இன்றைய நிலையில், 99 விழுக்காட்டு பேர் தேர்தலில் போட்டியிட விரும்புவது, நாம் கட்டும் வரிப்பணத்தைத் திட்ட மிட்டுத் திருடவே!

இவர்கள், ஏன் தேர்தலுக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்து சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினராக ஆக வேண்டும்? மனதைத் தொட்டுச் சொல்லட்டும் - எனக்கு இவ்வளவு சொத்து, பணம், கடன் உள்ளது; என்மீது எந்தக் குற்றமும் இல்லை; எனக்கு அரசியல் சட்டம் தெரியும்; நான் மக்களுக்கு நலத் திட்டங்களைச் செய்வேன்; சட்டமன்றத்தில் உறுதிமொழி எடுத்ததைக் கடைப்பிடிப்பேன்; எனக்கு எந்தப் பாதுகாப்பும் வேண்டாம் என்று கூறுவார்களா?

பச்சைத் தமிழன் மாண்புமிகு காமராசர் அவர்கள் கட்டிய சாத்தனூர் அணைக்குப் பிறகு எரையூர் ஏரிக்குப் பிறகு, தமிழகத்தை ஆண்ட கட்சிக்காரர்கள் எவரும் அணைகட்ட வில்லை. நீர் வழிகளில் சிறு, சிறு தடுப்புகளைக் கட்டி நீரைத் தேக்கியது தவிர, வேறு ஒன்றுமில்லை. காமராசர் காலத்தில் இருந்த ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் பங்கு போடப்பட்டு, அவருக்குப் பின்னர் ஆண்டவர்கள் விற்றுக் கொள்ளையடித்துள்ளனர்.

நிலத்தடி நீரையும், விவசாயத்தையும் காப்பாற்றாத கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்! ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் ஏரிகளைக் காப்பாற்றி மீட்டுத் தரும் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்!

என் சாதியை இழிவுபடுத்திவிட்டான்; என் சாதிக்காரனைக் கொன்றுவிட்டான் என்று கூறும் கட்சிகளையும் விரட்டுங்கள்! சாதிப் பாகுபாடு இன்றி, மக்கள் நலன் மட்டுமே செயல் படுத்துவேன் என்று கூறும் கட்சிகளை முன்னிலைப்படுத் துங்கள். சாராயம் கொடுத்துச் சிந்தனையைச் சிதைத்தவர் களையும், திரைப்படங்களில் நல்லவர்போல் நடித்த கூத்தாடி களையும் தேர்வு செய்யாதீர்கள்!

இப்பொழுது உள்ள அரசியல் கட்சிகள் வேலை தரவும், இடமாற்றம் செய்துதரவும் கையூட்டு இல்லாமல் செய்தார் களா? வாக்காளர்களே கையூட்டு இல்லாத அரசை அமைக்க அரசியல் சார்பற்ற அமைப்புகள் கூறும் கருத்தினைக் கேளுங்கள்.

வாக்குப் போடப்போகும் நீங்கள், வாக்கை விற்காமல், மது அருந்தாமல், அற்பப் பரிசுகளை (மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி, ஆடு, மாடு, பன்றி) இவற்றை வாங்காமல் சிந்தித்து வாக்களியுங்கள். சிந்திக்க வில்லையென்றால், உங்கள் தலையில் நீங்களே மண்ணைப் போட்டுக் கொண்டதற்கு ஒப்பாகும்.

Pin It