விளக்குப் பூச்சிகளை
விழுங்கிப் பிழைக்கும்
பல்லிகளின் நடுவே
வழி தொலைத்த
வண்ணத்துப் பூச்சியன்று
கடக்க எத்தனிக்கையில்
விழிகளை விரிய வைக்கும்
அதன் அழகின் திசையில்
பல்லிகளின் நாக்குகள் நீண்டன.

தப்பித்தலின் கணமொன்றில்
வண்ணத்துப்பூச்சியின்
வானத்தில் ரத்தம் தெறித்தது.

கிழிந்து கிடந்த சேலையை ஒத்திருந்த
மிஞ்சிக் கிடந்த
வண்ணத்துப்பூச்சியின் சிதறல்களைச்
சுமந்து திரிகின்றன எறும்புகள்.

- அதங்கோடு அனிஷ்குமார்

Pin It