முடிந்தது இலண்டன் மண்ணில்
முறையாக ஒலிம்பிக் போட்டி
இழந்தது இந்தி யத்தார்
எண்ணத்துக் கோட்டை; எல்லாம்
நடந்தது; தங்கம் வெல்லும்
நம்பிக்கைக் கீற்று கூட
ஒடிந்தது; நம்ஊழல் பேர்
ஒளிர்ந்தது உலகமெங்கும்
‘காமன்வெல்த்’ போட்டி ஊழல்
கண்டோம்நாம்; எதிலு மேநம்
மாமன்கள் மச்சான் கள்தாம்
மந்திரி, அதிகாரி என்று
‘nக்ஷமமாய் உள்நு ழைந்து
தில்லியை ஆள்வர்; எங்கும்
‘ஹோமத்தீ’ ஓங்க வேண்டும்
ஒலிம்பிக்தீ யார்க்கு வேண்டும்!
அண்டத்தில் நூற்றி ருபது
கோடியாய் மக்கள் கண்டும்
குண்டூசி அளவி லான
டுனீசியா நாடு கூட
கண்டோமே தங்கம் வெல்ல!
கவலையை யார்க்குச் சொல்ல
மண்டையர் மன்மோகன் - ஆல்
முடியுமா புரிந்து கொள்ள?
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற
ஒவ்வொரு நாட்டின் பேரும்
துலக்கியோர் கறுப்பி னத்தின்
தொல்குடி மக்கள் அன்றோ?
தலைக்குனிவு அகன்று வெற்றித்
தடம்காண இங்கும் இந்த
இலக்கினைக் கொள்ள வேண்டும்
இனியேனும் வெல்ல வேண்டும்!