது ஆர்.எஸ்.எஸ் .சின் பிடியை இறுக்க வேண்டும்.”

2.  இந்துக்களை மதமாற்றம் செய்வதும், அதற்குப் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதுமே இன்று நாட்டை எதிர்நோக்கும் சிக்கல்கள்;

3. இந்துக்கள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளாவதை அரசு தடுக்க வேண்டும்; இராமர் கோவில் கட்டுவது பற்றி அரசின் நிலைப்பாடு என்ன என்பதை உடனே அறிவிக்க வேண்டும்; அரசமைப்பிலிருந்து விதி 370 நீக்கப்பட வேண்டும். இவற்றை இனியும் அரசு தாமதப்படுத்தக்கூடாது.

இவற்றைப் பற்றி, அக்கூட்டத்தில் விசுவ இந்து பரீஷத் தின் பிரவின் தொகாடியா கடுமையாகப் பேசினார்.

4. புதிய அரசு அந்நிய நேரடி முதலீட்டை அதிகப் படுத்தியதையும், மலடானவிதைகள் (GM Crops)  விதை விதைப்பை ஊக்குவிப்பதையும் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் கண்டிக்கிறது என்றெல்லாம் அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

அதாவது, “ஆர்.எஸ்.எஸ். கிழித்த கோட்டைத் தாண்டாதே” என்று அவர்கள் பிரதமர் மோடி யை எச்சரிக்கிறார்கள்.

அடுத்து, 10.8.2014 அன்று, புவனேசுவரத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் என்ன பேசினார்?

“அனைத்து இந்தியர்களின் கலாச்சார அடை யாளமே இந்துத்துவாதான். இங்கிலாந்து நாட்ட வர்களை இங்கிலாந்துக்காரர்கள் என்றும், ஜெர்மனி நாட்டவரை ஜெர்மானியர்கள் என்றும், யு.எஸ்.ஏ. நாட்டவரை அமெரிக்கர்கள் என்றும் அழைக்கும் போது, இந்துஸ்தானில் இருப்பவர் களை ஏன் இந்துக்கள் என்று அழைக்கக் கூடாது” என்று நெஞ்சுரத்துடன் பேசியிருக்கிறார் (“தினத் தந்தி” 12.8.2014, சென்னை).

இதே கருத்தை மிகவும் வலியுறுத்தி, 17.8.2014 இல் மும்பையில், விசுவஇந்து பரிஷத்தின் பொன் விழாக் கூட்டத்தில், அதே மோகன் பகவத் விரிவாகப் பேசியுள்ளார்.

இந்த இந்துத்துவ வெறிக் கருத்தை - இந்து மதத்தைக் காப்பாற்றவே பாடுபடுபவர்களும், இந்தியா என்பது ஒரே நாடு என்று நினைத்து அதில் பிடிவாத மாக இருப்பவர்களும் கண்டிக்கிறார்கள்.

இதற்கு மாறான கருத்துள்ளவர்களும் கண்டிக் கிறார்கள்.

இதற்கு ஒரே மாற்று என்ன? இந்தியா என் பது ஒரு நாடு அன்று; ‘இந்து மதம்’ என்று ஒரு மதம் இல்லை என்பது மட்டுமே ஆகும். இதை இந்திய அரசில்-இந்திய ஆட்சியில் அமருகிறவர் கள் மட்டுமே செய்ய முடியும்.

இன்று ஆர்.எஸ்.எஸ். செய்கிற இதைத்தான், அன்று அடாஃப் இட்லர் செய்தான்.

அவனுடைய கொள்கைச் சின்னம் “ ஸ்வஸ்திக்”; ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைச் சின்னமும் “ ஸ்வஸ்திக்”. இட்லருடைய கொள்கை முழக்கம் - “செருமானியர் மட்டுமே தூய ஆரிய இரத்தம் ஓடுகிற ஆரியர்கள் - செருமானியர்தான் உலகத்தையே ஆளவேண்டும்  (We, the Germans have the most superior Aryan blood. We want to rule the whole world)” என்று தான் இட்லர் கொக்கரித்தான், 1930களில்.

இன்று பச்சைச் சூத்திரர்களான அத்வானி, வெங்கய்யா, பிரதமர் நரேந்திர மோடி போன்றவர்கள், வருண வேறுபாடு காக்கும் இந்துத்துவத்துக்கு அடிமை களாகி, மேலும் வடஇந்தியாவிலும், தென்னிந்தி யாவிலும் உள்ள சூத்திர அடிமைகளையும், ஆதி சூத்திர அடிமைகளையும் பதவியைக் காட்டி - பணத் தைக் கொட்டிக் கொடுத்துக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு, இந்து மதத்தையும், இராமாயண பக்தியையும், மகா பாரதச் சிந்தனையையும் காப்பாற்றிடவும், இந்து ராஷ்டிரம் என்கிற இராம ராஜ்ஜியத்தை அமைத்திட வும், அதை நிலைக்க வைக்கவும், அவர்கள் எல்லாம் செய்கிறார்கள்.

இவற்றைப் பற்றி, மார்க்சை, லெனினை, பெரி யாரை, அம்பேத்கரை, லோகியாவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வெறும் வாய்ச்சவடால் செய்வதும், பரப்பு ரையும், விளக்கவுரையும் செய்வதும் போதும் என்று நினைக்கிற எல்லோரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இவை பற்றிச் சிந்திக்க வேண்டும்.

வெகுமக்களின் எதிரிகளான இந்துத்துவ வாதிகள் தங்களின் இலக்கை மிகச் சரியாகவே புரிந்திருக்கிறார்கள், வெகுமக்களின் விடுதலை யைக் கோரும் நாம் சரியாகப் புரிந்து கொள்ளுவோம்!

Pin It