கோபுர கலசத்தின் உச்சியில்
கடவுளின் கடவுளாய்
அமர்ந்திருக்கிறதோர் பறவை
கடவுளை
ஆசீர்வதித்ததின்
அடையாளமாய் பிரசாதமென
எச்சமிட்டு பறக்கிறது
மின் கம்பங்களின் எண்ணிக்கைக்கு
இணையாகக்கூட
மரங்கள் நடப்படாத நகரத்தில்
பறவைகள் இறங்குவதில்லை
பறவைகளின் சிறகசைவில்
சுழலும் காற்றில் மாசு நீங்கக்கூடும்
தங்க நாற்கர சாலைகளால்
இணைக்கப்படும் இந்நகரத்தின்
பழைய வரைபடத்தில்
பறவைகள்
இரையருந்திப் பறக்கும்
மாபெரும் மண் கிண்ணத்தைப்போல்
குளமொன்று இருந்தது
பெரும் மழைக்காலங்களில்
குளம்தேடி நீர்சூழ
நகராத காங்கிரிட் கப்பல்களாய்
மிதக்கும் குடியிருப்புகள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- தென்பாண்டியன்
- பிரிவு: புதுவிசை - ஆகஸ்ட் 2005