நான் ஒரு நூலை
வாசித்துக் கொண்டிருக்கும் போது
ஒரு பூனை ஏறி அமர்ந்தது
அந்த பக்கங்களில்
ஒரு தந்தி
தலை தூக்கி நுழைந்துவிட்டது
என் பொந்திற்குள்.
இரண்டும் கலத்தில்
காளபம் நிகழ்த்தும்போது
அடித்துக் கொண்டு போயின
என்னுள் புகுந்த வெள்ளத்தில்.
தொடர்கிறேன் என் வாசிப்பை
அந்த நூலுக்கு
நன்றி சொல்லியடி.
--
எப்போது வருவானோ
தெரியவில்லை.
என்
பகலும் இரவும்
கேட்பாரற்று கிடக்கிறது
படுக்கையறை அலமாரியில்
காத்திருக்கிறது அவனுக்காக
என்னைப் போல
ஆணுறைகள்.